Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 78 அந்நபா
மொத்த வசனங்கள் : 40
அந்நபா – அந்தச் செய்தி
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

78:1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?
عَمَّ يَتَسَآءَلُونَ

78:2.
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

78:3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!26
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

78:4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
كَلَّا سَيَعْلَمُونَ

78:5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

78:6.
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

78:7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26
وَٱلْجِبَالَ أَوْتَادًا

78:8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

78:9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

78:10. இரவை ஆடையாக்கினோம்.
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

78:11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

78:12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

78:13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

78:14.
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

78:15.
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

78:16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார்மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.26
وَجَنَّـٰتٍ أَلْفَافًا

78:17. தீர்ப்பு நாள்1 நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

78:18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

78:19. வானம்507 திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

78:20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

78:21.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

78:22. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.26
لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

78:23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.
لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

78:24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

78:25. கொதி நீரையும், சீழையும் தவிர.
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

78:26. இது செயலுக்கேற்ற கூலி!
جَزَآءً وِفَاقًا

78:27. அவர்கள் (நமது) விசாரணையை நம்பாதிருந்தனர்.
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

78:28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.
وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

78:29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

78:30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

78:31.
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

78:32.
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا

78:33.
وَكَوَاعِبَ أَتْرَابًا

78:34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.26
وَكَأْسًا دِهَاقًا

78:35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

78:36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا

78:37. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

78:38. ரூஹும்,444 வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا

78:39. இதுவே உண்மையான நாள்!1 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

78:40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்.
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا