Quran Tamil Translation

அத்தியாயம் : 80 அபஸ
மொத்த வசனங்கள் : 42
அபஸ – கடுகடுத்தார்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

80:1.
عَبَسَ وَتَوَلَّىٰٓ

80:2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.26
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

80:3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

80:4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

80:5.
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

80:6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.26
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

80:7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

80:8.
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

80:9.
وَهُوَ يَخْشَىٰ

80:10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். 26
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

80:11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ

80:12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ

80:13.
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ

80:14.
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ

80:15.
بِأَيْدِى سَفَرَةٍ

80:16. இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில்461 உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.26
كِرَامٍۭ بَرَرَةٍ

80:17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ

80:18. எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்?
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

80:19. விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.506
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

80:20. பின்னர் வழியை அவனுக்கு எளிதாக்கினான்.
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

80:21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து மண்ணறைக்கு அனுப்புகிறான்.
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

80:22. பின்னர் தான் நாடும்போது அவனை எழுப்புவான்.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

80:23. அவ்வாறில்லை! (இறைவன்) கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

80:24. மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

80:25. நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا

80:26. பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

80:27.
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا

80:28.
وَعِنَبًا وَقَضْبًا

80:29.
وَزَيْتُونًا وَنَخْلًا

80:30.
وَحَدَآئِقَ غُلْبًا

80:31.
وَفَـٰكِهَةً وَأَبًّا

80:32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.26
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

80:33.
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

80:34.
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

80:35.
وَأُمِّهِۦ وَأَبِيهِ

80:36. அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில்1 மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.26
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ

80:37. அந்நாளில்1 அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

80:38. அந்நாளில்1 சில முகங்கள் ஒளி வீசும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

80:39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ

80:40. அந்நாளில்1 சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

80:41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ

80:42. அவர்களே (ஏகஇறைவனை) மறுப்போரான பாவிகள்.
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ