Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 84 அல்இன்ஷிகாக்
மொத்த வசனங்கள் : 25
அல்இன்ஷிகாக் – பிளந்து விடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

84:1. வானம்507 பிளந்து விடும்போது,
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

84:2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

84:3. பூமி நீட்டப்படும்போது,
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

84:4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும்போது,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

84:5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

84:6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.488
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ

84:7.
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ

84:8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.26
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

84:9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

84:10.
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

84:11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا

84:12. நரகிலும் எரிவான்.
وَيَصْلَىٰ سَعِيرًا

84:13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

84:14. “நான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்” என்று அவன் எண்ணினான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

84:15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக488 இருந்தான்.
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا

84:16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

84:17.
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

84:18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!379
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

84:19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

84:20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

84:21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது ஸஜ்தாச் செய்வதில்லை.396
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ

84:22. மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

84:23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

84:24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

84:25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ