Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 100 அல் ஆதியாத்
மொத்த வசனங்கள் : 11
அல் ஆதியாத் – வேகமாக ஓடும் குதிரைகள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

100:1.
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا

100:2.
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا

100:3.
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

100:4.
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

100:5. மூச்சிரைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!379
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

100:6. மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ

100:7. அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான்.
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

100:8. அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

100:9.
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

100:10.
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

100:11. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும் போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிய வேண்டாமா?26
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ