Quran Tamil Translation

அத்தியாயம் : 105 அல் ஃபீல்
மொத்த வசனங்கள் : 5
அல் ஃபீல் – யானை
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

105:1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ

105:2. அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா?464
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ

105:3. அவர்களுக்கு எதிராகப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பினான்.
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

105:4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின.
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

105:5. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.355
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ