Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 75 அல்கியாமா
மொத்த வசனங்கள் : 40
அல்கியாமா – இறைவன் முன்னால் நிற்கும் நாள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

75:1. கியாமத் நாள்1 மீது சத்தியம் செய்கிறேன்.
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ

75:2. குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.379
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

75:3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

75:4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208
بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

75:5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.
بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

75:6. “கியாமத் நாள்1 எப்போது?” எனக் கேட்கிறான்.
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ

75:7.
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

75:8.
وَخَسَفَ ٱلْقَمَرُ

75:9.
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

75:10. பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.26
يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

75:11. அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.
كَلَّا لَا وَزَرَ

75:12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

75:13. அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

75:14.
بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ

75:15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.26
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

75:16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

75:17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

75:18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152
فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

75:19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

75:20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

75:21. மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ

75:22. அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

75:23. தமது இறைவனைப் பார்த்துக்488 கொண்டிருக்கும்.
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

75:24. சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும்.
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ

75:25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

75:26.
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

75:27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக் குழியை அடைந்து விடும்போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும்.26
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

75:28. “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான்.
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

75:29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

75:30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

75:31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

75:32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

75:33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

75:34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

75:35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

75:36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى

75:37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?506
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ

75:39. அவனிலிருந்து437 ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

75:40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?
أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ