Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 79 அந்நாஸிஆத்
மொத்த வசனங்கள் : 46
அந்நாஸிஆத் – கைப்பற்றுவோர்
உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

79:1. பலமாகக் கைப்பற்றுவோர்165 (வானவர்கள்) மீது ஆணையாக!379
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا

79:2. எளிதாகக் கைப்பற்றுவோர்165 மீது ஆணையாக!379
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا

79:3.
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا

79:4.
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا

79:6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்துதல் (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!1
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ

79:7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ

79:8. அந்நாளில்1 சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ

79:9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ

79:10. குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?” என்று கேட்கின்றனர்.
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ

79:11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً

79:12. அப்படியானால் அது நட்டத்தை ஏற்படுத்தும் மீளுதல் தான் என்றும் கூறுகின்றனர்.
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ

79:13. அது ஒரே ஒரு சப்தம் தான்!
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ

79:14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

79:15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

79:16. அவரை அவரது இறைவன் ‘துவா’ எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى

79:17. “நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்”
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ

79:18.
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

79:19. “நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழிகாட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்! எனக் கூறுவீராக” (என்று இறைவன் கூறினான்.26
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

79:20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ

79:21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.
فَكَذَّبَ وَعَصَىٰ

79:22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

79:23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.
فَحَشَرَ فَنَادَىٰ

79:24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ

79:25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ

79:26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ

79:27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா?507 அதை அவன் நிறுவினான்.
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا

79:28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا

79:29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا

79:30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

79:31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا

79:32. மலைகளை முளைகளாக நாட்டினான்.248
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا

79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்).
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

79:34.
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ

79:35. மாபெரும் அமளி ஏற்படும்போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.26
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ

79:36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ

79:37.
فَأَمَّا مَن طَغَىٰ

79:38.
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

79:39. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.26
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ

79:40.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ

79:41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.26
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ

79:42. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا

79:43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ

79:44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

79:45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا

79:46. அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا