Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 81 அத்தக்வீர்
மொத்த வசனங்கள் : 29
அத்தக்வீர் – சுருட்டுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

81:1. சூரியன் சுருட்டப்படும்போது,
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

81:2. நட்சத்திரங்கள் உதிரும்போது,
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

81:3. மலைகள் பெயர்க்கப்படும்போது,
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

81:4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும்போது,
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

81:5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது,
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

81:7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும்போது,
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

81:8.
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

81:9. என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள்487 விசாரிக்கப்படும் போது,26
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ

81:10. ஏடுகள் விரிக்கப்படும்போது,
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

81:11. வானம்507 அகற்றப்படும்போது,
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

81:12. நரகம் கொளுத்தப்படும்போது,
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

81:13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும்போது,
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

81:14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

81:15.
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

81:16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம்379 செய்கிறேன்.26
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

81:17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக379
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

81:18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!379
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

81:19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.492
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

81:20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு488 உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ

81:21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ

81:22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.468
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

81:23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

81:24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

81:25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

81:26. எங்கே செல்கிறீர்கள்?
فَأَيْنَ تَذْهَبُونَ

81:27.
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

81:28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.26
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

81:29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.289
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ