Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 82 அல்இன்ஃபிதார்
மொத்த வசனங்கள் : 19
அல்இன்ஃபிதார் – பிளந்துவிடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

82:1. வானம்507 பிளந்து விடும்போது,
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ

82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும்போது,
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ

82:3. கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ

82:4. மண்ணறைகள் புரட்டப்படும் போது,
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ

82:5. ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான்.
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

82:6. மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ

82:7. அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

82:8. அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ

82:9. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதுகிறீர்கள்.
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

82:10.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ

82:11. உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.26
كِرَامًا كَـٰتِبِينَ

82:12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

82:13. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

82:14. பாவிகள் நரகில் இருப்பார்கள்.
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ

82:15. தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் எரிவார்கள்.
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ

82:16. அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர்.
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ

82:17. தீர்ப்பு நாள்1 எதுவென (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

82:18. பின்னரும் தீர்ப்பு நாள்1 எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ

82:19. அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ