Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 89 கிழக்கு வெளுக்கும் நேரம்
மொத்த வசனங்கள் : 30
அல்ஃபஜ்ரு – கிழக்கு வெளுக்கும் நேரம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

89:1. கிழக்கு வெளுக்கும் நேரத்தின் மீது சத்தியமாக!379
وَٱلْفَجْرِ

89:2. பத்து இரவுகள்387 மீதும் சத்தியமாக!379
وَلَيَالٍ عَشْرٍ

89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!379
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

89:4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!379
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

89:5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

89:6.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

89:7. ஆது சமுதாயத்தையும், தூண்களையுடைய இரம் சமுதாயத்தையும் உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?26
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

89:8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ

89:9.
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

89:10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)26
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

89:11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ

89:12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

89:13. எனவே உமது இறைவன் அவர்களுக்கு எதிராக வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

89:14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

89:15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்” என்று கூறுகிறான்.
فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

89:16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

89:17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

89:18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.
وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

89:19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

89:20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

89:21. அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும்போது,
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

89:22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்போது488,
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

89:23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

89:24. “எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?” என்று கூறுவான்.
يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

89:25. அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

89:26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

89:27.
يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

89:28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!26
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

89:29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!
فَٱدْخُلِى فِى عِبَـٰدِى

89:30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)
وَٱدْخُلِى جَنَّتِى