இவர்தான் நபிகள் நாயகம்

தினமணி ரம்ஜான் மலரில் பீஜே எழுதிய கட்டுரை

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் கி.பி.571 ஆம் வருடம் நபிகள் நாயகம் பிறந்தார்கள். சிறு வயதில் தமது பெற்றோரை இழந்த நபிகள் நாயகம் பாட்டனார் பொறுப்பிலும் அவர் மரணித்த பின் பெரிய தந்தையின் பொறுப்பிலும் வளர்ந்தார்கள்.

நாற்பது வயது வரை ஒரு வணிகராகவும் சராசரி மனிதராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

* ஒரே கடவுளை மட்டுமே வணங்க வேண்டும்.

* பெற்றோரைப் பேண வேண்டும்.

* பொய், புரட்டு மோசடி கூடாது.

* மனிதனுக்கு கேடு விளைவிக்கும் மது பானங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விலக்க வேண்டும்.

* கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் கூடாது.

என்றெல்லாம் கடவுளிடமிருந்து தமக்குச் செய்தி வருவதாக அறிவித்தனர். இந்தப் பிரச்சாரம் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பத்து ஆண்டுகள் சொல்லொனாத் துன்பத்தை அனுபவித்தார்கள். முடிவில் ஊரை விட்டே விரட்டப்பட்டார்கள். மதீனா என்ற நகரில் தஞ்சமடைந்து பதிமூன்று வருடங்கள் அங்கே வாழ்ந்து அறுபத்தி மூன்றாம் வயதில் மரணித்தார்கள்.

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி சாதனைகள் பல படைத்துள்ளனர். எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாதனைகள் பல வகைகளில் தனித்து விளங்குகின்றன.

ஒரு தலைவரின் கட்டளைகளையும் நடைமுறைகளையும் அவர் வாழும்போது சிலர் கடைப்பிடித்திருப்பார்கள். அந்தத் தலைவரின் மரணத்திற்கு பின் அவரை அப்படியே பின்பற்றுவோர் இருக்க மாட்டார்கள். இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் உலக வரலாற்றில் இதை மாற்றிக் காட்டிய ஒரே தலைவராக இருக்கின்றனர்.

தங்களின் வணக்க வழிபாடுகளில் மட்டுமின்றி தங்களின் வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் நபிகள் நாயகத்தின் கட்டளைப்படியே பல கோடி முஸ்லிம்கள் இன்றளவும் நடத்தி வருகின்றனர். உண்ணுதல், பருகுதல், மலஜலம் கழித்தல் போன்ற அற்பமான காரியங்களைக் கூட அவர்கள் காட்டிய வழியிலேயே செய்யக் கூடிய மக்களை பதினான்கு நூற்றாண்டுகளாகப் பெற்று வரும் ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.

இதற்கு, அவர்களிடம் காணப்பட்ட தனித் தகுதிகள் காரணமாக இருந்தன.

தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்வதற்கு முன் ஊரிலேயே பெரும் செல்வந்தராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டு காலப் பொதுவாழ்வில் அனைத்தையும் இழந்தார்கள்.

மரணித்த போது இன்றைய மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் கூட தேறாத அற்பமான பொருட்களை தான் அவர்கள் விட்டுச் சென்றனர். அதையும் கூட தமது வாரிசுகள் பயன்படுத்தக் கூடாது. பொதுநிதியில் சேர்த்து விடவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

இந்த நம்பகத் தன்மை தான் அவர்களை முஸ்லிம்கள் அப்படியே அடியொற்றி நடப்பதற்குக் காரணமாக இருந்தது.

மனிதன் வேறு, கடவுள் வேறு என்று உரத்துச் சொன்னவர் நபிகள் நாயகம். மனிதன் ஒருக்காலும் கடவுளாக ஆகவே முடியாது என்பதை உறுதி பட அவர்கள் அறிவித்தார்கள். மக்களில் சிலர் நபிகள் நாயகத்தையே கடவுள் நிலைக்கு உயர்த்த முற்பட்ட போது அதைக் கடுமையான முறையில் எச்சரித்து தடுத்து நிறுத்தினார்கள்.

* அவரது வாழ்நாளில் ஒருவரும் அவரது காலில் விழுந்ததில்லை.

* அல்லாஹ்விடம் தாமும் பிரார்த்தனை செய்து மற்றவர்களையும் பிரார்த்திக்கக் கூறியதைத் தவிர யாருக்கும் ஆசி வழங்கியதில்லை.

* அவர்களுக்காக யாரும் எழுந்து நின்றதில்லை.

* அவர்களுக்கு பராக் சொல்லக்கூடியவர்கள் யாரும் முன்னும் பின்னும் நடந்து சென்றதில்லை.

* அவர்களின் குடிசை வீட்டுக்கு வாயிற் காப்போன் யாருமில்லை.

இன்றைக்கு மிகவும் அடித்தளத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்படி சாதாரணமாக இருப்பானோ அதை விடப் பல மடங்கு சாதாரணமானவராகத் தான் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள்.

இவர் தான் பின்பற்றப்படும் ஒரே தலைவர் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

எதை தமது வாழ்வில் அவர்கள் போதித்தார்களோ அதைத் தாமே முதலில் கடைப்பிடித்தார்கள். கடைப்பிடிக்காத ஒரு செய்தியையும் அவர்கள் கூறியதில்லை. கூறிய எந்த ஒன்றையும் கடைப்பிடிக்காமலும் இருந்ததில்லை.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத இந்தத் தன்மையும் அவர்கள் இன்றளவும் அப்படியே பின்பற்றுவதற்குக் காரணம்.

அவர்களது ஆட்சியில் தமக்கோ, தமது உறவினருக்கோ, வேண்டியவருக்கோ சட்டத்திலிருந்து எந்த விலக்கையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. என் மகள் திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன் என்று தெளிவாகவே அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

வட்டியைத் தடை செய்தபோது அன்றைக்கு மிகப் பெரிய வட்டித் தொழில் செய்து வந்த தமது பெரிய தந்தையிலிருந்து அதைத் துவக்கினார்கள்.

தமது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர்கள் அசலை மட்டும் செலுத்தலாம் எனப் பிரகடனம் செய்தார்கள்.

மாபெரும் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மாயம், மந்திரம், சோதிடம், புரோகிதம் ஆகிய அனைத்தையும் எதிர்த்தார்கள்.

அன்றைக்கு உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷி குலத்தில் பிறந்திருந்தும் குலத்தால் எந்தப் பெருமையும் இல்லை என்று அடித்துச் சொன்னார்கள். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் புனிதப் பணியை அன்றைக்கு தீண்டத் தகாதவராகக் கருதப்பட்ட பிலாலிடம் ஒப்படைத்தார்கள்.

தமது தாய்மொழி அரபு மொழியாக இருந்தும் அந்த மொழிக்கு நிகர் வேறு மொழியில்லை என்ற கர்வம் அன்றைய மக்களிடம் இருந்தும் அரபு மொழிக்கு என எந்தச் சிறப்பும் இல்லை என்றார்கள். எல்லா மொழிகளும் எல்லா மொழிகளைப் பேசுவோரும் சமமானவர்களே என்று பிரகடனம் செய்தார்கள்.

இது போன்ற சிறப்புத் தகுதிகளின் அடிப்படையில் தான் நபிகள் நாயகம் அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரைவிடவும் மேலாக மதிக்கின்றனர்.

உலகில் சீர்திருத்தம் செய்த தலைவர்கள் ஒரு சில துறைகளில் மட்டும் கருத்து கூறிவிட்டு மற்றவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இதில் தமக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறிவிடுவார்கள்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த வரை அவர்களின் தனிச் சிறப்பு என்னவென்றால் மனிதர்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனை குறித்தும் அவர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள் கருத்துச் சொல்லாத எந்தப் பிரச்சனையும் இல்லை. இன்றைக்கு நாம் சந்திக்கின்ற நவீனப் பிரச்சனைகளுக்குக் கூட அவர்களின் கருத்து என்ன என்பதை யாராலும் அறிய முடியும்.

சில தீமைகளுக்கு எதிராகக் கருத்துச் சொன்னால் சிலரது ஆதரவை இழக்க நேரிடுமோ என்று கருத்தை மறைப்பவர்களே மலிந்துள்ள நிலையில் யாரைப் பற்றியும், எந்த விளைவைப் பற்றியும் கவலைப்படாமல் தமது கருத்து இதுதான் என்று அறிவித்த தலைவர் நபிகள் நாயகம்.

அவர்கள் வலியுறுத்தாத நல்ல காரியங்கள் எதுவும் இல்லை. அவர்கள் எதிர்க்காத ஒரு தீமையும் இல்லை.

இதுபோன்ற இன்னும் பல தனிச்சிறப்புக்கள் காரணமாகவே உலகம் அவர்களை மாமனிதர் என்கிறது. முஸ்லிம் சமுதாயம் தமது நிரந்தர வழிகாட்டியாக அவர்களைக் கருதுகிறது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...