ஜும்மாவுக்கு முன் சுன்னத் என கூறும் ஹதீஸ் பலவீனமனதா

நீ இங்கே வருவதற்கு முன்னால் என்ற வாசகம் ஷாத் என்று அல்பானி கூறியுள்ளதால் ஜும்மாவுக்கு முன் சுன்னத உண்டு என்ற வாதம் தவறு சிலர் கூறுகிறார்களே அது சரியா?

அனீஸ் அஹ்மத், பேர்ணாம்பட்

பதில்

அல்பானி ஷாத் எனக் கூறிய காரணம் சரியானதல்ல.

ஷாத் என்றால் பல அறிவிப்புகளுக்கு எதிராகவும் முரணாகவும் ஒரு அறிவிப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பு முரணானதாக இல்லை.

இமாம் குத்பா ஓதும் போது யாரேனும் வந்தால் என்ற அறிவிப்பும்

நீ இங்கே வருவதற்கு முன் தொழுது விட்டாயா என்பதும் ஒன்றுக் கொன்று முரண் இல்லை. இதை பின்னர் விளக்கியுள்ளோம்.

மேலும் ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு என பல ஆதாரங்கள் உள்ளன. அதையும் கவனத்தில் கொண்டால் இது ஷாத் அல்ல. அல்பானி கூறுவது தான் ஷாத் ஆகும் என்பதை அறியலாம்.

سنن أبي داود

1128 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ يُطِيلُ الصَّلَاةَ قَبْلَ الْجُمُعَةِ، وَيُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ»

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின்னால் தமது வீட்டில் இரண்டு ரக்ஆத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாபிஃஉ

நூற்கள்: அபுதாவூத், இப்னு ஹிப்பான்.

ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை என்ற சொல்லில் இருந்து ஜும்ஆவுக்கு முன்னால் ஒரு தொழுகை உண்டு என்பதை சந்தேகமின்றி அறியலாம். அது தஹிய்யத் மஸ்ஜித் அல்ல என்பதையும் அறியலாம்.

صحيح البخاري

731 – حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلَاةِ صَلَاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ

கடமையான தொழுகைகள் தவிர எனைய தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

அதற்கேற்ப ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலேயே தொழுதுள்ளார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

صحيح ابن حبان

2455 – أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ،قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ إِلَّا وَبَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ»

கடமையான எந்தத் தொழுகைக்கு முன்னாலும் இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமலில்லை என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழி)

நூல்: இப்னு ஹிப்பான்.

ஜும்ஆத் தொழுகை கடமையான தொழுகை என்பதால் அதற்கு முன்னால் இரண்டு ரக்அத்துக்கள் உண்டு என அறியலாம்.

ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு என்பதற்கு இதுவும் ஆதாரமாகும்.

صحيح مسلم

103 – (728) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا، غَيْرَ فَرِيضَةٍ، إِلَّا بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أَمُّ حَبِيبَةَ: «فَمَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ» وقَالَ عَمْرٌو: «مَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ»، وقَالَ النُّعْمَانُ مِثْلَ ذَلِكَ.

யார் தினமும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் மாளிகை எழுப்பப்படும்.

நூற்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

கடமையான தொழுகைக்கு முன்னும் பின்னும் தொழ வேண்டிய தொழுகையைப் பற்றிக் கூறும் போது தினமும் பன்னிரண்டு ரக்அத்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜும்ஆவுக்கு முன்னர் சுன்னத் இல்லை என்று கூறினால் தினமும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் என்பது ஜும்ஆ தினத்தில் இல்லாமல் போய்விடும்

இல்லாமல் போய்விடும். மற்ற நாட்களில் பன்னிரண்டு ரக்அத்களும், ஜும்மா நாளில் பத்து ரக்அத்களும் தான் வரும்.

ஜும்மாவிலும் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் உண்டு என்பதற்கு இதுவும் ஆதாரமாகும்.

ஒவ்வொரு கடமையான தொழுகைக்கு முன்னும் இரண்டு ரக்அத்துக்கள் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். ஜும்ஆவுக்கு அது பொருந்தாது என்றால் நேரடியான ஆதாரம் காட்ட வேண்டும்.

அடுத்து சர்ச்சைக்குரிய அந்த ஹதீஸை எடுத்துக் கொள்வோம். நீ இங்கே வருவதற்கு முன் என்பது வேறு ஹதீஸ்களுடன் முரண்படுகிறதா என்றால் முரண்படாமல் விளங்க முடியும்.

நாம் சுட்டிக் காட்டிய இந்த மூன்று ஹதீஸ்களுடன் அது மிகவும் ஒத்துப் போகிறது. நபி (ஸல்) அவர்களும் வீட்டில் தொழுதுள்ளதால் வீட்டில் தொழுதாயா? என்று கேட்பது பொருத்தமாக உள்ளது. இந்த நான்கும் சேர்ந்து ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டு என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

வந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் தொழுதுவிட்டாயா? எனக் கேட்கிறார்கள். அவர் இல்லை என்கிறார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழச் சொல்கிறார்கள். இது ஒரு ஹதீஸ்.

அதே மனிதரிடம் நீ எழுந்து இரண்டு ரக்ஆத்துக்கள் தொழு! அவ்விரண்டையும் சுருக்கமாகத் தொழு! என்று கூறிவிட்டு உங்களில் எவரேனும் இமாம் குத்பா ஓதும் போது வந்தால் அவர் சுருக்கமாக இரண்டும் ரக்த்துக்கள் தொழட்டும் என்றார்கள். இது மற்றொரு ஹதீஸ்.

இரண்டையும் ஒன்றாக இணைத்தால் எந்த முரண்பாடுமே இல்லை.

உங்களில் யாரேனும் என்பது பொதுவாக இருந்தாலும் கூறப்பட்ட சந்தர்ப்பத்தைப் பொருத்து அது யாரைக் குறிக்கிறது என்பது மாறுபடும்.

நீ வீட்டிலேயே தொழுது விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு அவர் இல்லை என்று கூறிய பின் அவரை எழுந்து தொழச் சொல்லிவிட்டு இதைக் கூறியிருக்கிறார்கள். வீட்டிலேயே தொழாமல் வந்த காரணத்துக்காக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் அந்த நிலையில் வரக் கூடியவரையே அது குறிக்கும்.

உங்களில் யாரேனும் வந்தால் – அதாவது இவரைப் போல் வீட்டில் தொழாமல் வந்தால் – என்று பொருள் கொண்டால் முரண்பாடு ஏதுமில்லை.

எந்தக் காரணத்துக்காக எந்தச் சந்தர்ப்பத்துக்காகக் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உங்களில் யாரேனும் வந்தால் என்பதை ஆராய்வதால் தான் முரண்பாடாகத் தோன்றுகிறது. அதைக் கருத்தில் கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.

நீ வருவதற்கு முன் என்ற ஹதீஸை ஷாத் எனச் சொல்பவர்கள் நாம் எடுத்துக் காட்டிய மற்ற ஹதீஸ்களுக்கு உரிய பதில் அளிப்பதில்லை. அந்த ஹதீஸை ஷாத் என ஏற்றுக் கொண்டாலும் நாம் எடுத்துக்காட்டிய மற்ற ஆதாரங்கள் மூலம் ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு என்பது நிரூபணமாகும்

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...