பாகிஸ்தானில் இந்துப்பெண்கள் மதமாற்றமா?

பாகிஸ்தானின் சிந்து மகாணத்தைச் சேர்ந்த 18 வயது ரிங்கிள் குமாரி என்ற பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஃபர்யால் என பெயரை மாற்றி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், ரிங்கிள் குமாரி என்ற அந்த இந்துப் பெண்ணைக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததோடு அவரது விருப்பத்துக்கு மாறாக திருமணமும் செய்து வைத்துள்ளதாகவும், தங்களது செய்தித்தாள்களின் பரபரப்பான விற்பனைக்காக பத்திரிக்கைகள் தங்களது இஷடத்திற்கு கடந்த வாரம் எழுதித்தள்ளின.

ரிங்கிள் குமாரி என்ற பெண்ணோடு லதா குமாரி என்ற பெண்ணையும் இப்படி கட்டாய மதமாற்றம் செய்துவிட்டதாகவும், பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் அதிகரிப்பு என்ற தலைப்பிட்டு நம்ம ஊர் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல், அந்த அப்பாவி இந்துப் பெண்களை மீட்டுக் காப்பாற்றி அவர்களது தாய் மதத்திலேயே அவர்களை இணைக்க வேண்டும் என்றும், பல நாடுகளிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவதாகவும் பில்டப்புகளையும் விடுவதற்கு இந்தப் பத்திரிக்கைகள் தவறவில்லை.

யார் ஒருவரையும் மிரட்டி, தங்களது மிரட்டலுக்குப் பணியவைத்து ஒரு சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்க வைக்க முடியுமா? அது அறிவுப்பூர்வமாக சாத்தியமாகுமா? என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. இவர்களுக்குச் செருப்படி கொடுத்தது போல அமைந்தது கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட இந்துப் பெண்களாகிய ரிங்கிள் குமாரி மற்றும் லதா குமாரி ஆகியோர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் அளித்த வாக்குமூலம்.

அது குறித்து வெளியான செய்தி இதோ :விரும்பித் தான் மதம் மாறினோம்; பாகிஸ்தான் கோர்ட்டில் பெண்கள் விளக்கம்:

பாகிஸ்தானில் இந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாகின்றனர் என்ற, குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில், பாக். கோர்ட்டில் ஆஜரான ஓர் இந்துப் பெண், தான் விரும்பித் தான் மதம் மாறியதாக’ வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சமீபத்தில் பல இந்துப் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு, கட்டாயமாக மாற்றப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

அவர்களில் மூன்று பேரை நேரில் ஆஜர்படுத்தும்படி பாக். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், மூன்று பெண்களில் ஒருவரான லதா குமாரி என்பவர், நேற்று கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தான் விரும்பியே மதம் மாறியதாகவும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை மணம் புரிந்ததாகவும், வாக்குமூலம் அளித்தார். தன்னைக் கடத்தியதாக தன் கணவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, ஆதாரமில்லாதது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து இவ்வழக்கில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, குமாரியின் கணவருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். லதா குமாரியைப் போல, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ரிங்கிள் குமாரி என்ற இளம் பெண்ணும், நேற்று முன்தினம் சிந்து ஐகோர்ட்டில் ஆஜராகி, தான் விரும்பியே மதம் மாறியதாகத் தெரிவித்தார்.

அது போல, பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் பார்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதமாற்றத்துக்குப் பிறகு ஆயிஷா என அவருக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளையும் பத்திரிக்கைகள் வெளியிட்டன.

பாகிஸ்தானின் லியாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் இதுபோல நடப்பது இது 18-வது முறையாகும். மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுமிகள் அச்சுறுத்தப்படுவார்கள் என்றும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் பார்தி என்ற இந்துப் பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது, நான் அபிது என்ற இஸ்லாமியரை விரும்பினேன். மார்க்கெட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அங்கிருந்து நாங்கள் ஓடிப்போகத் திட்டமிட்டோம் என்று சொல்லி இவ்வாறு பொய்ப் புகார் அளித்த அனைவரது முகத்திலும் கரியைப் பூசினார்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் திட்டமிட்டு மீடியாக்கள் இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள்.

அதே நேரத்தில் பாகிஸ்தானில் அனுமார் கோவில் கட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே! அதைப் பாராட்டியும், கோயில் கட்ட பாகிஸ்தான் அரசு உதவி செய்ததௌ குறித்தும், பாகிஸ்தானில் மதச் சார்பின்மை பேணப்படுகின்றது என்று இவர்கள் பாராட்டி எழுதினார்களா?

அதே நேரத்தில் பாபர் மசூதி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு சொன்ன நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து சொன்னார்களா இந்த மீடியாக்கள்?

மீடியாக்கள் இத்தகைய பாரபட்சமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் பத்திரிக்கை துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

இரண்டு பேர் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது பாகிஸ்தானில் மட்டுமின்றி அதை விட பண்மடங்கு அதிகமாக இந்தியாவில் நடக்கிறது. இதைக் கூட மதத்துவேஷமாக மாற்றி இப்படியெல்லாம் மதம் மாற்றம் செய்கின்றார்கள் என்று இந்தச் செய்திகளைப் படிப்பவர்கள் உள்ளத்தில் நஞ்சூட்டும் இத்தகைய கேவலத்தனத்தை பத்திரிக்கைகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், பாகிஸ்தானின் லியாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் இதுபோல நடப்பது இது 18-வது முறையாகும் என்று எழுதி பீதியையும் கிளப்புகின்றார்கள். அந்தப் பகுதியில் 18 பேர் காதல் வயப்பட்டு ஓடிப் போனதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் என்ன செய்யும்? இந்த ஒரு அடிப்படை உண்மை கூட விளங்காமல் இவர்கள் செய்தி வெளியிடுகின்றார்கள் என்றால், இந்த நாடு எப்படி உருப்படும்? இனியாவது இவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாற்றிக் கொள்வார்களா?

உணர்வு

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...