பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா

கேள்வி – குஜராத்தில் மோடி நடத்திய மிருக வெறியாட்டத்தைப் பற்றி பேசுவோர் காங்கிரஸ் ஆட்சியிலும் இன்னபிற மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

கலவரங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கிறது. எல்லா கலவரங்களிலும் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் கேள்வி எழுப்புகின்றனவே? இந்தக் கேள்வி நியாயமானது தானா?

சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்

பதில் – குஜராத்தில் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பது உண்மை. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும் உண்மை. சில கலவரங்களில் குஜராத்தை விட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான்.

ஆனால் குஜராத் வன்முறைக்கும் இன்னபிற மாநிலங்களில் நடந்த வன்முறைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சங்பரிவாரமும் அதன் சார்பு ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன.

மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களின் போது மாநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக இருக்கும்.

மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரடியாகத் திட்டமிட்டு நடத்தி இருக்க மாட்டார்கள்.

பெரும்பான்மை பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்கத் தவறிய குற்றத்தைத்தான் அவர்கள் செய்தனர்.

ஆனால் குஜராத்தில் மோடிதான் கலவரத்தை நடத்தியவர். அவரது அமைச்சர்கள்தான் முன்னின்று நடத்தினார்கள். காவல் நிலையத்தில்தான் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

பிற ஆட்சியில் பிற மாநிலங்களில் நடந்த கலவரத்தின்போது 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அந்த மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்திருந்தால் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

குஜராத் கலவரத்தின்போது மோடி அல்லாத வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால் அப்போது கொல்லப்பட்டவர்களில் கால்வாசி மக்கள் கூட கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானி கலவரத்தை நடத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காக 28 ஆண்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

உபியில் கலவரம் செய்வதற்காக மோடியால் அனுப்பி வைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமித்ஷா என்ற கொடியவனுக்கு கலவரத்தில் சம்மந்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

மற்ற கலவரங்களுக்கும் மோடி நிகழ்த்திய கலவரத்திற்கும் இதுதான் பெரிய வேறுபாடு.  இதைத் திட்டமிட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.

மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற மாநில அரசுகள் இழப்பீடு அளித்தன. இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரசுத் செலவில் புணர்நிர்மானம் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் பயங்கரவாதி மோடியோ இதைக்கூட செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

மற்ற கலவரங்கள் ஆள்வோரின் திறமையின்மையால் நடந்தன.

ஆனால் குஜராத் கலவரம் மோடியின் மதவெறித் திமிரால் திறமையாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரசின் திறமையின்மையும், அரசே கலவரத்தை முன்னின்று நடத்துவதும் சமமாகுமா?

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து மற்ற மாநில அரசுகள் தாமதமாக நீதி வழங்கினார்கள்.

ஆனால் கலவரக்கார்களை தப்பிக்க வைக்க எல்லா அயோக்கியத்தன்ங்களையும் செய்தவர் பயங்கரவாதி மோடி. நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்கா விட்டால் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள். இந்த வித்தியாசம் தினமணிக்கும் தினமலருக்கும் தினத்தந்திக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் அவர்களின் மதவெறி இந்த உண்மையை மறைக்கச் சொல்கிறது.

ஒரு ஊரில் காவல் நிலையம் இருந்தும் திருட்டுக்கள் நடக்கின்றன. 100 கோடி ரூபாய் அளவுக்கு திருட்டு நடந்துள்ளதாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு ஊரில் 10 கோடி அளவுக்குத்தான் திருட்டு நடந்துள்ளது. ஆனால் இந்த பத்து கோடி திருட்டையும் காவல்துறையினரே செய்துள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இரண்டும் சமமானதா? பத்து கோடியைவிட நூறு கோடி பெரிது என்று மனசாட்சியுள்ளவர்கள் பேசுவார்களா?

ஒன்று சமூக விரோதிகளின் திருட்டு. இன்னொன்று காவல்துறையே நடத்திய திருட்டு என்று வேறுபடுத்தி பேச மாட்டார்களா? இவர்களைப் போலீஸ் வேலைக்கே வைக்கக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா?

மோடி செய்தது இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

தினத்தந்தியும், தினமலரும் தினமணியும் என்னதான் திசை திருப்பினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். நடுநிலையான இந்துக்கள் மோடி என்ற பயங்கரவாதியைப் பிரதமராக ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...