மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?
ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா?
“எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும். ஆனால், எனக்கு வரப்போகும் மனைவி — திருமணப் பேச்சுகள் நடந்து வருகின்றன — ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தனது பெற்றோருடன் மிகவும் ஒட்டியிருப்பவர், திருமணத்திற்குப் பிறகு அவர்களைப் பிரிந்து வருவது அவருக்குக் கடினமாக உள்ளது. எனவே, என்னை அவர் வீட்டிற்கே வந்து வாழுமாறு கேட்கிறார். அவர் அவர்களுக்கு ஒரே மகள். நான் அங்கு செல்லலாமா?” ஒரு மௌலவியிடம் இதைக் கேட்ட போது, “நீங்கள் கேட்காவிட்டாலும் அவர்களாகவே தருவதும் வரதட்சணை தான்” என்று அந்த மௌலவி கூறியிருக்கிறார். இதற்கான பதில் என்ன?
- இலங்கை, காத்தான்குடியைச் சேர்ந்த ஹிராஸ்
இஸ்லாத்தில் வரதட்சணை எவ்விதக் கருத்து வேறுபாடும் இன்றி தடை செய்யப்பட்டது. மணப்பெண்ணின் குடும்பத்தாரிடம் முறையான காரணமின்றி ஒன்றை வற்புறுத்திக் கேட்பதே வரதட்சணையாகும். அவர்கள் தாங்களாகவே முன்வந்து, மகிழ்ச்சியுடன் எதைக் கொடுக்கிறார்களோ அது மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
திருமணம் முடிப்பதற்காக மணப்பெண் வீட்டாரிடம் பணம் கேட்டால் அது வீடாகவோ, பணமாகவோ, நகையாகவோ, காராகவோ அல்லது வேலைக்கான விசா என எதுவாக இருந்தாலும், மணமகன் தரப்பிலிருந்து கேட்கப்படுவது வரதட்சணையாகும். மாறாக, மணமகன் தான் மணப்பெண்ணுக்கு (மஹர்) கொடுக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த காலங்களில் வரதட்சணைக்கு எதிராக நாம் மிகக் கடுமையாகப் பேசியுள்ளோம். ஆனால், எது சரியாக வரதட்சணையில் சேரும் என்பதில் நமக்குத் தெளிவு தேவை.
வரதட்சணை தடை செய்யப்பட்டிருந்தாலும், எந்தவித அழுத்தமும் இன்றி அவர்கள் தாங்களாகவே முன்வந்து எதையாவது கொடுத்தால், உதாரணமாக அவர்களுக்கு அந்த ஒரு பெண் மட்டுமே வாரிசு, அவள் பிரிந்து சென்றால் அந்தப் பெற்றோர் தனிமையில் விடப்படுவார்கள் என்ற நிலையில், “எங்கள் வீட்டிலேயே இருங்கள்,” என்று அவர்கள் கேட்டு, நீங்களும் அதற்குச் சம்மதித்தால், அது வரதட்சணை அல்ல. நேரடியான அல்லது மறைமுகமான அழுத்தம் இருந்தால் மட்டுமே அது வரதட்சணையாகும்.
திருமணத்தை ஒட்டி நீங்கள் ஒரு வீட்டைக் கேட்டாலோ அல்லது நீங்கள் உங்கள் மனைவியை (அவர் மகள் என்பதால்) சரியாக நடத்த மாட்டீர்கள் என்ற அச்சத்தில் அவர்கள் கொடுத்தாலோ அது வரதட்சணையாகும்.
இஸ்லாத்தில் மஹர் கொடுப்பது கடமையாகும். அது கடமையாக இருந்தும், மணப்பெண் தானாக முன்வந்து அதைத் தன் கணவரிடமே திருப்பித் தந்தால் அது வரதட்சணையாகுமா? ஒரு லட்சம் ரூபாய் மஹர் என நிர்ணயிக்கப்பட்டு, பிறகு அவள் “இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று திருப்பித் தந்தால் அது அது ஹலால் ஆகும்? நீங்கள் அதைக் கேட்கவில்லை; அவள் தான் மனப்பூர்வமாகக் கொடுத்தாள்.
குர்ஆன் கூறுகிறது:
“பெண்களுக்கு அவர்களுடைய மஹர் தொகையை மனமுவந்து கொடுத்துவிடுங்கள்; அவர்களாகவே அதில் எதையேனும் உங்களுக்குத் தந்துவிட்டால், அதை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் தாராளமாக உண்ணுங்கள்”
(திருக்குர்ஆன் 4:4).
மஹர் கடமையாக இருந்தும், ஒரு பெண் தனக்கு அது வேண்டாம் என்று திருப்பித் தந்தால் அதை நீங்கள் ஏற்பது, நீங்கள் மஹர் கொடுக்கத் தவறி விட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் கொடுத்தீர்கள், அவர் மனமுவந்து திருப்பித் தந்தார். நீங்கள் அதைக் கோரவில்லை என்பதால் அது உங்களுக்கு ஹலாலாக ஆகிறது.
سنن النسائي
3341 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ، قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: ” خَطَبَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ، فَقَالَتْ: وَاللَّهِ مَا مِثْلُكَ يَا أَبَا طَلْحَةَ يُرَدُّ، وَلَكِنَّكَ رَجُلٌ كَافِرٌ، وَأَنَا امْرَأَةٌ مُسْلِمَةٌ، وَلَا يَحِلُّ لِي أَنْ أَتَزَوَّجَكَ، فَإِنْ تُسْلِمْ فَذَاكَ مَهْرِي وَمَا أَسْأَلُكَ غَيْرَهُ، فَأَسْلَمَ فَكَانَ ذَلِكَ مَهْرَهَا ” قَالَ ثَابِتٌ: «فَمَا سَمِعْتُ بِامْرَأَةٍ قَطُّ كَانَتْ أَكْرَمَ مَهْرًا مِنْ أُمِّ سُلَيْمٍ الْإِسْلَامَ، فَدَخَلَ بِهَا فَوَلَدَتْ لَهُ»
அபூ தல்ஹா என்ற தோழர் இருந்தார். அவர் மதீனாவின் பெரும் செல்வந்தராக இருந்தும் அப்போது முஸ்லிமாகவில்லை. அனஸ் இப்னு மாலிக்கின் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) ஒரு விதவையாக இருந்தார். அபூ தல்ஹா அவருக்குத் திருமணத் தூது அனுப்பினார். “உங்களைப் போன்ற ஒரு மனிதரை என்னால் நிராகரிக்க முடியாது, ஆனால் நீங்கள் முஸ்லிம் இல்லை, நான் முஸ்லிம், எனவே உங்களை மணக்க முடியாது. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹர்” என்று அவர் கூறினார். அவர் வேறெதையும் கேட்கவில்லை. அவரும் இஸ்லாத்தை ஏற்றார், அதுவே அவரின் மஹர் ஆனது
நூல் : நஸாயீ.
سنن النسائي
4213 – أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ، عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ»
ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகியோருக்கு நபி (ஸல்) அவர்களே அகீகா செய்தார்கள்,
நூல் : நஸாயீ
அகீகா அவர்களின் தந்தை அலீ (ரலி) அவர்களின் பொறுப்பாக இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
மஸ்ஜிதுன் நபவிக்கு அருகிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் அலீ (ரலி) வசித்தார்கள். திருமணத்திற்குப் பிறகு பாத்திமா (ரலி) அங்கேயே வாழ்ந்தார்கள். அதாவது அலீ (ரலி) தனது மாமனார் வீட்டிலேயே வசித்தார்கள். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன.
صحيح البخاري
1466 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ زَيْنَبَ – امْرَأَةِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا – قَالَ: فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ، ح فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ – بِمِثْلِهِ سَوَاءً – قَالَتْ: كُنْتُ فِي المَسْجِدِ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ» وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ، وَأَيْتَامٍ فِي حَجْرِهَا، قَالَ: فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ: سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ؟ فَقَالَ: سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى البَابِ، حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي، فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ، فَقُلْنَا: سَلِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي، وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي؟ وَقُلْنَا: لاَ تُخْبِرْ بِنَا، فَدَخَلَ فَسَأَلَهُ، فَقَالَ: «مَنْ هُمَا؟» قَالَ: زَيْنَبُ، قَالَ: «أَيُّ الزَّيَانِبِ؟» قَالَ: امْرَأَةُ عَبْدِ اللَّهِ، قَالَ: «نَعَمْ، لَهَا أَجْرَانِ، أَجْرُ القَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ»
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப். அவர் பொருளாதார ரீதியாக வசதியுடன் இருந்தார், ஆனால் இப்னு மஸ்ஊத் (ரலி) ஏழையாக இருந்தார். ஸைனப் தனது கணவருக்காகவும், தன் பராமரிப்பில் இருந்த அனாதைகளுக்காகவும் செலவு செய்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்ய ஊக்கப்படுத்திய போது, “எனது தர்மத்தை என் கணவருக்கே வழங்கலாமா?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதற்கு இரண்டு கூலிகள் உண்டு; ஒன்று குடும்ப உறவைப் பேணியதற்காக, மற்றொன்று தர்மத்திற்காக” என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 1466
எனவே ஒரு மனைவி தனது சொத்தைக் கணவனுக்குக் கொடுப்பது தடை செய்யப்பட்டதல்ல.
இந்த அனைத்து உதாரணங்களிலிருந்தும் நாம் அறிவது என்னவென்றால், கட்டாயம் (Compulsion) இல்லையென்றால் இத்தகைய சூழல்கள் ஏற்படலாம். பெற்றோருக்கு ஒரே மகள் இருந்து, அவள் பிரிந்து சென்றால் அவர்கள் தனிமையாகி விடுவார்கள் என்ற நிலையில், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில், எவ்விதச் சொத்துத் தகராறும் இன்றி உங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்தால், அதை நீங்கள் மனமுவந்து ஏற்றால் அது ஹராம் அல்ல. நீங்கள் அதைக் கேட்கவில்லை, நீங்கள் மகளைக் கொடுமைப்படுத்துவீர்கள் என்ற பயத்தில் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் விரும்புவது ஒரு துணையும் ஆதரவும் தான். உங்களுக்கும் அதில் ஆட்சேபனை இ ல்லை, அது உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்றால் அது அனுமதிக்கப்பட்டது.
வற்புறுத்தல் இருந்தால் மட்டுமே அது ஹராம் ஆகும்.
சிலர் கட்டாயப்படுத்தி விட்டு, பிறகு வற்புறுத்தல் இல்லை என்று பொய் சொல்லலாம். இது கூடாத ஒன்று.
உண்மையாகவே வற்புறுத்தல் இன்றி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால், அந்த வீட்டில் வாழ்வது ஒரு மனைவி தனக்குக் கொடுக்கப்பட்ட மஹரைத் திருப்பித் தருவதைப் போன்றது தான்.
காயல்பட்டினம், நாகூர் போன்ற சில இடங்களில் எழுதப்படாத விதிகள் உள்ளன. அதுதான் தவறாகிறது என்கிறோம்.
அங்கே ஒரு பெண் திருமணம் செய்தால், அவளுக்கு ஒரு வீடு கொடுத்தே ஆக வேண்டும் என்பது வரதட்சணையில் சேரும். அவர்களுக்கு வசதி இல்லையென்றாலும், கடன் வாங்கியாவது திருமணத்திற்கு முன்பே ஒரு வீட்டை ஏற்பாடு செய்கிறார்கள். வீடு இல்லையென்றால், அந்தப் பெண்ணுக்குப் பல ஆண்டுகள் திருமணமாகாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். இத்தகைய சூழலில், வீடு என்பது ஒரு கட்டாயக் கோரிக்கையாக மாறினால், அதை அனுமதிக்க முடியாது என்று சொல்லலாம். “ஏன் இப்படி வற்புறுத்துகிறீர்கள்?” என்று கேட்கலாம்.
ஆனால் நீங்கள் சொல்லும் சூழல் அப்படிப்பட்டதல்ல. ஒருவருக்கு ஒரே ஒரு மகள் இருந்து, அந்த ஒரே காரணத்திற்காக மணமகனைத் தங்களுக்கு ஆதரவாக இருக்குமாறு கேட்டால், மனைவி வீட்டில் தங்குவது தவறல்ல. ஒரு சிறந்த தோழரான இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களே தனது மனைவியின் செல்வத்தில் வாழ்ந்தார். அவர் ஒரு மாபெரும் அறிஞர்.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மக்கள் இது தவறு என்று தவறாகச் சொல்கிறார்கள். வரதட்சணையை நாம் கடுமையாகக் கண்டிப்பதாலேயே, வரதட்சணையை மட்டும் தான் குற்றம் என்று சொல்ல வேண்டும். மக்கள் கற்பனை செய்யும் எல்லாவற்றையும் வரதட்சணை என்று முத்திரை குத்தி எப்படிக் குற்றம் என்று சொல்ல முடியும்? அவர்களாக மனமுவந்து கொடுத்தால் அது வரதட்சணை அல்ல. மறைமுக அழுத்தம் இருந்தாலும் அதை வரதட்சணை எனலாம்.










