112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்

இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் மக்கள் ஆர்வத்துடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

“இருந்தாலும் இருக்கும்” என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இஸ்லாம் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் குறைந்தபட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நான்கு சாட்சிகள் இல்லாமல் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு 80 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இவ்வசனம் (24:4) கூறுகிறது.

ஒரு பெண் தவறாக நடப்பதை மூன்று ஆண்கள் பார்த்தாலும் அதை அவர்கள் பரப்புவது அவதூறாகவே கருதப்படும். அவர்களுக்கு எண்பது கசையடிகள் அடிக்கப்படும். நான்கு நபர்கள் நேரடியாகப் பார்த்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்படும்.

பெண்களைப் பற்றி வதந்தி பரப்புவோருக்கு எதிராக உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற கடுமையான சட்டங்களைப் பார்க்க முடியாது. பெண்களின் மானத்தையும், மரியாதையையும் காப்பதில் இஸ்லாம்  காட்டும் அக்கறையை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்துவோர் விபச்சாரம் செய்ததைக் கண்ட நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கூறுவது பொய் என எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

அதாவது விச்சாரம் செய்ததை நான்கு பேர் பார்க்க வேண்டும். அப்போது தான் இஸ்லாம் வழங்கும் தண்டனையை அளிக்க முடியும். ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருந்ததை நாற்பது பேர் பார்த்தாலும் அது விபச்சாரத்துக்கான சாட்சியமாக ஆகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.

ஒரு வீட்டுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் தனித்திருப்பதை நான்கு பேர் பார்த்தாலும்,

ஒரு ஆண் மட்டும் இருக்கும் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைவதையும் சில மணி நேரங்கள் கழித்து வெளியேறுவதையும் பார்த்தாலும்

அதுவும் விபச்சாரத்துக்கான சாட்சியமாகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.

இது  நடைமுறை சாத்தியமற்றதாகத் தோன்றலாம். இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் கூட இது சாத்தியமில்லாதது எனக் கூறியுள்ளனர்.

சாட்சிகள் மூலம் விபச்சாரத்தை நிரூபிப்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் ஆணுடைய உறுப்பு பெண்ணின் உறுப்பில் நுழைவதைப் பார்க்கும் சாட்சிகள் இருப்பது சிரமமான காரியமாகும்.

இஸ்லாம் துவங்கிய காலம் முதல் எனது காலம் வரை சாட்சிகள் கூறியதன் அடிப்படையில் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டனர். ஏனெனில் இதற்கு சாட்சிகள் இருப்பது சிரமமாகும் என்று இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை சமகால சவூதி அறிஞர் உஸைமீன் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆணும், பெண்ணும் இருவரும் ஆடையின்றி இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்று நான்கு பேர் கூறினாலும் இது ஏற்கப்படாது.

ஒரு கணவன் தன் மனைவியிடம் எப்படி இருப்பானோ அப்படி இருக்கக் கண்டோம் என்று கூறினாலும் அந்த சாட்சியமும் போதாது.

இவனது உறுப்பு அவளது உறுப்புக்குள் இருப்பதைப் பார்த்தோம் என்று சொல்ல வேண்டும். இது முற்றிலும் சிரமமானதாகும் என்றும் கூறுகிறார்.

மனைவியுடன் கணவன் இருப்பது போல் கண்டோம் என்று நால்வர் சாட்சி சொன்னாலும், அவர்கள் நேர்மையான சாட்சிகளாக இருந்தாலும் அவர்கள் அவதூறுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.

இது சாத்தியமற்றதாக இருந்தும் நான்கு சாட்சிகளை அல்லாஹ் விதியாக ஆக்கியுள்ளதன் நுணுக்கமான ஞானத்தை அல்லாஹ்வே அறிவான். நாலு பேர் பார்க்கும் படி வெளிப்படையாக விபச்சாரம் பெருகக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படிக் கூறி இருக்கலாம்.

நூல் : முஹம்மத் சாலிஹ் அல்முனஜ்ஜித் எழுதிய மவ்கிவுல் இஸ்லாம்.

இமாம் இப்னு தைமியா அவர்களின் மரணம் ஹிஜ்ரி 728 ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் 728 ஆண்டுகளில் நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

நாம் வாழும் 2018 வரை ஒரே ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

இவ்வசனம் அருளப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டதே இல்லை. இது கண் முன்னே தெரியும் உண்மையாகும். இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் வசனத்தை நாம் விளங்க வேண்டும்.

ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருப்பதை நால்வர் பார்த்து விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூறினால் அது குற்றமாகும். தனித்து இருந்ததைப் பார்த்தோம் என்று மட்டும் கூறினால் அது குற்றமில்லை. எதைப் பார்த்தார்களோ அதை மட்டும் கூறலாம்.

உண்மையில் அவர்கள் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது நான்கு பேர் கதவைத் தட்டி அவர்கள் கதவைத் திறந்தார்கள் என்றால் அப்போது கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூற முடியாது. ஏனெனில் இவர்கள் பார்க்கும் போது விபச்சாரம் செய்து கொண்டு இருக்கவில்லை.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு தான் மேற்கண்ட அறிஞர்கள் இது சாத்தியமற்றது ஆனாலும் இதன் காரணத்தை அல்லாஹ்வே அறிவான் என்று முடிக்கின்றார்கள்.

இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை மறுத்தவர்களாக மாட்டார்கள்.

யாரும் இந்த அடிப்படையில் தண்டிக்கப்பட்டதில்லை என்ற உண்மையைத் தான் சொல்கிறார்கள்.

அதே நேரம் அல்லாஹ் தவறாகக் கூறிவிட்டான் என்று இந்த அறிஞர்கள் சொல்லவில்லை. நமது அறிவு குறைவானது. அல்லாஹ் சொன்னால் அதற்கு உரிய அர்த்தம் இருக்கத் தான் செய்யும். நமக்கு விளங்காத ஏதோ ஒரு நுணுக்கமான விஷயத்துக்காக அல்லாஹ் கூறியிருப்பான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் வசனங்களை இப்படித்தான் அணுக வேண்டும்.

ஒரு காலம் வரலாம். அப்பட்டமாக உலகமே பார்க்கும் படி விபச்சாரம் நடக்கலாம். அப்போது இது சாத்தியமாகும். அல்லாஹ்வின் கூற்று பொய்யாகாது.

மேலும் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் செய்தாலும் நான்கு பேர் பார்த்து விட்டால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரும் என்று அஞ்சி விபச்சாரம் செய்வதை விட்டு விலகக் கூடும் என்பதற்காக அல்லாஹ் இச்சட்டத்தைக் கூறி இருக்கலாம். நமக்குத் தெரியாத வேறு காரணமும் இருக்கலாம்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...