112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்

இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் மக்கள் ஆர்வத்துடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர்.

“இருந்தாலும் இருக்கும்” என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர். இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள் மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா?

செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இஸ்லாம் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. ஒரு பெண் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தினால் குறைந்தபட்சம் நான்கு நேரடி சாட்சிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நான்கு சாட்சிகள் இல்லாமல் பெண்களின் கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால், அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட குற்றம் சுமத்தியவர்களுக்கு 80 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என இவ்வசனம் (24:4) கூறுகிறது.

ஒரு பெண் தவறாக நடப்பதை மூன்று ஆண்கள் பார்த்தாலும் அதை அவர்கள் பரப்புவது அவதூறாகவே கருதப்படும். அவர்களுக்கு எண்பது கசையடிகள் அடிக்கப்படும். நான்கு நபர்கள் நேரடியாகப் பார்த்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்படும்.

பெண்களைப் பற்றி வதந்தி பரப்புவோருக்கு எதிராக உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற கடுமையான சட்டங்களைப் பார்க்க முடியாது. பெண்களின் மானத்தையும், மரியாதையையும் காப்பதில் இஸ்லாம்  காட்டும் அக்கறையை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்துவோர் விபச்சாரம் செய்ததைக் கண்ட நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கூறுவது பொய் என எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

அதாவது விச்சாரம் செய்ததை நான்கு பேர் பார்க்க வேண்டும். அப்போது தான் இஸ்லாம் வழங்கும் தண்டனையை அளிக்க முடியும். ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருந்ததை நாற்பது பேர் பார்த்தாலும் அது விபச்சாரத்துக்கான சாட்சியமாக ஆகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.

ஒரு வீட்டுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் தனித்திருப்பதை நான்கு பேர் பார்த்தாலும்,

ஒரு ஆண் மட்டும் இருக்கும் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைவதையும் சில மணி நேரங்கள் கழித்து வெளியேறுவதையும் பார்த்தாலும்

அதுவும் விபச்சாரத்துக்கான சாட்சியமாகாது. தனித்து இருந்தார்கள் என்பதற்குத் தான் அது சாட்சியமாகும்.

இது  நடைமுறை சாத்தியமற்றதாகத் தோன்றலாம். இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் கூட இது சாத்தியமில்லாதது எனக் கூறியுள்ளனர்.

சாட்சிகள் மூலம் விபச்சாரத்தை நிரூபிப்பது சாத்தியமற்றதாகும். ஏனெனில் ஆணுடைய உறுப்பு பெண்ணின் உறுப்பில் நுழைவதைப் பார்க்கும் சாட்சிகள் இருப்பது சிரமமான காரியமாகும்.

இஸ்லாம் துவங்கிய காலம் முதல் எனது காலம் வரை சாட்சிகள் கூறியதன் அடிப்படையில் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டனர். ஏனெனில் இதற்கு சாட்சிகள் இருப்பது சிரமமாகும் என்று இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை சமகால சவூதி அறிஞர் உஸைமீன் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆணும், பெண்ணும் இருவரும் ஆடையின்றி இருந்ததை நாங்கள் பார்த்தோம் என்று நான்கு பேர் கூறினாலும் இது ஏற்கப்படாது.

ஒரு கணவன் தன் மனைவியிடம் எப்படி இருப்பானோ அப்படி இருக்கக் கண்டோம் என்று கூறினாலும் அந்த சாட்சியமும் போதாது.

இவனது உறுப்பு அவளது உறுப்புக்குள் இருப்பதைப் பார்த்தோம் என்று சொல்ல வேண்டும். இது முற்றிலும் சிரமமானதாகும் என்றும் கூறுகிறார்.

மனைவியுடன் கணவன் இருப்பது போல் கண்டோம் என்று நால்வர் சாட்சி சொன்னாலும், அவர்கள் நேர்மையான சாட்சிகளாக இருந்தாலும் அவர்கள் அவதூறுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார்.

இது சாத்தியமற்றதாக இருந்தும் நான்கு சாட்சிகளை அல்லாஹ் விதியாக ஆக்கியுள்ளதன் நுணுக்கமான ஞானத்தை அல்லாஹ்வே அறிவான். நாலு பேர் பார்க்கும் படி வெளிப்படையாக விபச்சாரம் பெருகக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படிக் கூறி இருக்கலாம்.

நூல் : முஹம்மத் சாலிஹ் அல்முனஜ்ஜித் எழுதிய மவ்கிவுல் இஸ்லாம்.

இமாம் இப்னு தைமியா அவர்களின் மரணம் ஹிஜ்ரி 728 ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் 728 ஆண்டுகளில் நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

நாம் வாழும் 2018 வரை ஒரே ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

இவ்வசனம் அருளப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒருவர் கூட நான்கு சாட்சிகள் மூலம் விபச்சாரத்துக்காக தண்டிக்கப்பட்டதே இல்லை. இது கண் முன்னே தெரியும் உண்மையாகும். இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் வசனத்தை நாம் விளங்க வேண்டும்.

ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருப்பதை நால்வர் பார்த்து விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூறினால் அது குற்றமாகும். தனித்து இருந்ததைப் பார்த்தோம் என்று மட்டும் கூறினால் அது குற்றமில்லை. எதைப் பார்த்தார்களோ அதை மட்டும் கூறலாம்.

உண்மையில் அவர்கள் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது நான்கு பேர் கதவைத் தட்டி அவர்கள் கதவைத் திறந்தார்கள் என்றால் அப்போது கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சாட்சி கூற முடியாது. ஏனெனில் இவர்கள் பார்க்கும் போது விபச்சாரம் செய்து கொண்டு இருக்கவில்லை.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு தான் மேற்கண்ட அறிஞர்கள் இது சாத்தியமற்றது ஆனாலும் இதன் காரணத்தை அல்லாஹ்வே அறிவான் என்று முடிக்கின்றார்கள்.

இவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை மறுத்தவர்களாக மாட்டார்கள்.

யாரும் இந்த அடிப்படையில் தண்டிக்கப்பட்டதில்லை என்ற உண்மையைத் தான் சொல்கிறார்கள்.

அதே நேரம் அல்லாஹ் தவறாகக் கூறிவிட்டான் என்று இந்த அறிஞர்கள் சொல்லவில்லை. நமது அறிவு குறைவானது. அல்லாஹ் சொன்னால் அதற்கு உரிய அர்த்தம் இருக்கத் தான் செய்யும். நமக்கு விளங்காத ஏதோ ஒரு நுணுக்கமான விஷயத்துக்காக அல்லாஹ் கூறியிருப்பான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் வசனங்களை இப்படித்தான் அணுக வேண்டும்.

ஒரு காலம் வரலாம். அப்பட்டமாக உலகமே பார்க்கும் படி விபச்சாரம் நடக்கலாம். அப்போது இது சாத்தியமாகும். அல்லாஹ்வின் கூற்று பொய்யாகாது.

மேலும் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் செய்தாலும் நான்கு பேர் பார்த்து விட்டால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரும் என்று அஞ்சி விபச்சாரம் செய்வதை விட்டு விலகக் கூடும் என்பதற்காக அல்லாஹ் இச்சட்டத்தைக் கூறி இருக்கலாம். நமக்குத் தெரியாத வேறு காரணமும் இருக்கலாம்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...