120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்

இவ்வசனத்தில் (4:59) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்றும், அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்றும் கூறப்படுகிறது,

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டு தலையும் மட்டுமே இஸ்லாமின் மூல ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

அந்தச் சான்றுகளைப் புறக்கணித்து விட்டு, மார்க்க அறிஞர்களின் கூற்றுக்களையும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வசனத்தை (4:59) இவர்கள் தமக்குரிய சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்; தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதுடன், “உலுல் அம்ருக்கும் கட்டுப்படுங்கள்” என்று இவ்வசனம் கூறுகின்றது. உலுல் அம்ரு என்பது மார்க்க அறிஞர்களைத் தான் குறிக்கும் என்பது இவர்களின் வாதம்.

இவ்வாதம் முற்றிலும் தவறாகும். இவ்வசனத்தில் உலுல் அம்ருக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறப்பட்டுள்ளது உண்மை தான். உலுல் என்றால் உடையவர் என்பது பொருள். அம்ரு என்றால் அதிகாரம் என்று பொருள். உலுல் அம்ரு என்றால் அதிகாரம் உடையவர் என்பது பொருளாகும்.

உலுல் அம்ரு என்ற சொல்லுக்கு மார்க்க அறிஞர்கள் என்ற பொருள் அறவே கிடையாது.

மார்க்கச் சட்டதிட்டங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்றாலும், மார்க்கம் சம்பந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கும் கட்டுப்பட வேண்டிய நிலைமை முஸ்லிம்களுக்கு ஏற்படாமல் இருக்காது.

நாட்டின் அதிபர்கள், பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவது இஸ்லாமுக்கு முரணாக அமையுமோ என்ற சந்தேகம் ஏற்படலாம். அந்தச் சந்தேகத்தை நீக்கிடவே “அதிகாரம் படைத்தவருக்கும் கட்டுப்படுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்படுகின்றது

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படும் போது, கட்டுப்படத் தக்கவை, கட்டுப்படத் தகாதவை என்ற இரண்டு நிலைகள் கிடையாது. அனைத்தையும் ஏற்று நாம் செயல்படுத்தியாக வேண்டும். ஆனால் அதிகாரம் படைத்தவர்களுக்குக் கட்டுப்படும் போது அவர்களின் கட்டளை, திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரணாக இருக்கலாம்; அல்லது திருக்குர்ஆனுக்கும் நபி வழிக்கும் முரணில்லாமல் இருக்கலாம்.

எவை திருக்குர்ஆனுக்கும், நபி வழிக்கும் முரணில்லாமல் இருக்கிறதோ அவற்றில் மட்டுமே அதிகாரம் உடையவர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் தான், இவ்வசனத்தின் இறுதியில், “(ஏதேனும் ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படுகின்றது.

எனவே, இவ்வசனம் மார்க்க அறிஞர்களுக்குக் கட்டுப்படுவதைப் பற்றிப் பேசவில்லை. மார்க்கத்திற்கு முரணான விஷயங்களில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவதையும் அனுமதிக்கவில்லை.

பொதுவாகத் தங்கள் மீது மக்கள் வைக்கும் பக்தியையும், அளவு கடந்த நம்பிக்கையையும் அடிப்படையாக வைத்தே தலைவர்கள் மக்களை ஏமாற்றியும், வழிகெடுத்தும் வருகின்றனர். இத்தகையோரிடமிருந்து மக்களைக் காப்பாற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவ்வசனம் பெரிதும் துணை செய்யும்.

ஒருவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அறிஞராக இருந்தாலும், மகானாக இருந்தாலும், அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் அவர் கூறுவது திருக்குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் முரணில்லாமல் இருந்தால் மட்டுமே அவர் கூறுவதைக் கேட்கலாம். இந்த அளவுகோலை எப்போதும் மறவாமல் நினைவில் வைத்திருப்பவர்களை மார்க்கத்தின் பெயரால் யாராலும் வழிகெடுத்து விட முடியாது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...