17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே?

15 ஏக்கர் சொத்து வாங்கினீர்களா

சமீபத்தில் நீங்கள் திருச்சிக்கு அருகில் பதினைந்து ஏக்கர் சொத்து வாங்கியதாக குழுமங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா?

– அப்பாஸ் இப்ராஹீம், ஆவடி

? நான் பதினைந்து ஏக்கரோ, பதினைந்தாயிரம் ஏக்கரோ வாங்கினாலும் அதை யாரும் விமர்சிக்க கடுகளவும் இடமில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் தலைமைப் பதவி வகிக்கும் ஜமாஅத்தின் மூலம் பணம் திரட்டி எதையாவது வாங்கினால் தான் யாரும் விமர்சிக்கலாம்.

ஆனால் இந்த ஜமாஅத்துக்கு நான் தலைவனாக இருந்தாலும் இதன் வரவு செலவுகளை நான் செய்வது இல்லை. யாரும் நன்கொடை கொடுத்தால் கூட அதை என் கையால் தொடுவது இல்லை. இன்னொரு நிர்வாகியை வரவழைத்து அவர் கையில் கொடுக்கச் செய்து ரசீது போட்டுக் கொடுத்து விடுவேன். சரியாக செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிப்பவனாகவும் கேள்வி கேட்பவனாகவும் தான் நான் இருக்கிறேன்.

ஒரு பைசாவையும் நான் கையாள்வது இல்லை.

நான் பீஜேயிடம் இவ்வளவு கொடுத்தேன்; அதற்கு ரசீது தரவில்லை என்று ஒருவரும் கூற முடியாது. அது போல் ஜமாஅத் பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்றோ, கடனாக வாங்கியுள்ளேன் என்றோ ஒருவரும் சொல்ல முடியாது. இப்போது நிர்வாகியாக இருக்கும் யாரிடமும் இதைக் கேட்டு உறுதி செய்யலாம். ஊழியர்களிடமும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அப்படியானால் நான் எத்தனை கோடிக்கு சொத்து வாங்கினாலும் கண்டிப்பாக அது ஜமாஅத் பணமாகவோ, ஜமாஅத்தை வைத்து சம்பாதித்த பணமாகவோ இருக்க முடியாது.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஜமாஅத் 2004 ல் புணரமைப்பு செய்யப்பட்டது. அந்த 2004ல் இருந்து இன்றைய தேதிவரை உலகில் எந்த இடத்திலும் ஒரு ஜான் இடமும் நான் வாங்கியதில்லை. என் மனைவி மக்களும் வாங்கியதில்லை. இரு சக்கர வாகனமோ நான்கு சக்கர வாகனமோ கூட வாங்கியதில்லை.

எனவே இது அப்பட்டமான பொய் என்பதை இரண்டாவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நம்முடைய ஜமாஅத்தில் உறுப்பினராக இல்லாமல் நமது செயல்பாடுகளைக் கண்காணித்து வரக்கூடிய ஒரு செல்வந்தர் இந்த ஜமாஅத்தின் நம்பகத் தன்மையால் கவரப்பட்டு தனக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் நிலத்தை இலவசமாக எழுதித் தந்துள்ளார்.

இது முறைப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய ஸ்டாம்ப் வரி செலுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. நம் ஜமாஅத்துக்காக மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தான் இப்படி திரித்து கதை கட்டி இருக்கக் கூடும். அந்தச் சொத்தில் எனக்கு கடுகளவும் உரிமை இல்லை என்பதை மூன்றாவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு: அல்தாபி 17 ஏக்கர் தன்பெயரில் எழுதிக் கொண்டார் என்று சிலர் சொன்னாலும் சொல்வார்கள். ஜமாஅத்துக்கு வங்கினாலும் ஜமாஅத்தின் சார்பில் ஒரு மனிதன் தான் கையெழுத்துப் போட வேண்டும். ஜமாஅத் வந்து கையெழுத்து போடாது. ஜமாஅத்துக்காக இன்னார் என்று குறிப்பிட்டால் அதில் அந்த நபர் எள்ளளவும் அநதச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.

உணர்வு 16:25

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற ...

ஒட்டு முடி வைக்கலாமா

ஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...