17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே?

15 ஏக்கர் சொத்து வாங்கினீர்களா

சமீபத்தில் நீங்கள் திருச்சிக்கு அருகில் பதினைந்து ஏக்கர் சொத்து வாங்கியதாக குழுமங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா?

– அப்பாஸ் இப்ராஹீம், ஆவடி

? நான் பதினைந்து ஏக்கரோ, பதினைந்தாயிரம் ஏக்கரோ வாங்கினாலும் அதை யாரும் விமர்சிக்க கடுகளவும் இடமில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நான் தலைமைப் பதவி வகிக்கும் ஜமாஅத்தின் மூலம் பணம் திரட்டி எதையாவது வாங்கினால் தான் யாரும் விமர்சிக்கலாம்.

ஆனால் இந்த ஜமாஅத்துக்கு நான் தலைவனாக இருந்தாலும் இதன் வரவு செலவுகளை நான் செய்வது இல்லை. யாரும் நன்கொடை கொடுத்தால் கூட அதை என் கையால் தொடுவது இல்லை. இன்னொரு நிர்வாகியை வரவழைத்து அவர் கையில் கொடுக்கச் செய்து ரசீது போட்டுக் கொடுத்து விடுவேன். சரியாக செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிப்பவனாகவும் கேள்வி கேட்பவனாகவும் தான் நான் இருக்கிறேன்.

ஒரு பைசாவையும் நான் கையாள்வது இல்லை.

நான் பீஜேயிடம் இவ்வளவு கொடுத்தேன்; அதற்கு ரசீது தரவில்லை என்று ஒருவரும் கூற முடியாது. அது போல் ஜமாஅத் பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்றோ, கடனாக வாங்கியுள்ளேன் என்றோ ஒருவரும் சொல்ல முடியாது. இப்போது நிர்வாகியாக இருக்கும் யாரிடமும் இதைக் கேட்டு உறுதி செய்யலாம். ஊழியர்களிடமும் இதைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அப்படியானால் நான் எத்தனை கோடிக்கு சொத்து வாங்கினாலும் கண்டிப்பாக அது ஜமாஅத் பணமாகவோ, ஜமாஅத்தை வைத்து சம்பாதித்த பணமாகவோ இருக்க முடியாது.

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஜமாஅத் 2004 ல் புணரமைப்பு செய்யப்பட்டது. அந்த 2004ல் இருந்து இன்றைய தேதிவரை உலகில் எந்த இடத்திலும் ஒரு ஜான் இடமும் நான் வாங்கியதில்லை. என் மனைவி மக்களும் வாங்கியதில்லை. இரு சக்கர வாகனமோ நான்கு சக்கர வாகனமோ கூட வாங்கியதில்லை.

எனவே இது அப்பட்டமான பொய் என்பதை இரண்டாவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நம்முடைய ஜமாஅத்தில் உறுப்பினராக இல்லாமல் நமது செயல்பாடுகளைக் கண்காணித்து வரக்கூடிய ஒரு செல்வந்தர் இந்த ஜமாஅத்தின் நம்பகத் தன்மையால் கவரப்பட்டு தனக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் நிலத்தை இலவசமாக எழுதித் தந்துள்ளார்.

இது முறைப்படி அரசுக்குச் செலுத்த வேண்டிய ஸ்டாம்ப் வரி செலுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. நம் ஜமாஅத்துக்காக மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தான் இப்படி திரித்து கதை கட்டி இருக்கக் கூடும். அந்தச் சொத்தில் எனக்கு கடுகளவும் உரிமை இல்லை என்பதை மூன்றாவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு: அல்தாபி 17 ஏக்கர் தன்பெயரில் எழுதிக் கொண்டார் என்று சிலர் சொன்னாலும் சொல்வார்கள். ஜமாஅத்துக்கு வங்கினாலும் ஜமாஅத்தின் சார்பில் ஒரு மனிதன் தான் கையெழுத்துப் போட வேண்டும். ஜமாஅத் வந்து கையெழுத்து போடாது. ஜமாஅத்துக்காக இன்னார் என்று குறிப்பிட்டால் அதில் அந்த நபர் எள்ளளவும் அநதச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.

உணர்வு 16:25

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...