1980களில் ஏகத்துவப் புரட்சி-

மலரும் நினைவுகள்!

பொதுவாக 80 களில் (1980) தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை தலை தூக்க ஆரம்பித்தது என்று சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இந்தச் சிந்தனையின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்தது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் மனப்பாங்கு, சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை துணிந்து சொல்லும் நெஞ்சுரம் போன்றவை ஆங்காங்கே துளிர்விடத்தான் செய்தன.

இதற்கு ஆதாரமாக சில செய்திகளைத் தரலாம் என்று எண்ணுகிறோம்.

1980 க்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பள்ளி மற்றும் மதரசாவில் பணி புரிந்த பீ. ஷேக் அலாவுதீன் என்கிற பீ.எஸ் அலாவுதீன், பீ. ஜைனுல் ஆபிதீன் ஆகிய இரண்டு சகோதரர்கள் அப்போதைய அப்பள்ளி நிர்வாகத்தினரின் கருத்துக்களோடு முரண்பட்டு, சங்கரன்பந்தல் என்ற ஊர் சென்றது பலருக்குத் தெரியாத செய்தியாக இருக்கலாம்.

அங்கே தான் இச்சகோதரர்கள் ஒத்த கருத்துடையோருடன் இணைந்து முழு மூச்சுடன் ஏகத்துவப் பிரச்சாரத்திலும், சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டனர்.

இச்சகோதரர்கள் உள்ளூரில் பணியாற்றிய போது பல்வேறு அனாச்சாரங்களை எதிர்த்து வந்ததால் சொந்த ஊரில் நண்பர்களை விட எதிரிகளை அதிகம் சம்பாதித்திருந்தனர். அவ்வாறு எதிர்த்த பலரின் வாரிசுகள் இப்போது ஏகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டது இறைவன் செய்த அருட்கொடைகளில் ஒன்று என்பது வேறு விஷயம்.

அப்பகுதிகளில் நடைபெற்ற சந்தனக்கூடு வைபவங்கள், தட்டு தாயத்து விற்பனைகள், மெளலீது கச்சேரிகள், வரதட்சணைத் திருமணங்கள், சடைப்பக்கீர்களின் கோமாளித்தனங்கள் போன்றவற்றை எதிர்ப்பதில் இவர்கள் காட்டிய வேகம் தீவிரமானதாகும்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வது அன்றைக்கு தொண்டியில் சமுதாயக் குற்றமாக கருதப்பட்ட காலத்தில் இச்சகோதரர்கள் இருவரும் தங்களது திருமணத்தின் போது வரதட்சணை வாங்கவில்லை.

மேலும், இவர்களின் இளைய (மூன்றாம்) சகோதரரின் திருமணமும் எந்தவித வரதட்சணையும் இல்லாமல் தான் நடந்தேறியது.

இது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான உள்ளூர் மக்கள் பிரட்சனைக்காகவும் இச்சகோதரர்கள் அக்காலகட்டத்தில் போராடினர்.

இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

அவர்களின் சொந்த ஊரான தொண்டிக்கும் அருகிலுள்ள தாலுக்காத் தலைநகரான திருவாடானை என்ற ஊருக்கும் பல ஆண்டுகளாக நகரப்பேருந்து இல்லாத நிலை இருந்தது.

இதற்கென போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் உள்ளூர் அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்ட போது, அவர்களோடு இணைந்து போராடி நகரப்பேருந்து வசதிப் பெற்று தந்ததில் இச்சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என உள்ளூர்வாசிகள் இன்றும் கூறுகிறார்கள்.

இவர்கள், தங்களின் சொந்த ஊரில் (தொண்டி) பணியாற்றிய காலத்தில் கேரளாவிலிருந்து அந்தர் தீவு மவ்லானா என்ற நபர் ஒருவர் வந்திருந்தார். இவரைப் பெரிய மகான் என்றும், அவ்லியா என்றும் உள்ளூர் ஜமாஅத்தினர் கூறிக்கொண்டு அவருக்கு பெரும் மரியாதையெல்லாம் செய்து வந்தனர்.

இவர் கூறினால் மழை வரும், இவரிடம் அபூர்வ சக்திகள் பல உள்ளன என்ற ரீதியில் ஊரில் செய்திகள் பரப்பப்பட்டன.

இதை விமர்சித்த இவர்களை (பீ.எஸ். அலாவுதீன் மற்றும் பீ. ஜைனுல் ஆபிதீன்) அம்மகானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜமாஅத்தினர் உத்தரவிட்டனர்.

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று கூறித் தான் இவர்கள் ஊரை விட்டு கிளம்பி தஞ்சை மாவட்டம் வந்தடைந்தனர்.

சங்கரன்பந்தல் அருகிலுள்ள பெரம்பூர், காரைக்கால், கிளியனூர் ஆகிய ஊர்களில் சொந்தமாக மளிகை வியாபாரம் சிலகாலம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தான் ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவராகவும், கிளியனூர் (மயிலாடுதுறறை) அரபுக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்த அறிஞர் அப்துஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி இவ்விருவரையும் சந்தித்து, திறமைமிக்க நீங்கள் இருவரும் வியாபாரத்தில் இறங்கி உங்கள் திறமைகளை வீணடிக்க வேண்டாம். பள்ளிவாசல்களில் இமாமாக பணியாற்றுவது சுயமரியாதையைப் பாதிக்கும் என்று நீங்கள் எண்ணினால் ஏதாவது அரபுக்கல்லூரியில் நீங்கள் இருவரும் பேராசிரியராக பணியாற்றலாமே என்று கூறி வந்தார்.

கடைசியில் அவரது அறிவுரை பலன் தந்தது. இருவரும் அரபுக்கல்லூரிகளில் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.

இதன் பின்னர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் சங்கரன்பந்தல் மதரசாவில் முதல்வராக அவராலேயே (அப்துஸ்ஸலாம் ஹஜரத்) சேர்த்து விடப்பட்டார்.

மற்றொரு சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீனை தம்முடைய கிளியனூர் மதரசாவில் பேராசிரியராக சேர்த்துக் கொண்டார். பின்னர், அவரும் (பிஜே) சங்கரன்பந்தல் மதரசாவிலேயே பேராசிரியராக சேரும் வாய்ப்பு ஏற்பட்டது.

சகோதரர்கள் இருவரும் இடையில் சிறிது காலம் நிறுத்தியிருந்த ஏகத்துவப்பணிகளை முழுவீச்சுடன் மீண்டும் செய்யத் துவங்கினார்கள்.

இச்சகோதரர்களில் மூத்தவரான பீ.எஸ். அலாவுதீன் (1985 இல்) கடும் நோய்வாய்ப்பட்டிருந்த போதும், உள்ளூர் ஜும்மாக்களில் நடத்தப்பட்ட அபத்தங்களை படுத்துக் கொண்டே எதிர்த்து வந்தார்.

அதற்கு ஆதாரமாக அப்போது வெளியிடப்பட்ட ஈட்டியின் முனையில்.. என்ற தலைப்பிலான பிரசுரம் ஆதாரமாக உள்ளது.

கடும் இதய நோயால் அவதிப்பட்ட அவரிடம் உறவினர்கள் சிலரால் தொண்டியில் உள்ள தர்கா ஒன்றில் தங்கி அவ்லியாக்களிடம் வேண்டினால் எல்லா நோய்களும் குணமாகும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டது.

ஆயினும், அவர் கடைசி மூச்சுள்ள வரை இது போன்ற யோசனைகளுக்கோ, தட்டு தாயத்து போன்ற மந்திர தந்திரங்களுக்கோ உடன்படவேயில்லை.

பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் மதுரை மருத்துவமனை ஒன்றில் இருந்த காலகட்டத்தில் ஏகத்துவ சிந்தனைவாதிகள் மற்றும் அவரது மாணவர்கள் ஆகியோர் அவருக்கு உதவியாக இருந்தனர்.

பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் மிகவும் நோயுற்ற காலகட்டத்தில் தான் நஜாத் மாத இதழ் திருச்சியிலிருந்து வெளியானது.

பின்னர், இவ்விதழ் அந்நஜாத் என்று பெயர் மாற்றப்பட்டது.

அந்நஜாத், புரட்சி மின்னல், அல்முபீன், அல்ஜன்னத், ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மணி என்று ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் இதழ்களின் பட்டியல் நீண்டன.

உணர்வு இதழைப் பொறுத்தவரை அது சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களுக்கும் முஸ்லிம்களின் பல்வேறு ஜீவாதாரப் பிரச்சனைகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அந்நஜாத், அல்ஜன்னத், ஆகியன, தற்போது வேறு சிலரது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. புரட்சி மின்னல் மற்றும் அல்முபீன் போன்றவை ஏகத்துவம் இதழாக வளர்ந்து வெளியாகி வருகிறது.

தீன்குலப்பெண்மணியானது முஸ்லிம் பெண்களுக்கான இதழாக பரிணமிக்கிறது.

இந்த அச்சு ஊடகங்களை விட தொலைக்காட்சியில் தினசரி இரவு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் தான் மக்களை அதிகமாகவும், விரைவாகவும் சென்றடைவதில் முதலிடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நஜாத் வெளிவருவதற்கு முன்னேயே நர்கிஸ் மாத இதழில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதி வந்த விற்பனைக்காக கற்பனைக் கதைகள் என்ற ஆய்வுத் தொடர் ஏகத்துவ சிந்தனைகளுக்கு உரமிட்டது எனலாம்.

ஆயினும், அப்பத்திரிக்கை நிர்வாகம், ஒரு சில சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (?) மிரட்டலுக்குப் பயந்து தொடரை இரண்டு மூன்று அத்தியாயங்களோடு நிறுத்திக் கொண்டது.

நஜாத்தின் முதல் இதழில் (1985) சகோதரர் பீ.எஸ். அலாவுதீன் அவர்களின் கட்டுரை வெளியானது. அடுத்த இதழ் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.

அவரின் அகால மரணத்திற்கு அப்போதைய காலகட்டத்தில் காட்டப்பட்ட தீவிர கபுர் வணக்க எதிர்ப்பே காரணமென்றும், அவ்லியாக்களின் கோபப்பார்வைக்கு ஆளாகி விட்டார் என்றும் தர்கா வணங்கிகளால் செய்திகள் பரப்பப்பட்டதை அந்நேரத்தில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும், சகோதரர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் நோய் வாய்ப்பட்ட நேரத்தில் மற்றொரு சகோதரரான பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காயல்பட்டினத்தில் இணை வைப்பவர்களுடன் நடத்திய முபாஹலாவும் இவரது சகோதரரின் மரணத்திற்கு காரணம் என்றும் செய்திகள் பரப்பினர் தர்கா வணங்கிகள்.

இந்த பொய்யுரைகளையெல்லாம் மீறி இன்று எண்ணற்றவர்களின் கொள்கையாக இந்த ஏகத்துவக் கருத்துக்கள் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு வல்ல இறைவனே காரணம்.

– ஹலிமா

நன்றி: உணர்வு வார இதழ்

(கடந்த 2008 ஆம் ஆண்டு உணர்வு வார இதழில் வெளியான கட்டுரை)

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...