279. ஜிப்ரீலின் கூற்று திருக்குர்ஆனில் இடம் பெறுமா?

திருக்குர்ஆன் வானவர்களின் கூற்று என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் (19:64) அமைந்துள்ளது.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக இருந்தால் இறைவன் அதை எடுத்துக் காட்டும் வகையில் தான் இடம் பெற வேண்டும்.

ஆனால் இந்த வசனத்தில் “இறைவனின் அனுமதி இல்லாமல் நாம் இறங்க மாட்டோம்” என்று வானவர் கூறுவது திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. வானவரின் சொந்தக் கூற்று எவ்வாறு திருக்குர்ஆனில் இடம் பெறலாம் என்ற சந்தேகம் இங்கே எழக்கூடும். ஆயினும் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்ற சொல்லமைப்புகள் காணப்படுகின்றன.

இதற்குக் காரணம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் நூலாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகவே வழங்கப்பட்டது. பேச்சு வழக்கில் சில சொற்களை நாம் கூறாவிட்டாலும் சூழ்நிலையை வைத்து அதைப் புரிந்து கொள்வோம்.

ஒரு சபையில் இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் இடையே உள்ள விவகாரத்தை சபைத் தலைவர் விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஒருவர் அப்படியே எழுதுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

நீ செய்தாயா என்று தலைவர் இஸ்மாயீலிடம் கேட்டார்.

நான் செய்யவில்லை என்று இஸ்மாயீல் சொன்னார்.

உடனே தலைவர் இப்ராஹீமை நோக்கி இவர் செய்யவில்லை என்கிறாரே? ஆதாரமில்லாமல் ஏன் குற்றம் சாட்டுகிறாய் என்று கேட்டார்.

என்னிடம் ஆதாரம் உள்ளது என்று இப்ராஹீம் சொன்னார்.

அந்த விசாரணையை இப்படி ஒருவர் எழுதுகிறார் என்றால் இது அவர் புரிந்து கொண்ட அடிப்படையில் எழுதியதாகும். ஆனால் அங்கே பேசப்பட்ட சொற்களை மட்டும் எழுதினால் எப்படி இருக்கும்?

நீ செய்தாயா? நான் செய்யவில்லை. இவர் செய்யவில்லை என்கிறாரே? ஆதாரமில்லாமல் ஏன் குற்றம் சாட்டுகிறாய்? என்னிடம் ஆதாரம் உள்ளது.

அந்த சபையில் பேசப்பட்டது இவ்வளவு தான். இரண்டு பாராக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பேச்சின் போது எவ்வளவு வார்த்தைகள் விடுபட்டுள்ளன என்று பாருங்கள். இப்படிச் சொன்னார். அப்படிக் கேட்டார் என்பது போன்ற சொற்களை நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் பல உரையாடல்கள் அமைந்துள்ளன.

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட லவ்ஹூல் மஹ்பூலில் இருக்கிறது. அல்லாஹ்வின் அனுமதியுடன் ஜிப்ரீல் அவ்வப்போது எடுத்து வந்து சொல்வார்.

சில நாட்கள் வஹீ வராமல் போகும் என்பதும், லவ்ஹுல் மஹ்பூலில் எழுதப்பட்டு இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கவலைப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டு இருந்தது. அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் நாம் இறங்க மாட்டோம் என்ற வசனத்தை லவ்ஹுல் மஹ்பூலில் இருந்து ஜிப்ரீல் எடுத்துச் செல்வார் என்பதும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

(இது பற்றி மேலதிக விபரத்தை அறிய 492வது குறிப்பை வாசிக்கவும்)

அதனடிப்படையில் நாம் இறங்க மாட்டோம் என்று ஜிப்ரீல் கூறினார் என்றால் நாம் இறங்க மாட்டோம் என்பதை அல்லாஹ் கூறச் சொன்னான் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்ன அனைத்துமே அல்லாஹ் கூறச் சொன்னவை தான்.

இது போல் 37:164 வசனத்தில் எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள் என்று உள்ளது.

நாங்கள் என்பது வானவர்களைக் குறிக்கிறது. வானவர்களே நேரடியாகக் கூறியது திருக்குர்ஆனில் இடம் பெற்றதாக நினைக்கக் கூடாது. இப்படி அல்லாஹ் கூறச் சொன்னான் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் ஒலி வடிவமாக அருளப்பட்டதால் அருளப்படும் சூழ்நிலையை வைத்துப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காக பேச்சு வழக்குக்கு ஏற்ப திருக்குர்ஆனும் இந்த நடையைப் பயன்படுத்தியுள்ளது.

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...