315. மிஅராஜ் என்ற விண்வெளிப் பயணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் மக்காவில் இருந்து ஜெருசலத்துக்கும், அங்கிருந்து விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அல்லாஹ்வின் ஏராளமான அத்தாட்சிகளை அவர்கள் பார்த்து விட்டு திரும்பி வந்ததாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தப் பயணம் மிஅராஜ் என்று சொல்லப்படுகிறது.

தவறான கொள்கையுடைய சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மிஅராஜ் எனும் விண்வெளிப் பயணம் சென்றதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களை மறுக்கின்றனர்.

17:1 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்காவில் இருந்து ஜெருசலம் வரை அழைத்துச் சென்றதாக அல்லாஹ் கூறுகிறான். ஜெருசலமிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் சென்றதாகக் கூறும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரணானது என்பது தான் இவர்கள் மிஅராஜை மறுப்பதற்குக் காரணம்.

17:1 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து ஜெருசலம் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மிஅராஜ் என்பது இவ்வசனத்துக்கு எதிரானது அல்ல. முரணானதும் அல்ல. இவ்வசனம் சொல்லாத கூடுதல் தகவல் தான் ஹதீஸ்களில் உள்ளது.

மிஅராஜ் குறித்த ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியைச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஐம்பது நேரத் தொழுகை ஐந்து நேரமாகக் குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பை திருக்குர்ஆனின் இவ்வசனம் (32:23) உண்மைப்படுத்துகிறது.

மூஸா நபியைச் சந்தித்ததில் உமக்குச் சந்தேகம் வர வேண்டாம் என்று இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மூஸா நபியவர்கள் மரணித்து விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியைப் பார்த்திருக்க முடியாது.

இறந்து போனவரை உயிரோடு இருப்பவர்கள் ஒருக்காலும் பார்க்க முடியாது; ஆயினும் இறைவன் தனது ஆற்றலைக் காட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘மிஅராஜ்’ என்ற விண்வெளிப் பயணம் அழைத்துச் சென்றான்.

அங்கே அவர்கள் மூஸா நபியைச் சந்தித்தார்கள். மற்றவர்களை விட அவர்களிடம் அதிகமான நேரம் உரையாடினார்கள். அந்தச் சந்திப்பைத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மூஸாவைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்; நீர் உண்மையாகவே சந்தித்தீர்; நீர் சந்தித்தது அவரைத் தான் என்ற கருத்துப்பட அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.

இவ்வசனத்தில் (32:23) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

அவர் என்பது மூஸா நபியைக் குறிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் சென்ற போது மூஸா நபியைச் சந்தித்தது குறித்து இவ்வசனம் பேசுகிறது என்று நாம் கூறுகிறோம்.

லிகாயிஹி என்ற சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கண விதிப்படி இச்சொல்லுக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ள முடியும்.

அவரைச் சந்தித்தது

அவர் சந்தித்தது

இப்படி இரு விதங்களாக பொருள் செய்ய இடமுள்ளது.

அவரைச் சந்தித்ததில் நீ சந்தேகப்பட வேண்டாம் என்று பொருள் கொண்டால் மூஸா நபியைத்தான் நீ சந்தித்தாய் அதில் உனக்கு சந்தேகம் வேண்டாம் என்ற கருத்து வரும்.

மிஅராஜ் பயணத்தில் அல்லாஹ் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டி அவர்களுடன் உரையாட செய்தான். அந்த ச்ந்திப்பு பிரேமை என நினைக்காதே! மூஸா நபி இறந்து விட்டாலும் அவரைச் சந்திக்க வைக்க என்னால் முடியும் என்பதால் அதில் உமக்கு சந்தேகம் வேண்டாம் என்பது இந்த மொழி பெயர்ப்பின் கருத்தாகும்.

அவர் சந்தித்ததில் உமக்குச் சந்தேகம் வேண்டாம் என்று பொருள் கொண்டால் அவர் – மூஸா – இறைவனைச் சந்தித்துள்ளார். அதில் உமக்குச் சந்தேகம் வேண்டாம் என்பது இதன் கருத்து.

இப்படி மொழி பெயர்க்க இலக்கணம் இடம் தந்தாலும் இதன் கருத்து சரியல்ல என்பதால் நாம் செய்த மொழியாக்கமே சரியானது.

மூஸா நபி இறைவனைச் சந்திக்க கோரிக்கை வைத்த போது அவர்களை அல்லாஹ் மூர்ச்சை அடையச் செய்தான். அவர்கள் இறைவனைச் சந்திக்கவில்லை. இதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது. இது குறித்து 21வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

மற்றும் சிலர் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஅராஜ் பயணத்தில் அல்லாஹ்வைச் சந்தித்தது பற்றிக் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதால் அதற்கு முரணான இந்தக் கருத்தை ஏற்க முடியாது. இது குறித்த ஆதாரங்களை 482 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் அவனைச் சந்திப்பதில் நீர் சந்தேகிக்காதீர் என்று கூறுகின்றனர். அதாவது மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதில் சந்தேகிக்க வேண்டாம் என்று இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

இது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஅராஜ் சம்பவம் பற்றிப் பேசும் போது தான் இவ்வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகம்) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். மூஸா (அலை) அவர்கள் “ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவராகவும், உயரமானவராகவும், சுருள்முடியுடைவராகவும் இருந்தார்கள். மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும், சிவப்பும் வெண்மையும் கலந்த, மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான மாலிக்கும், தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை என்று கூறிவிட்டு, “நீர் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்”. (32:23) என்ற வசனத்தையும் ஓதினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 267

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஒரு வசனத்திற்குரிய பொருளைக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக மொழிபெயர்த்தவர்களின் கருத்துக்களின் பக்கம் நாம் திரும்ப வேண்டிய அவசியமில்லை.

இது, மிஅராஜ் என்ற நிகழ்ச்சி உண்மை என்பதற்குரிய தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மிஅராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரணானது அல்ல என்பதை 53:13-18 வரை உள்ள வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன.

மிஅராஜ் பயணம் குறித்து மேலும் அறிய 263, 267, 362 ஆகிய குறிப்புகளைக் காண்க!

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...