35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?
2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது.
இச்சொல்லை மகாமே இப்ராஹீம் என்று அரபியரல்லாத பலரும் குறிப்பிடுகிறார்கள். மகாமே என்பது பாரசீக உச்சரிப்பாகும். அரபு உச்சரிப்பின் படி மகாமு என்று தான் சொல்ல வேண்டும்.
மகாம் என்ற சொல்லுக்கு நின்று வணங்கிய இடம், நின்று வனங்கிய திசை ஆகிய இரு அர்த்தங்கள் உள்ளன. இந்த இடத்தில் இப்றாஹீம் நபி அவர்கள் நின்று வணங்கிய திசை என்பதே பொருளாகும்.
கஅபா ஆலயம் அல்லாஹ்வை வணங்கும் பள்ளிவாசலாக இப்ராஹீம் நபியால் கட்டப்பட்டது. அதற்குள்ளே தான் அவர்கள் தொழுதார்கள். கஅபாவுக்குள் இப்ராஹீம் நபி தொழுத திசை தான் மகாமு இப்ராஹீம் ஆகும். கஅபாவின் உள்ளே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இப்ராஹீம் நபி தொழுதார்கள்.
ஆனால் நாம் கஅபாவுக்குள் போய் தொழுவதில்லை. நாலா புறமும் கஅபாவை நோக்கித் தொழுகிறோம். அவ்வாறு தொழும் போது சில தொழுகைகளையாவது கஅபாவுக்குள் தொழுவது போல் அதாவது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தொழ வேண்டும்.
இது குறித்த விளக்கம் வருமாறு:
மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.
“இப்ராஹீம் நபியவர்கள் ஒரு கல் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்கள்; எந்தக் கல்லின் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்களோ அந்தக் கல் இது தான். இதுவே மகாமு இப்ராஹீம்” என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.
மகாமு இப்ராஹீம் எதைக் குறிக்கிறது என்பதை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதை விட, திருக்குர்ஆனையும், நபிவழியையும் அடிப்படையாக வைத்து முடிவு செய்வதே சரியானதாகும்.
மகாமு இப்ராஹீமில் தொழுமாறு கட்டளையிடும் வசனத்தைச் சிந்தித்தால் மகாமு இப்ராஹீம் என்பது அந்தக் கல் அல்ல என்பதை அறியலாம்.
மகாமு இப்ராஹீம் பற்றி இறைவன் பேசும் போது, “மின் மகாமி இப்ராஹீம் – மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிடுகின்றான். தொழுவதற்கு வசதியான ஒரு இடமே மகாமு இப்ராஹீம் என்பது இதிலிருந்து தெளிவாகும்.
மகாமு இப்ராஹீம் என்பது ஒரு குறிப்பிட்ட கல் அல்ல; பெரிய பரப்பளவைக் கொண்ட ஓர் இடம் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது. அந்த விரிவான இடத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்ற கருத்தைத் தரும் வகையில் தான் இந்த வசனம் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட கல்லை மகாமு இப்ராஹீம் என்று சொல்பவர்கள் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழுவதில்லை. அதன் மீது ஏறித் தொழவும் முடியாது. எனவே மகாமு இப்ராஹீம் என்பது அக்கல்லைக் குறிக்காது.
இதனால் தான், “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற கட்டளை வந்தவுடன், (கஅபாவின் சுவற்றுடன் சேர்ந்திருந்த) மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்படும் கல்லுக்குப் பின்னால் (அதாவது மகாமு இப்ராஹீம் என்ற கல்லை நோக்கி) நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். (பார்க்க: புகாரீ 396, 1192, 1600, 1624, 1627, 1646, 1692, 1794)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் விளக்கம் மகாமு இப்ராஹீம் என்பதன் பொருளைத் தெளிவாக்குகின்றது. கஅபாவின் நான்கு திசைகளில், மகாமு இப்ராஹீம் என்றழைக்கப்படும் கல் உள்ள கிழக்குப் பகுதி தான் மகாமு இப்ராஹீம் ஆகும்.
அந்தக் கல் கஅபாவின் வாசல் உள்ள திசையில் கஅபாவின் சுவற்றோடு ஒட்டி இருந்தது. பின்னர் உமர் (ரலி) ஆட்சியில் அதை பத்து மீட்டர் தள்ளி வைத்தார்கள். அப்படியே இன்று வரை நீடிக்கிறது. இப்போது மகாமு இப்ராஹீம் என்ற கல் உள்ள இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழவில்லை. அதற்கு பத்து மீட்டருக்கு முன்னால் தான் தொழுதார்கள்.
பொதுவாக கஅபாவின் நான்கு திசைகளிலிருந்தும் கஅபாவை நோக்கித் தொழலாம் என்பதை நாம் அறிவோம். ஏதேனும் ஒரு சில தொழுகைகளையாவது மகாமு இப்ராஹீம் என்ற கிழக்குத் திசையிலிருந்து கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
மகாமு இப்ராஹீம் எனும் மேற்குத் திசை நோக்கி சில தொழுகைகளையாவது தொழ வேண்டும் என்பதற்குக் காரணம் என்ன?
கஅபா என்பது முஹம்மது நபியின் சமுதாயத்துக்கு கிப்லாவாக ஆக்கப்பட்டுள்ளது. கஅபாவைச் சுற்றி எல்லா திசைகளிலும் தொழலாம். ஆனால் இப்ராஹீம் நபி அவர்கள் கஅபா ஆலயத்தைக் கட்டியது அதைச் சுற்றி தொழுவதற்காக அல்ல. அதனுள் தொழுவதற்காகவே கட்டினார்கள்.
கஅபாவின் வாசல் கிழக்குப் பக்கம் உள்ளது. அதைத் திறந்து கொண்டு உள்ளே சென்று எதிரில் உள்ள திசை தான் மேற்குத் திசை தான் இப்ராஹீம் நபியவர்களுக்கு கிப்லாவாக இருந்தது. அது தான் மகாமு இப்ராஹீம் என்பது. மாகாமு இப்ராஹீம் என்றால் நின்ற இடம், நின்று வணங்கிய திசை என்று இரு பொருள் உண்டு. இந்த இடத்தில் நின்று வணங்கிய திசை என்பது தான் பொருள்.
இதை இப்னு உமர் ரலி அவர்களின் செயல் விளக்கத்தில் இருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவுக்குள் நுழையும் போது பிலால், உஸாமா, உஸ்மான் பின் தல்ஹா ஆகிய மூவர் மட்டுமே நுழைந்தார்கள். அவர்கள் வெளியே வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே தொழுதார்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பிலால் (ரலி) அவர்கள் ஆம் யமானி பகுதியில் உள்ள இரு தூண்களுக்கிடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று குறிப்பிட்டார்கள். பிலால் (ரலி) குறிப்பிட்ட அந்த இடத்தில் இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள். அதாவது வாசல் வழியாக உள்ளே சென்று வாசலை முகுதுக்குப் பின்னால் ஆக்கி எதிரில் உள்ள சுவற்றுக்கு மூன்று முழத்துக்கு முன்னால் தொழுதார்கள். (பார்க்க : புகாரி 1598, 1599)
மேலும், மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் அனைவருக்கும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். அனைவரும் மகாமு இப்ராஹீமில் தொழுவது சாத்தியமாக இருந்தால் தான் இறைவன் இவ்வாறு கட்டளையிட முடியும். குறிப்பிட்ட அந்தக் கல் இருக்கும் சிறிய இடம் தான் மகாமு இப்ராஹீம் என்றால் அங்கே குழுமும் லட்சோப லட்சம் மக்களில் ஒரே ஒருவர் கூட அதில் ஏறி தொழ முடியாது.
கஅபாவின் நான்கு திசைகளில் கிழக்குத் திசை மட்டுமே மகாமு இப்ராஹீம் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கினால், அனைத்து ஹாஜிகளும் அந்த இடத்தில் தொழும் வாய்ப்பைப் பெற முடியும்.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கஅபாவுடன் ஒட்டிக் கொண்டிருந்து பின்னர் இடம் மாற்றி வைக்கப்பட்ட கல், மகாமு இப்ராஹீம் என்று கூறப்படுவது ஏன் என்ற சந்தேகம் எழலாம்.
பொதுவாக ஒரு இடத்தை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்படும் பொருளே அந்த இடத்தின் பெயரைப் பெற்று விடுவது வழக்கத்தில் இருக்கிறது. மகாமு இப்ராஹீம் என்ற இடத்திற்கு அடையாளமாக அக்கல் இருந்ததால் அதுவே மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது.
“மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற கட்டளை வந்தவுடன் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழாமல் அது இருந்த திசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும்.
இதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
மக்கா என்று எழுதி ஒரு பெயர்ப் பலகை நடப்பட்டால் அந்தப் பலகை தான் மக்கா என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். அங்கிருந்து மக்கா நகரம் துவங்குகிறது என்றே புரிந்து கொள்வோம்.
அது போல் தான் “கஅபாவின் மற்ற மூன்று திசைகள் மகாமு இப்ராஹீம் அல்ல. அந்தக் கல் இருக்கும் கிழக்குத் திசை தான் மகாமு இப்ராஹீம்” என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கருத்தில் தான் அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது. அந்தக் கல்லே மகாமு இப்ராஹீமாக இருந்தால் அதை யாரும் இடம் மாற்றி வைக்க முடியாது. மகாமு இப்ராஹீம் என்ற பகுதியை அடையாளம் காட்டுவதாக இருந்தால் மட்டுமே அக்கல்லை இடம் மாற்றி வைத்திருக்க முடியும்.
இந்த அடிப்படையில் தான் உமர் (ரலி) அவர்கள், கஅபாவுடன் ஒட்டியிருந்த கல்லை இப்போதுள்ள இடத்தில் மாற்றி வைத்தார்கள்.
நூல் : இப்னு ரஜபின் ஃபத்ஹுல் பாரி
இதன் பின்னரும், “மகாமு இப்ராஹீம் என்பது ஒரு இடத்தின் அடையாளம் அல்ல; ஒரு குறிப்பிட்ட கல் தான்” என்று வாதிடுபவர்கள், “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற இறைக் கட்டளையைச் செயல்படுத்தும் விதமாக அந்தக் கல்லின் மீது ஏறி நின்று தொழுது காட்ட முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மேலும், ஒருவர் நிற்கும் அளவுக்குள்ள இடத்தில் ஒரே ஒரு மனிதர் கூடத் தொழ முடியாது எனும் போது, மக்கள் அனைவரும் அங்கு எப்படித் தொழ முடியும் என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தற்போது, “இப்ராஹீம் நபியின் பாதத்தின் அடிச்சுவடு” என்ற பெயரில் அக்கல்லின் மீது ஒரு அச்சு உள்ளது. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
“அந்தக் கல் மீது இப்ராஹீம் நபியின் பாதம் பதிந்துள்ளது என்று கூறுவது கட்டுக்கதையாகும். இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் அது இருந்து பின்னர் அழிந்திருக்கலாம்” என்று இப்னு ரஜப் தமது ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிடுகிறார்.
இப்னு ரஜப் அவர்களின் காலத்தில் (ஹிஜிரி 736-795) எந்தப் பாத அடையாளமும் அந்தக் கல்லில் இருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
எனவே தற்போது, அந்தக் கல்லில் காணப்படும் பாத அச்சு இப்னு ரஜப் காலத்திற்குப் பிறகு ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...