411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

இவ்வசனத்தில் (12:35) சான்றுகளைக் கண்ட பின்னர் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.

அஸீஸின் மனைவி கையும் களவுமாக கணவரிடம் மாட்டிக் கொண்டார் என்பதும், யூஸுஃப் நபியின் சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டதைக் கண்ட பின் யூஸுஃப் குற்றமற்றவர் என்றும், தனது மனைவி தான் குற்றவாளி என்றும் அஸீஸ் முடிவு செய்தார் என்பதும் 12:28,29 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையில் யூஸுஃப் நபி குற்றமற்றவர் என்று ஆதாரத்துடன் முடிவு செய்து விட்டார்கள். அவரைக் குற்றவாளியாக ஆக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.

அப்படியானால் ஆதாரங்களைக் கண்ட பின்னர் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர்களுக்கு எப்படித் தோன்றியது? இரண்டும் முரணாக உள்ளதே என்ற சந்தேகம் எழலாம்.

இது குறித்து அடுத்தடுத்து சொல்லப்படும் செய்திகளைப் பார்க்கும் போது யூஸுஃப் நபி மீது புதிதாக இன்னொரு பழியைச் சுமத்தி பொய் சாட்சிகளை ஆதாரமாக ஆக்கி அவரைச் சிறையில் அடைத்துள்ளனர் என்று அறிய முடியும்.

அஸீஸின் மனைவி தவறாக நடக்க முயற்சித்த விபரம் ஊருக்கே தெரிந்த பின் அஸீஸின் மனைவி ஊரில் உள்ள பெண்களை அழைத்து அவர்கள் முன்னால் யூஸுஃபைக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவரைப் பார்த்த பெண்கள் அவர் மனிதரே அல்ல என்று சொல்லுமளவுக்கு பேரழகு படைத்தவராக இருப்பதைக் கண்டனர். தங்கள் கைகளில் உள்ள கத்திகளால் தங்களின் கைகளை வெட்டிக் கொண்டனர் என்று 12:31 வசனம் சொல்கிறது.

நான் இவரிடம் மயங்கியதைக் குறை கூறிய நீங்களே உங்கள் கைகளை வெட்டிக் கொண்டீர்களே? நான் மதிமயங்கியதை எப்படிக் குறை கூறலாம் என்று அஸீஸின் மனைவி தனது செயலுக்கு நியாயம் கற்பித்த விபரமும் ‎எனது இச்சைக்கு இணங்காவிட்டால் அவரைச் சிறையில் அடைப்பேன் என்று அவள் சொன்ன விபரமும் 12:32 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அஸீஸின் மனைவி சுமத்திய குற்றச்சாட்டுக்குப் பின் யூஸுஃப் நபி அந்த வீட்டிலேயே இருந்தார். சிறைக்கு அனுப்பப்படவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது.

புதுக் குற்றச்சாட்டு கூறி அவரைச் சிறையிலடைக்க அவள் திட்டமிட்டாள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது.

இறைவா இப்பெண்கள் அழைக்கும் தீய செயலில் இருந்து என்னைக் காப்பாயாக என்று யூஸுஃப் நபி செய்த துஆவும் இவ்வசனத்தில் இடம் பெறுகிறது.

”இப்பெண்களின்” என்று யூஸுஃப் நபி பன்மையாகக் கூறியதில் இருந்து அவர்களை அடைய அஸீஸின் மனைவி மட்டுமின்றி மற்றும் சில பெண்களும் கூட்டாக முயன்றுள்ளனர்; அல்லது அஸீஸின் மனைவிக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் பெண்கள் என்று பன்மையாக சொல்லத் தேவையில்லை.

அப்பெண்களின் இச்சைக்கு யூஸுஃப் நபி‎ இணங்காததால் அப்பெண்கள் கூட்டாக யூஸுஃப் நபிக்கு எதிராகப் பொய்ப் புகார் கொடுத்து, அந்தப் பொய்யான சாட்சியத்தைப் பார்த்த பிறகு தான் யூஸுஃப் நபியவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். அதைத் தான் 12:35 வசனம் கூறுகிறது.

இதை 12:50 முதல் 12:52 வசனங்கள் இன்னும் உறுதிப்படுத்துகின்றன.

மன்னரின் கனவுகளுக்கு யூஸுஃப் நபி விளக்கம் கூறியதால் யூஸுஃப் நபியை விடுவித்து தன்னிடம் அழைத்து வருமாறு மன்னர் கூறினார். அதன்படி யூஸுஃப் நபி அவர்களை ஊழியர்கள் அழைத்த போது தங்கள் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன என்பதை விசாரிக்குமாறு யூஸுஃப் நபி கூறியதாக இவ்வசனங்கள் கூறுகின்றன.

அஸீஸின் மனைவி சம்மந்தப்பட்ட பழைய சம்பவம் காரணமாக யூஸுஃப் நபி அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. கைகளை வெட்டிக் கொண்ட பெண்களும், அஸீஸின் மனைவியும் கொடுத்த மற்றொரு பொய்யான புகாரின் காரணமாகவே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது இதிலிருந்தும் தெரிகிறது.

அதனால் தான் அப்பெண்களை விசாரிக்குமாறு யூஸுஃப் நபியவர்கள் பதில் கூறி அனுப்பியுள்ளார்கள்.

மன்னரும் அப்பெண்களை அழைத்து விசாரித்த போது யூஸுஃபை நீங்கள் மயக்கப் பார்த்த போது நடந்தது என்ன என்று கேட்கிறார். அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அப்பெண்கள் பதில் கூறினார்கள்.

இதன் பின்னர் அஸீஸின் மனைவியும் தவறு தன்னுடையது தான் என்று ஒப்புக் கொள்கிறார். இந்த மூன்று வசனங்களிலும் இந்த உண்மையை அறியலாம்.

அஸீஸின் மனைவி யூஸுஃபை இழுத்த சம்பவத்துக்காக யூஸுஃப் நபி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களை விசாரிக்க அவசியம் இல்லை. ஏனெனில் அந்தச் சம்பவத்தில் அப்பெண்கள் சாட்சிகளாக இருக்கவில்லை.

எனவே இரண்டாம் முறை கூறப்பட்ட பொய்யான புகார் காரணமாகவும், அதற்கு அப்பெண்களை சாட்சிகளாக ஆக்கியதன் காரணமாகவும் தான் யூஸுஃப் நபியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சான்றுகளைக் கண்ட பின்னர் அவரைச் சிறையிலடைக்க வேண்டும் என்று இதனால் தான் முடிவு செய்தார்கள். எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...