455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்?

இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது.

இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன்வந்தது இஸ்மவேலை அல்ல. ஈஸாக்கைத் தான் என்று கிறித்தவர்கள் கருதுகின்றனர். பைபிளில் இப்படித் தான் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எனவே அது குறித்த உண்மையை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பைபிளில் அப்படி எழுதப்பட்டிருந்தாலும் அது பிற்காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டதாகும். ஈஸாக் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் தான் அவரது வழித்தோன்றலான ஏசுவுக்கு அதில் சிறப்பு சேரும். இஸ்மாயீல் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் அதன் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போய் விடும் என்று அஞ்சி பைபிளில் கைவரிசை காட்டி பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் ஈஸாக் என்று மதகுருமார்கள் எழுதிக் கொண்டனர்.

பைபிளைக் கருத்தூன்றி படிப்பவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியும். ஈஸாக் பலியிடப்பட்டதாகச் சொல்லும் வசனங்களைப் பாருங்கள்.

1. இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

ஆதியாகமம் 22:1,2

12. அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 22:12

இது தான் ஈஸாக் தான் பலியிடப்பட்டவர் என்பதற்கு பைபிளில் உள்ள சான்றாகும்.

மேற்கண்ட வசனங்களில் பலியிடப்பட்டவர் ஈஸாக் என்று சொல்லப்பட்டாலும் அவருக்கு அடைமொழியாக ஏகசுதன் என்று சொல்லப்பட்டுள்ளது.

சுதன் என்றால் மகன் என்று பொருள். ஏக என்றால் ஒரே என்று பொருள். ஏகசுதன் என்றால் ஒரே மகன் என்று பொருள்.

ஆப்ரஹாம் பலியிட முயன்ற போது அவருக்கு ஒரே மகன் மட்டும் இருந்தால் தான் ஏகசுதன் என்று சொல்லைப் பயன்படுத்த முடியும்.

ஈஸாக் மூத்த மகனாக இருந்தால் தான் இது சாத்தியமாகும். இஸ்மாயீல் மூத்த மகனாகவும் ஈஸாக் இரண்டாம் மகனாகவும் இருந்தால் ஈஸாக் ஏகசுதனாக ஆக மாட்டார். ஏனெனில் அவருடன் இஸ்மாயீலும் இருப்பதால் அப்படிக் கூற முடியாது.

யார் மூத்த மகனாக இருக்கிறாரோ அவர் தான் ஏகசுதனாக இருக்க முடியும்.

இப்போது கீழ்க்கண்ட வசனங்களைப் பாருங்கள்!

16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்ற போது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 16:16

24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

26. ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்த சேதனம் பண்ணப்பட்டார்கள்.

ஆதியாகமம் 17:24,25

4. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.

5. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 21:4,5

இந்த வசனங்களில் இருந்து தெரிவது என்ன?

ஆப்ரஹாமின் 86 வயதில் அவருக்கு இஸ்மாயீல் பிறந்துள்ளார். ஆப்ரஹமின் 100 வயதில் ஈஸாக் பிறந்துள்ளார் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அதாவது இஸ்மாயீலை விட ஈஸாக் 14 வயது இளையவர் ஆவார்.

14 ஆண்டுகளாக இஸ்மாயீல் மட்டுமே இப்ராஹீமுக்கு ஒரே மகனாக ஏகசுதனாக இருந்துள்ளார். ஈஸாக் ஒரு சந்தர்ப்பத்திலும் ஆப்ரகாமுக்கு ஏகசுதனாக இருக்கவில்லை. இருக்க முடியாது. அப்படியானால் ஏகசுதன் இஸ்மாயீல் என்று இருந்ததைத் திட்டமிட்டு ஈஸாக் என்று மாற்றியுள்ளனர் என்பதும் ஏகசுதன் என்ற சொல்லை நீக்க மறந்து மாட்டிக் கொண்டனர் என்பதும் இதில் இருந்து உறுதியாகின்றது.

எனவே பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்மாயீல் தான் என்பதும், இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெருமை வந்து விடும் என்ற காரணத்தால் இஸ்மவேல் என்ற சொல்லை நீக்கி விட்டு அந்த இடத்தில் ஈஸாக் என்ற சொல்லை வைத்து விட்டனர் என்பதும் ஏகசுதன் என்ற சொல்லில் இருந்து உறுதியாகிறது.

இஸ்மாயீல் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் அவர் மகன் என்ற அந்தஸ்துக்கு வர மாட்டார் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் இஸ்மாயீலும், ஈஸாக்கும் ஆப்ரஹாமின் மகன்கள் என்று பின்வரும் பைபிள் வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

9. அவன் குமாரராகிய ஈசாக்கும், இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம் பண்ணினார்கள்.

ஆதியாகமம் 25:9

ஆப்ரஹாமுக்கு ஈஸாக் எப்படி குமாரனாக இருந்தாரோ, அது போல் இஸ்மவேலும் அவரது குமாரனாக இருந்தார் என்பது இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...