455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்?

இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது.

இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

இப்ராஹீம் நபியவர்கள் பலியிட முன்வந்தது இஸ்மவேலை அல்ல. ஈஸாக்கைத் தான் என்று கிறித்தவர்கள் கருதுகின்றனர். பைபிளில் இப்படித் தான் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். எனவே அது குறித்த உண்மையை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பைபிளில் அப்படி எழுதப்பட்டிருந்தாலும் அது பிற்காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டதாகும். ஈஸாக் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் தான் அவரது வழித்தோன்றலான ஏசுவுக்கு அதில் சிறப்பு சேரும். இஸ்மாயீல் பலியிட அழைத்துச் செல்லப்பட்டார் என்றால் அதன் சிறப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போய் விடும் என்று அஞ்சி பைபிளில் கைவரிசை காட்டி பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் ஈஸாக் என்று மதகுருமார்கள் எழுதிக் கொண்டனர்.

பைபிளைக் கருத்தூன்றி படிப்பவர்களால் இதைக் கண்டுபிடிக்க முடியும். ஈஸாக் பலியிடப்பட்டதாகச் சொல்லும் வசனங்களைப் பாருங்கள்.

1. இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

2. அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

ஆதியாகமம் 22:1,2

12. அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆதியாகமம் 22:12

இது தான் ஈஸாக் தான் பலியிடப்பட்டவர் என்பதற்கு பைபிளில் உள்ள சான்றாகும்.

மேற்கண்ட வசனங்களில் பலியிடப்பட்டவர் ஈஸாக் என்று சொல்லப்பட்டாலும் அவருக்கு அடைமொழியாக ஏகசுதன் என்று சொல்லப்பட்டுள்ளது.

சுதன் என்றால் மகன் என்று பொருள். ஏக என்றால் ஒரே என்று பொருள். ஏகசுதன் என்றால் ஒரே மகன் என்று பொருள்.

ஆப்ரஹாம் பலியிட முயன்ற போது அவருக்கு ஒரே மகன் மட்டும் இருந்தால் தான் ஏகசுதன் என்று சொல்லைப் பயன்படுத்த முடியும்.

ஈஸாக் மூத்த மகனாக இருந்தால் தான் இது சாத்தியமாகும். இஸ்மாயீல் மூத்த மகனாகவும் ஈஸாக் இரண்டாம் மகனாகவும் இருந்தால் ஈஸாக் ஏகசுதனாக ஆக மாட்டார். ஏனெனில் அவருடன் இஸ்மாயீலும் இருப்பதால் அப்படிக் கூற முடியாது.

யார் மூத்த மகனாக இருக்கிறாரோ அவர் தான் ஏகசுதனாக இருக்க முடியும்.

இப்போது கீழ்க்கண்ட வசனங்களைப் பாருங்கள்!

16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்ற போது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 16:16

24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

26. ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்த சேதனம் பண்ணப்பட்டார்கள்.

ஆதியாகமம் 17:24,25

4. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.

5. தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 21:4,5

இந்த வசனங்களில் இருந்து தெரிவது என்ன?

ஆப்ரஹாமின் 86 வயதில் அவருக்கு இஸ்மாயீல் பிறந்துள்ளார். ஆப்ரஹமின் 100 வயதில் ஈஸாக் பிறந்துள்ளார் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அதாவது இஸ்மாயீலை விட ஈஸாக் 14 வயது இளையவர் ஆவார்.

14 ஆண்டுகளாக இஸ்மாயீல் மட்டுமே இப்ராஹீமுக்கு ஒரே மகனாக ஏகசுதனாக இருந்துள்ளார். ஈஸாக் ஒரு சந்தர்ப்பத்திலும் ஆப்ரகாமுக்கு ஏகசுதனாக இருக்கவில்லை. இருக்க முடியாது. அப்படியானால் ஏகசுதன் இஸ்மாயீல் என்று இருந்ததைத் திட்டமிட்டு ஈஸாக் என்று மாற்றியுள்ளனர் என்பதும் ஏகசுதன் என்ற சொல்லை நீக்க மறந்து மாட்டிக் கொண்டனர் என்பதும் இதில் இருந்து உறுதியாகின்றது.

எனவே பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்மாயீல் தான் என்பதும், இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெருமை வந்து விடும் என்ற காரணத்தால் இஸ்மவேல் என்ற சொல்லை நீக்கி விட்டு அந்த இடத்தில் ஈஸாக் என்ற சொல்லை வைத்து விட்டனர் என்பதும் ஏகசுதன் என்ற சொல்லில் இருந்து உறுதியாகிறது.

இஸ்மாயீல் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் அவர் மகன் என்ற அந்தஸ்துக்கு வர மாட்டார் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் இஸ்மாயீலும், ஈஸாக்கும் ஆப்ரஹாமின் மகன்கள் என்று பின்வரும் பைபிள் வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

9. அவன் குமாரராகிய ஈசாக்கும், இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம் பண்ணினார்கள்.

ஆதியாகமம் 25:9

ஆப்ரஹாமுக்கு ஈஸாக் எப்படி குமாரனாக இருந்தாரோ, அது போல் இஸ்மவேலும் அவரது குமாரனாக இருந்தார் என்பது இவ்வசனத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...