473. இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்தது சரியா?

கடவுளாகக் கருதப்பட்ட சிலைகளை இப்ராஹீம் நபியவர்கள் உடைத்ததாக இவ்வசனங்களில் (21:57, 21:58, 37:93) கூறப்படுகிறது.

இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளை உடைத்தது சரியா? நாமும் பிறமதத்தினரின் கடவுள் சிலைகளை உடைக்கலாமா என்று இவ்வசனங்களை வாசிக்கும் போது சந்தேகம் ஏற்படலாம்.

பிற மதத்தினரின் கோவில்கள் மற்றும் சிலைகளைச் சேதப்படுத்துவது குறித்து இஸ்லாமின்  நிலை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறர் தெய்வங்களாக வழிபடுபவர்களை ஏசாதீர்கள் என்று 6:108 வசனம் கூறுகிறது. இதுபற்றி 170வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

எந்த மதத்தினரும் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தக் கூடாது என்று 22:40 வசனம் சொல்கிறது. இது பற்றி 433வது குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கான காரணமும் இவ்வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. பிற மதத்தினர் தெய்வமாகக் கருதுவோரை நீங்கள் ஏசினால் அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். நீங்கள் பிற மதக் கோவில்களைச் சேதப்படுத்தினால் அவர்கள் பள்ளிவாசல்களைச் சேதப்படுத்துவார்கள் என்பதே அந்தக் காரணம்.

நாம் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்தினால் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படும்.

அப்படியானால் இப்ராஹீம் நபி ஏன் சிலைகளைச் சேதப்படுத்தினார்கள்?

இப்ராஹீம் நபி அவர்களின் செயல் இந்த வசனங்களுக்கு முரணானது அல்ல. இதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சமுதாயம், அல்லது ஒரு மதம் மட்டுமே ஒரு ஊரில் உள்ளது. அந்த ஊரில் பிறந்த ஒருவருக்கு அந்த மதம் அல்லது அவர்களின் வழிபாட்டு முறை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அந்த வழிபாட்டுத் தலத்தையும் வழிபடும் தெய்வத்தையும் சேதப்படுத்தினால் அப்போது மதக் கலவரம் வராது. மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலம் இடிக்கப்படும் நிலையும் ஏற்படாது. ஏனெனில் சிலைகளைச் சேதப்படுத்தியவர் எந்த மதத்தின் சார்பிலும் இதைச் செய்யவில்லை.

தாங்கள் தெய்வமாக நம்பியவர்கள் அந்த நம்பிக்கையில் இருந்து விடுபடுவதாகத் தான் இதை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

இப்ராஹீம் நபியவர்களின் நிலையும் இது போன்றது தான்.

இப்ராஹீம் நபியவர்கள் சிலை வணங்கும் ஆஸர் என்பவரின் மகனாகப் பிறக்கிறார்கள். அப்போது அங்கே வேறு எந்த மதமும் இருக்கவில்லை. வேறு ஒரு மதத்தின் சார்பிலும் அவர்கள் இந்த வேலையைச் செய்யவில்லை. தங்கள் குடும்பத்தினர் குலதெய்வமாக சிலைகளை வணங்குவதை அவர்கள் வெறுத்ததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினார்கள். அதற்கான விளைவை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

ஒரு ஊரில் ஒரு மதத்தினர் மட்டும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வேறு மதம் மாறிவிட்டால் தங்கள் பழைய வழிபாட்டுத்தலத்தை இடிப்பது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் பல்வேறு மதங்களாகப் பிரிந்திருக்கும் போது வெளியாட்கள் வந்து தங்கள் சிலைகளை உடைப்பதற்கும், அந்த மதத்தில் பிறந்த ஒருவர் தனிப்பட்ட முறையில் இந்தச் செயலைச் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

இது தொடர்பான மற்ற விபரங்களை அறிய 170, 433, 464வது குறிப்புகளையும் காண்க!

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...