475. நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் மெய்ப்படுத்துகின்றது.

பசி எடுக்கும் போது சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. பட்டிணி கிடப்பது உடலைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் அதிகமான மக்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக இது சரியானதாக இருந்தாலும் நோன்புக்கு இது பொருந்தாது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அதை விபரமாகப் பார்ப்போம்.

நாம் உணவு உட்கொண்டவுடன் தேவையான ஆற்றலை அந்த உணவில் இருந்து உடல் பெற்றுக் கொள்கிறது. அடுத்த வேளை உணவு உண்ணும் வரை ஆற்றல் தேவை உள்ளதால் உணவிலிருந்து தயாரித்துக் கொண்ட குளுகோஸை நமது உடல், கல்லீரலிலும் தசையிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. அடுத்த வேளை உணவு உட்கொள்ளும் வரை கல்லீரலிலும், தசையிலும் சேமித்து வைக்கப்பட்ட குளுகோஸை ஆற்றலுக்காக உடல் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு வேளை உணவு உட்கொண்டால் எட்டு மணி நேரத்துக்கு அந்த ஊட்டச்சத்து போதுமானதாகும்.

சேமிக்கப்பட்ட ஊட்டச்சத்து எட்டு மணி நேரத்தில் தீர்ந்த பிறகும் உண்ணா நிலையை நாம் நீடித்தால் உடலில் உள்ள கொழுப்பு, எனெர்ஜி என்னும் ஆற்றலுக்காக எரிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

இந்தக் கொழுப்பு முழுவதுமாகத் தீர்ந்து விட்ட பிறகும், முழு நாள் அளவுக்கு உண்ணாநிலை தொடர்ந்தால் உடலில் உள்ள புரதம் (protein) ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. புரதம் பயன்படுத்தப்படுவதால், உடல் மெலிந்து மனிதன் தளர்வாகிறான். முஸ்லிம்களின் நோன்பு இவ்வாறு அமையவில்லை.

இரண்டாவதாகக் கூறப்பட்ட நிலையில் தான் நோன்பு அமைந்துள்ளது. அதாவது எட்டு மணிக்கு அதிகமாகவும், ஒரு முழு நாளுக்குக் குறைவாகவும் முஸ்லிம்களின் நோன்பு அமைந்துள்ளது.

குளுகோஸ் தீர்ந்து எனெர்ஜிக்காக கொழுப்பு பயன்படுவதால், உடல் எடை குறைகிறது. இதனால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகின்றன. தசைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த எடைக் குறைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை நோய்களைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும் போது அதனுடன் சேர்ந்து நச்சுப் பொருள்களும் எரிக்கப்படுவதால், நச்சு நீக்கும் முறையும் நடக்கிறது என்று அமெரிக் காவின் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நோன்பு ஆரம்பித்த சில நாட்களில் இரத்தத்தில் அதிக அளவு endorphin என்னும் வேதிப்பொருள் அதிகரிப்பதால், மனிதன் மிகவும் உற்சாகமாகவும், நல்ல மனநிலையிலும் இருக்க உதவுகிறது. இதனால் மூளையின் செயல்திறனும் அதிகரிக் கிறது.

அமெரிக்காவில் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பால் கிடைக்கும் மன கவனம், (brain-derived neurotrophic factor) மூளையில் இருந்து வரும் நரம்பு சார்ந்த ஒரு வேதிப்பொருளை அதிகரிக்கிறது. இதன் விளைவாக மூளை அதிக மூளை நரம்பு செல்களை உருவாக்கி அதன் மூலம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

(A study carried out by scientists in the USA found that the mental focus achieved during Ramadan increases the level of brain-derived neurotrophic factor, which causes the body to produce more brain cells, thus improving brain function.) 

இதுபோலவே, முஸ்லிம்களின் நோன்பின் போது, உடலில் உள்ள அட்ரினல் சுரப்பியால் (adrenal gland) சுரக்கப்படும் கார்டிசோல் (cortisol) என்னும் ஹார்மோன் குறைவதால் மனஅழுத்தம் வெகுவாகக் குறைகிறது.

(Likewise, a distinct reduction in the amount of the hormone cortisol, produced by the adrenal gland means that stress levels are greatly reduced both during and after Ramadan )

 ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருதயவியல் மருத்துவ வல்லுனர்கள் “நோன்பு பிடிப்பவர்கள் ஒரு நேர்மறையான விளைவை (positive effect) தங்கள் கொழுப்பு அளவில் கிடைப்பதை அனுபவிக்கிறார்கள். அதாவது, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

(A team of cardiologists in the UAE found that people observing Ramadan enjoy a positive effect on their lipid profile, which means there is a reduction of cholesterol in the blood)

கெட்ட கொழுப்பு குறைவது மட்டுமின்றி, ஆன்மிகச் சிந்தனையால், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால், இதயத்தின் இரத்த ஓட்டம் சீராகிறது. இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. ரமளானுக்குப் பின்னும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை தொடர்ந்தால், குறைந்த கொலஸ்ட்ரால் அளவை எளிதாகப் பராமரிக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்றும், மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் எனும் மறதிநோய், பார்கின்சன் நோய், மற்றும் மூளை தேய்மான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள Chemical messengers எனும் இரசாயனத் தூதுகள் தூண்டப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

The Daily Telegraph என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது.

“உணவைக் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நடத்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே இதுவரை நம்பி இருந்தனர். இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும், ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் செய்முறை மூலம் உறுதிப்படுத்தி விட்டனர்.

neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மார்க் மாட்சொன் இவ்வாறு கூறுகிறார்:

“கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும். ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது. இடைவெளி விட்ட விரதம், அதாவது, எல்லா உணவையும் அறவே தவிர்ப்பது, பிறகு தனக்கு வேண்டியதை, தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்” என்று கூறுகிறார்.

இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற மதத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்டதாக இருப்பதில்லை. திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான கலோரிகள் கிடைத்து விடும்.

சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதைத் தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. சில விரதங்களில் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நன்மையை அடைய முடியாது.

முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ, சைவமோ, திடமோ, திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் நீண்ட நேரம் கொண்டதாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாகப் பெற முடிகிறது.

நோன்பை மார்க்கக் கடமையாக்கி இருப்பதும், அது நல்லது என்று சொல்லி இருப்பதும், அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று கூறி இருப்பதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...