491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா?

முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46, 5:47, 5:66, 5:68, 5:110, 7:157, 9:111, 48:29, 57:27, 61:6, 62:5) கூறுகின்றன.

இப்போது புதிய ஏற்பாடு என்றும், பழைய ஏற்பாடு என்றும் கிறித்தவர்களால் சொல்லப்படுபவை தான் அந்த வேதங்கள் என்று கருதக் கூடாது.

புதிய ஏற்பாடு என்பது  இஞ்சீலும் அல்ல. பழைய ஏற்பாடு என்பது தவ்ராத்தும் அல்ல.

இது எப்படி என்று நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

5:46, 57:27, வசனங்களில் ஈஸாவுக்கு  இஞ்சீலைக் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்டது தான் இஞ்சீல் என்றால் இப்போது உள்ள புதிய ஏற்பாடு ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் புதிய ஏற்பாடும் அப்படிச் சொல்லவில்லை. கிறித்தவர்களும் அப்படி நம்பவில்லை.

இயேசுவைப் பற்றி மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகியோர் இயேசுவின் காலத்துக்குப் பிறகு எழுதியவையும், பவுல் எழுதிய சுவிஷேசங்களும் தான் புதிய ஏற்பாடு என்கின்றனர். இது ஒருக்காலும்  இஞ்சீலாக இருக்க முடியாது.

“ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்” என பைபிளில் கூறப்பட்டுள்ளது. (மத்தேயு 4:23, 9:35)

இயேசுவிடம் ஒரு வேதம் இருந்ததாகவும் அந்த வேதத்தை இயேசு பிரசங்கித்தார் என்றும் பைபிள் கூறுவதில் இருந்து இப்போதைய பைபிள் இஞ்சீல் அல்ல என்று அறியலாம்.

இயேசுவுக்கு வழங்கப்பட்ட இஞ்சீல் வேதம், நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரை கிறித்தவர்களிடம் இருந்து வந்தது. அதில் உள்ள போதனைகள் திருக்குர்ஆனை ஒத்ததாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் இருந்தது. அதனால் தான் அன்று கிறித்தவர்களாக இருந்த அரபுகள் இஸ்லாமை தழுவிக் கொண்டனர். அரபு மண்ணில் இருந்து கிறித்தவம் முற்றாக ஒழிந்து போனது.

பெயரளவுக்கு நாம்  இஞ்சீலை வைத்திருக்கிறோம். ஆனால் முஹம்மதோ அந்த வேதத்தில் இறைவனைப் பற்றி சொல்லப்பட்டவைகளை எடுத்துக் காட்டியே நம் மக்களை முஸ்லிம்களாக்கி விட்டார். இதற்குக் காரணம் திருக்குர்ஆனுக்கு ஒத்ததாக இருக்கும் இஞ்சீல் தான் என்று கருதிய கிறித்தவ சபைகள்  இஞ்சீலை இல்லாமல் ஆக்கிவிட்டனர்.

அதை ஒழித்தால் தான் இஸ்லாமின் அலையில் கிறித்தவம் இழுத்துச் செல்லப்படாமல் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள்  இஞ்சீலை எடுத்துக் காட்டியே கிறித்தவர்களைக் கிறித்தவத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி  இஞ்சீலை ஒழித்து விட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் வரை இஞ்சீல் கிறித்தவ மக்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை 5:47, 5:66, 5:68 ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அதன் பின்னர் தான் இஞ்சீல் ஒழிக்கப்பட்டு இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவைகளை வேதம் என்று கூற ஆரம்பித்தார்கள்.

அது போல் தவ்ராத் என்பது மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்ட வேதத்தில் மூஸா நபிக்குப் பின் வந்தவர்களின் வரலாறுகள் இருக்க முடியுமா? ஆனால் பழைய ஏற்பாட்டில் மூஸா நபிக்குப் பின்வந்த பலரது வரலாறுகள் உள்ளன. எனவே பழைய ஏற்பாடு தவ்ராத்தாக இருக்க முடியாது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் யூதர்களிடம் தவ்ராத்தும், கிறித்தவர்களிடம்  இஞ்சீலும் இருந்தன. அதனால் தான் உங்களிடம் உள்ளதைக் திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்று அம்மக்களிடமே திருக்குர்ஆன் கூறியது. அம்மக்களும் தங்கள் வேதத்தின் கருத்தையே திருக்குர்ஆனும் சொல்வதால் அதை உறுதிப்படுத்திக் கொண்டு இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

தவ்ராத் வேதம் வழக்கத்தில் இருந்தால் அதை வைத்தே முஹம்மத் யூத மதத்தை அழித்து விடுவார் என்று அஞ்சிய யூதர்கள் தவ்ராத்தையும் ஒழித்து விட்டனர்.

உதாரணமாக தவ்ராத்திலும், இஞ்சீலிலும் உள்ள சில விஷயங்களை அன்றைய யூதர்களிடமும், கிறித்தவர்களிடமும் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டியது. அந்த விஷயங்கள் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் இப்போது இல்லை. ஆனால் அப்போது இருந்துள்ளது.

திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் வசனங்கள் அன்றைக்கு தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இல்லாமல் இருந்தால் அப்போதே அன்றைய யூத கிறித்தவர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி திருக்குர்ஆனைப் பொய்யாக்கி இருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னபடி தங்கள் வேதத்தில் இருந்ததால் தான் அவர்களால் இஸ்லாமை ஏற்க முடிந்தது.

இது போன்ற சில வசனங்களை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், திருக்குர்ஆனிலும் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி என்று திருக்குர்ஆன் 9:111 வசனம் கூறுகிறது.

மேற்கண்ட விஷயம் தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இருந்ததாக அன்றைக்கு தவ்ராத்தையும், இஞ்சீலையும் வைத்திருந்த மக்களிடம் திருக்குர்ஆன் பேசியது. அன்று இருந்த தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இப்படி ஒரு செய்தி இல்லாமல் இருந்திருந்தால் அன்றைய யூதர்களும் கிறித்தவர்களும் இஸ்லாமைப் பொய்யாக்கிட இந்த விஷயத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள்.

அன்றைக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீலில் இருந்த இந்த விஷயம் இப்போதையை புதிய ஏற்பாட்டிலும் இல்லை. பழைய ஏற்பாட்டிலும் இல்லை. எனவே பழைய ஏற்பாடு தவ்ராத்தும் அல்ல. புதிய ஏற்பாடு இஞ்சீலும் அல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

இது போல் மற்றொரு செய்தியைப் பாருங்கள்!

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இஞ்சீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

திருக்குர்ஆன் 48:29

முஹம்மது நபி பற்றியும், அவர்களது சமுதாயம் பற்றியும் மேலே சொன்னவாறு தவ்ராத்திலும், இஞ்சீலிலும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் இவ்வசனங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அன்றைய யூதர்களிடமும், கிறித்தவர்களிடமும் இப்படிக் கூறி இருக்க முடியாது.

ஆனால் இப்போதைய புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் இவ்விஷயம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தவ்ராத்தும், இஞ்சீலும் இருந்துள்ளன. இவ்வேதங்களே இஸ்லாமிய வளர்ச்சிக்கு உதவுவதால் இதை அழித்தால் தான் தங்கள் மதங்களைக் காப்பாற்ற முடியும் என்று திருச்சபைகள் அச்சம் கொண்டு முற்றாக அவற்றை ஒழித்து விட்டன என்பதே உண்மை.

இது குறித்து மேலும் விபரம் அறிய 271வது குறிப்பையும் காண்க.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...