491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா?

முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46, 5:47, 5:66, 5:68, 5:110, 7:157, 9:111, 48:29, 57:27, 61:6, 62:5) கூறுகின்றன.

இப்போது புதிய ஏற்பாடு என்றும், பழைய ஏற்பாடு என்றும் கிறித்தவர்களால் சொல்லப்படுபவை தான் அந்த வேதங்கள் என்று கருதக் கூடாது.

புதிய ஏற்பாடு என்பது  இஞ்சீலும் அல்ல. பழைய ஏற்பாடு என்பது தவ்ராத்தும் அல்ல.

இது எப்படி என்று நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

5:46, 57:27, வசனங்களில் ஈஸாவுக்கு  இஞ்சீலைக் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்டது தான் இஞ்சீல் என்றால் இப்போது உள்ள புதிய ஏற்பாடு ஈஸா நபிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் புதிய ஏற்பாடும் அப்படிச் சொல்லவில்லை. கிறித்தவர்களும் அப்படி நம்பவில்லை.

இயேசுவைப் பற்றி மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகியோர் இயேசுவின் காலத்துக்குப் பிறகு எழுதியவையும், பவுல் எழுதிய சுவிஷேசங்களும் தான் புதிய ஏற்பாடு என்கின்றனர். இது ஒருக்காலும்  இஞ்சீலாக இருக்க முடியாது.

“ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்” என பைபிளில் கூறப்பட்டுள்ளது. (மத்தேயு 4:23, 9:35)

இயேசுவிடம் ஒரு வேதம் இருந்ததாகவும் அந்த வேதத்தை இயேசு பிரசங்கித்தார் என்றும் பைபிள் கூறுவதில் இருந்து இப்போதைய பைபிள் இஞ்சீல் அல்ல என்று அறியலாம்.

இயேசுவுக்கு வழங்கப்பட்ட இஞ்சீல் வேதம், நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரை கிறித்தவர்களிடம் இருந்து வந்தது. அதில் உள்ள போதனைகள் திருக்குர்ஆனை ஒத்ததாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் இருந்தது. அதனால் தான் அன்று கிறித்தவர்களாக இருந்த அரபுகள் இஸ்லாமை தழுவிக் கொண்டனர். அரபு மண்ணில் இருந்து கிறித்தவம் முற்றாக ஒழிந்து போனது.

பெயரளவுக்கு நாம்  இஞ்சீலை வைத்திருக்கிறோம். ஆனால் முஹம்மதோ அந்த வேதத்தில் இறைவனைப் பற்றி சொல்லப்பட்டவைகளை எடுத்துக் காட்டியே நம் மக்களை முஸ்லிம்களாக்கி விட்டார். இதற்குக் காரணம் திருக்குர்ஆனுக்கு ஒத்ததாக இருக்கும் இஞ்சீல் தான் என்று கருதிய கிறித்தவ சபைகள்  இஞ்சீலை இல்லாமல் ஆக்கிவிட்டனர்.

அதை ஒழித்தால் தான் இஸ்லாமின் அலையில் கிறித்தவம் இழுத்துச் செல்லப்படாமல் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள்  இஞ்சீலை எடுத்துக் காட்டியே கிறித்தவர்களைக் கிறித்தவத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி  இஞ்சீலை ஒழித்து விட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் வரை இஞ்சீல் கிறித்தவ மக்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை 5:47, 5:66, 5:68 ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அதன் பின்னர் தான் இஞ்சீல் ஒழிக்கப்பட்டு இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவைகளை வேதம் என்று கூற ஆரம்பித்தார்கள்.

அது போல் தவ்ராத் என்பது மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்ட வேதத்தில் மூஸா நபிக்குப் பின் வந்தவர்களின் வரலாறுகள் இருக்க முடியுமா? ஆனால் பழைய ஏற்பாட்டில் மூஸா நபிக்குப் பின்வந்த பலரது வரலாறுகள் உள்ளன. எனவே பழைய ஏற்பாடு தவ்ராத்தாக இருக்க முடியாது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் யூதர்களிடம் தவ்ராத்தும், கிறித்தவர்களிடம்  இஞ்சீலும் இருந்தன. அதனால் தான் உங்களிடம் உள்ளதைக் திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்று அம்மக்களிடமே திருக்குர்ஆன் கூறியது. அம்மக்களும் தங்கள் வேதத்தின் கருத்தையே திருக்குர்ஆனும் சொல்வதால் அதை உறுதிப்படுத்திக் கொண்டு இஸ்லாமில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

தவ்ராத் வேதம் வழக்கத்தில் இருந்தால் அதை வைத்தே முஹம்மத் யூத மதத்தை அழித்து விடுவார் என்று அஞ்சிய யூதர்கள் தவ்ராத்தையும் ஒழித்து விட்டனர்.

உதாரணமாக தவ்ராத்திலும், இஞ்சீலிலும் உள்ள சில விஷயங்களை அன்றைய யூதர்களிடமும், கிறித்தவர்களிடமும் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டியது. அந்த விஷயங்கள் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் இப்போது இல்லை. ஆனால் அப்போது இருந்துள்ளது.

திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் வசனங்கள் அன்றைக்கு தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இல்லாமல் இருந்தால் அப்போதே அன்றைய யூத கிறித்தவர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி திருக்குர்ஆனைப் பொய்யாக்கி இருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னபடி தங்கள் வேதத்தில் இருந்ததால் தான் அவர்களால் இஸ்லாமை ஏற்க முடிந்தது.

இது போன்ற சில வசனங்களை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், திருக்குர்ஆனிலும் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி என்று திருக்குர்ஆன் 9:111 வசனம் கூறுகிறது.

மேற்கண்ட விஷயம் தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இருந்ததாக அன்றைக்கு தவ்ராத்தையும், இஞ்சீலையும் வைத்திருந்த மக்களிடம் திருக்குர்ஆன் பேசியது. அன்று இருந்த தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இப்படி ஒரு செய்தி இல்லாமல் இருந்திருந்தால் அன்றைய யூதர்களும் கிறித்தவர்களும் இஸ்லாமைப் பொய்யாக்கிட இந்த விஷயத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள்.

அன்றைக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீலில் இருந்த இந்த விஷயம் இப்போதையை புதிய ஏற்பாட்டிலும் இல்லை. பழைய ஏற்பாட்டிலும் இல்லை. எனவே பழைய ஏற்பாடு தவ்ராத்தும் அல்ல. புதிய ஏற்பாடு இஞ்சீலும் அல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

இது போல் மற்றொரு செய்தியைப் பாருங்கள்!

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இஞ்சீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

திருக்குர்ஆன் 48:29

முஹம்மது நபி பற்றியும், அவர்களது சமுதாயம் பற்றியும் மேலே சொன்னவாறு தவ்ராத்திலும், இஞ்சீலிலும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் இவ்வசனங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அன்றைய யூதர்களிடமும், கிறித்தவர்களிடமும் இப்படிக் கூறி இருக்க முடியாது.

ஆனால் இப்போதைய புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் இவ்விஷயம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தவ்ராத்தும், இஞ்சீலும் இருந்துள்ளன. இவ்வேதங்களே இஸ்லாமிய வளர்ச்சிக்கு உதவுவதால் இதை அழித்தால் தான் தங்கள் மதங்களைக் காப்பாற்ற முடியும் என்று திருச்சபைகள் அச்சம் கொண்டு முற்றாக அவற்றை ஒழித்து விட்டன என்பதே உண்மை.

இது குறித்து மேலும் விபரம் அறிய 271வது குறிப்பையும் காண்க.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...