493. பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன. 3:36 வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது.

இவ்விரண்டையும் எடுத்துக் காட்டி முஹம்மது நபியை விட இயேசு சிறந்தவர் என்று சில கிறித்தவர்கள், முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

திருக்குர்ஆனே இயேசுவை உயர்த்திச் சொல்கிறது என்று வாதிடும் கிறித்தவர்கள் திருக்குர்ஆன் இறை வேதம் என்று நம்பி இப்படிக் கேட்பதில்லை. விதண்டாவாதமாகவே இவ்வாறு கேட்கின்றனர்.

திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வாதிடுவது என்றால் திருக்குர்ஆனில் உள்ள அனைத்தையும் அவர்கள் நம்ப வேண்டும். இயேசு இறைவனின் அடிமை தான். மகனல்லர் என்றும், இயேசு கொல்லப்படவுமில்லை; உயிர்த்தெழவும் இல்லை என்றும், ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்றும் திருக்குர்ஆன் கூறுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

திருக்குர்ஆனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையே அவர்களின் இந்த வாதத்துக்குப் பதிலாக அமைந்துள்ளது. திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை என்பது தான் அவர்களின் நம்பிக்கை. முஹம்மது நபியே கற்பனை செய்தார் என்றால் அவர் தன்னைப் பரிசுத்தவானாக, ஒரு பாவமும் செய்யாதவராக சித்தரிக்கும் வசனங்களை உருவாக்க எவ்வளவு நேரமாகும்? இயேசு பாவியாக இருந்தார் என்று ஒரு வசனத்தையும் அவரால் சேர்த்துச் சொல்வது எளிதானது தான்.

ஆனால் திருக்குர்ஆனில் முஹம்மது நபி பாவம் செய்பவர் தான் என்று கூறப்படுகிறது என்றால் இது முஹம்மது நபியின் கூற்று அல்ல என்பது உறுதியாகிறது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான மகத்தான சான்றுகளாக இவ்வசனங்கள் உள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும்.

முஹம்மது நபி பாவங்கள் செய்பவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு இயேசு பாவம் செய்பவர் என்பதும் உண்மையாகும். இது தான் கலப்படமில்லாத உண்மையாகும்.

பாவம் என்றால் கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு போன்றவை மட்டும் தான் என்று இவர்கள் விளங்கிக் கொண்டு இப்படி கேட்கிறார்கள். இது போன்ற பாவங்களை முஹம்மது நபியும் செய்ததில்லை. ஈஸா நபியும் செய்ததில்லை.

பாவம் என்பது விரிந்த பொருள் உடையது. இறைவன் பொருந்திக் கொள்ளாத செயல்கள், பேச்சுக்கள் அனைத்துமே பாவங்கள் தான்.

முதல் மனிதர் ஆதம் அவர்கள் பாவம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் நம்புகின்றனர். கிறித்தவர்களும் நம்புகின்றனர். அந்தப் பாவம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது என்று கிறித்தவர்கள் கடுமையான விஷயமாக இதைக் கருதுகிறார்கள்.

ஆதம் செய்தது கொலையோ, கொள்ளையோ, விபச்சாரமோ அல்ல. தடுக்கப்பட்ட ஒரு மரத்தைச் சுவைத்தது தான். இது போன்ற பாவங்களைத் தான் இறைத்தூதர்களும் செய்வார்கள்.

பைபிள் அடிப்படையில் பார்த்தால் கூட இயேசு பாவம் செய்துள்ளார் என்பது உறுதியாகிறது.

பாவம் செய்த ஆத்மாவே சாகும் என்று பைபிள் (எசக்கியேல் 18;20) கூறுகிறது.

பாவம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் செத்துப் போவார்கள் என்ற பைபிள் கோட்பாட்டின்படி இயேசு மரணித்ததால் அவர் பாவம் செய்தார் என்பது உறுதியாகிறது. இஸ்லாமிய நம்பிக்கைப்படியும் இயேசு இனிமேல் மரணிக்க இருக்கிறார் என்பதால் இயேசுவும் மரணிப்பவர் என்று ஆகிறது.

பிசாசு என்று கிறித்தவர்களும், ஷைத்தான் என்று முஸ்லிம்களும் நம்புகின்ற தீய சக்தியின் ஆதிக்கத்தினால் தான் மனிதன் பாவம் செய்கிறான்.

இயேசுவும் பிசாசினால் சோதிக்கப்பட்டார் என்று பைபிள் (மத்தேயு 4:1-10) கூறுகிறது.

இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டதில் இருந்து அவர் பாவம் செய்தார் என்பது உறுதியாகிறது.

பாவமே செய்யாதவர் என்ற அர்த்தத்தில் ஒருவர் இயேசுவைக் குறிப்பிட்ட போது இயேசு அதை மறுத்துள்ளார்.

அதற்கு இயேசு நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார். (மாற்கு 10:18)

எந்த மனிதரும் நூறு சதவிகிதம் நல்லவனாக இருக்க முடியாது. நானும் அது போன்றவன் தான் என்று இயேசு கூறியது அவர் பாவம் செய்பவர் என்பதைக் காட்டவில்லையா?

தேவனிடம் நல்லவர் செய்யக் கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் (யோவான் 9:31) போதனை.

ஆனால் இயேசு சிலுவையில் அறையப்படும் போது தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடினார். (மத்தேயு 26:38-45 மாற்கு 14:36, லூக்கா 22:44) ஆனால் அவரது கோரிக்கையை கர்த்தர் ஏற்கவில்லை.

பாவம் செய்யாதவராக இயேசு இருந்திருந்தால் அவரது கோரிக்கை கர்த்தரால் ஏற்கப்பட்டு இருக்கும்.

மதுபானம் அருந்துவது பாவம் என்று பைபிள் (நீதி மொழிகள் 23:29-35) கூறுகிறது. ஆனால் இயேசு மதுபானப் பிரியன் என்றும் அதே பைபிள் (மத்தேயு 11:19) கூறுகிறது.

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது சட்டப்படி கல் எறிந்து கொல்லுமாறு மக்கள் கேட்டனர். அதற்கு இயேசு விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று கூறினார். (யோவான் 8:3-11)

இயேசு பாவம் செய்யாதவராக இருந்தால் அவராவது அவளைத் தண்டித்து இருக்கலாமே?

நியாயப் பிரமாணத்தை மீறுவதும் பாவமாகும். நியாயப் பிரமாணத்தில் விபச்சாரம் செய்தவருக்கு கல்லெறி தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியிருக்க அதைச் செயல்படுத்தாமல் இருந்தது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தியதும் மற்றொரு பாவமாகும்.

பாவம் செய்தவர்கள் ஞானஸ்னானம் பெற வேண்டும் என்பது பைபிள் கோட்பாடு. (மத்தேயு 3:6)

எல்லோரும் ஞானஸ்னானம் பெற்றது போல் இயேசுவும் ஞானஸ்னானம் பெற்றார் என்று மத்தேயு 3:13 கூறுகிறது.

மற்றவர்களை ஏசுவதும், கீழ்த்தரமான பேச்சுக்கள் பேசுவதும் கூட பாவம் தான். ஆனால் இயேசுவிடம் சிலர் அற்புதம் செய்யக் கேட்ட போது பொல்லாத விபச்சார சந்ததிகள் என்று திட்டியுள்ளார்.

அற்புதம் செய்யக் கேட்டால் செய்வேன் அல்லது மாட்டேன் என்று சொல்லலாம். கேட்டவர்களை மட்டுமின்றி கேட்டவர்களின் தாய்களும் விபச்சாரிகள் (மத்தேயு 12:39, மாற்கு 16:4) என்று திட்டுவது பாவம் அல்ல என்று கிறித்தவர்கள் சொல்வார்களா?

எனக்கும் போதனை செய்யுங்கள் என்று இயேசுவிடம் ஒரு அன்னிய இனத்துப் பெண் கேட்டார். இஸ்ரவேலர்கள் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றவர்கள் நாய்கள் என்றும் பொருள்படும் வகையில் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுவது அழகல்ல என்று இயேசு சொல்வது (மத்தேயு 15:26, மாற்கு 7:27) பாவம் இல்லையா?

அத்தி மரத்தில் கனிகள் இல்லை என்பதற்காக கோபத்தில் மரத்தைச் சபித்தது பாவம் அல்லவா? பார்க்க : மத்தேயு 21:19

இப்படி பைபிளைப் புரட்டினால் இயேசு நிறையப் பாவங்கள் செய்துள்ளார் என்பது தெரிகிறது. பைபிளை நம்பினால் இயேசு பாவம் செய்தார் என்றும் நம்ப வேண்டும்.

இயேசுவை ஷைத்தான் தீண்டவில்லை என்று இஸ்லாம் கூறுவதை ஒருவர் சான்றாகக் காட்டினால் அதற்கான அர்த்தத்தை இஸ்லாமில் இருந்து பெற வேண்டும். ஷைத்தான் தீண்டவில்லை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விளக்கி விட்டார்கள்.

(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 4548

குழந்தை பிறக்கும் போது ஷைத்தானால் தீண்டப்பட்டு குழந்தைகள் அழும். அதில் இருந்து இயேசு பாதுகாக்கப்பட்டார் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. அதன் பிறகு அவர் பாவம் செய்ய மாட்டார் என்று இஸ்லாம் கூறவில்லை. எல்லா மனிதர்களும் பாவம் செய்பவர்கள் என்று இஸ்லாம் தெளிவான அடிப்படைக் கொள்கையை வகுத்திருக்கிறது.

மேலும் விபரத்துக்கு 459வது குறிப்பையும் பார்க்கவும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...