514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலாமா?

இவ்வசனங்களில் (66:12, 21:91) பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசுவதாகக் கூறி கிறித்தவ போதகர்கள் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அவரிடம் என்று இவ்வசனங்களுக்கு நாம் மொழியாக்கம் செய்திருந்தாலும் அவரது ஃபர்ஜில் என்று தான் மூலத்தில் உள்ளது. ஃப்ர்ஜ் என்பது பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லாகும். அல்லாஹ்வின் வேதத்தில் இப்படி இருக்கலாமா? என்பது அவர்களின் கேள்வி.

ஆண் உறுப்பையோ பெண் உறுப்பையோ குறிப்பிட்டு பேசுவது தவறா? அது கேவலமானதா? பொதுவாக அப்படிக் கூற முடியாது. அந்த உறுப்பு பற்றி சொல்லும் அவசியம் எழுந்தால் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அந்தரங்க உறுப்பில் காயமோ, பிரச்சனையோ இருந்தால் மருத்துவரிடம் அதைப் பற்றி பேசித் தான் ஆக வேண்டும்.

ஆனால் இவ்வுறுப்புக்களைக் குறிப்பிட கொச்சையான சொற்களும் உள்ளன. நாகரிகமாகக் கருதும் சொற்களும் உள்ளன. கொச்சையான சொற்களைத் தவிர்த்து நாகரிகமான சொல்லைப் பயன்படுத்தலாம்.

ஐயா எனது மர்ம உறுப்பில், அல்லது அந்தரங்க உறுப்பில் கொப்புளம் உள்ளது; அதற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவரிடம் பேசினால் அதை யாரும் ஆபாசம் எனக் கருத மாட்டோம். சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது கொச்சையான சொல்லைப் பயன்படுத்தாமல் நாகரிகமான சொல்லைப் பயன்படுத்துவதை அறிவுடைய யாரும் ஆபாசமாகக் கருத மாட்டார்கள்.

இந்த வசனத்தில் சொல்ல வேண்டிய அவசியம் காரணமாக சொல்லப்பட்டுள்ளதா? நாகரிகமான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விளங்கிக் கொண்டால் இந்தக் கேள்வி அபத்தமான கேள்வி என்பது தெளிவாகும்.

ஃபர்ஜ் என்பது பெண்களின் உறுப்பைக் குறிக்கும் பச்சையான சொல்லா என்றால் இல்லவே இல்லை. இது ஆண், பெண் இரு பாலரின் அந்தரங்க உறுப்பைப் பற்றிக் குறிக்கும் நாகரிகமான பொதுவான சொல்லாகும்.

இச்சொல்லை பொது மேடைகளிலும் பயன்படுத்தலாம். யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள்.

ஆண்களே பெண்களே! உங்கள் அந்தரங்க உறுப்புக்களை தூய்மையான வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், சிறுநீர் கழித்த பின் அந்தரங்க உறுப்புக்களைக் கழுவிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது ஆபாசமா? யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.

இதே விஷயத்தை …… போன்ற சொல்லைப் பயன்டுத்தி சொன்னால் அதை ஆபாசம் என்று நாம் கூறுவோம்.

அந்தரங்க உறுப்பு என்ற சொல் எப்படி இரு பாலரின் உறுப்பைக் குறிக்குமோ அது போன்ற சொல் தான் ஃபர்ஜ் எனும் சொல்.

உதாரணமாக புகாரி எனும் ஹதீஸ் நூலில் நபிகள் நாயகம் இச்சொல்லைப் பயன்படுத்திய ஹதீஸ்கள் உள்ளன. இவை அனைத்திலும் ஃபர்ஜ் என்ற சொல் இருக்கிறது.

பார்க்க : புகாரி 367, 6284, 5819, 5820, 5821, 582

இந்த ஹதீஸ்களில் ஒரு ஆண் தனது ஃபர்ஜை மறைக்காமல் ஒரு ஆடை அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கே ஃபர்ஜ் என்பதன் பொருள் அந்தரங்க உறுப்பு எனத் தெளிவாகிறது. பெண்ணின் உறுப்பை இச்சொல்லால் குறிப்பிடுவது போல் ஆணின் உறுப்பையும் இச்சொல்லால் குறிப்பிடலாம் என்று தெரிகிறது.

கிறித்தவ போதகர்கள் கருதுவது போல் இது ஆபாசமான சொல் அல்ல என்பது உறுதியாகிறது.

புகாரி 249, 259, 260, 266. 274, 276, 281, 288 ஆகிய ஹதீஸ்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது ஃபர்ஜை தேய்த்துக் கழுவுவார்கள் என்று அவர்களின் மனைவியரான ஆயிஷா, மைமூனா ஆகியோர் அறிவிக்கிறார்கள் என இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

குளிக்கும் போது ஆண்கள் தமது அந்தரங்க உறுப்பைத் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற சட்டத்தை சொல்லும் போது இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

பெண்கள் கூட சாதாரணமாகப் பயன்படுத்தும் நாகரிகமான சொல்லே ஃபர்ஜ் என்பது.

ஆண்கள் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் பெண்களும் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் என்று சொன்னால் அது ஆபாசமான சொல் அல்ல. இது போல் ஆண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும்; பெண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும் என்று சர்வதாரணமாகச் சொல்லலாம்.

எனவே ஃபர்ஜ் என்ற சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதில் கடுகளவும் ஆபாசம் இல்லை.

சொல்ல வேண்டிய இடத்தில் இது சொல்லப்பட்டுள்ளதா என்றால் அப்படித் தான் சொல்லப்பட்டுள்ளது. .

ஒரு பெண்ணுக்கு குழந்தை தரிக்க வேண்டுமானால் கர்ப்பப் பைக்குள் ஆணின் உயிரணு செல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. மர்யம் எனும் மேரிக்கு ஆணின் விந்து இல்லாமல் குழந்தையை இறைவன் கொடுக்க முடிவு செய்கிறான். முழு வடிவம் பெற்ற குழந்தையை வயிற்றுக்குள் அனுப்பவில்லை. எல்லாக் குழந்தைகளையும் போல் கருவில் உருவாகி படிப்படியாக வளரும் வகையில் தான் குழந்தையைக் கொடுத்தான்.

உயிரணுவோ, அல்லது குழந்தையை உருவாக்கும் வேறு அணுவோ பெண்ணின் கருவறைக்குச் செல்லாமல் குழந்தை உருவாக முடியாது. கருவறைக்கு உள்ளே அந்தரங்க உறுப்பு வழியாகத் தான் செல்ல முடியும். வாய்க்குள் உயிரணுவைச் செலுத்தினால் அது கருவறைக்குப் போகாது.

இறைவன் நினைத்தால் இந்த வழிமுறை இல்லாமலும் குழந்தையைக் கொடுக்க முடியும். ஆனால் அப்படி இறைவன் நினைக்கவில்லை. அதனால் தான் ஜிப்ரீல் எனும் தேவதூதரை அல்லாஹ் அனுப்பி அந்த உயிரணுவை ஊதி கருவறைக்கு உயிரணு செல்வதன் மூலம் அந்தக் குழந்தையை அல்லாஹ் வழங்குகிறான்.

மனிதன் ஊதினான் என்றால் ஆடையைக் களைந்து ஊதினான் என்று பொருள் கொள்ள முடியும். உள்ளங்களிலும் ஊடுறுவும் தன்மை பெற்ற வானவர்களுக்கு அது அவசியம் இல்லை. ஆடையைக் களையாமல் அருகில் நின்று ஊதினால் கூட உள்ளே செலுத்த வேண்டிய உயிரணு உள்ளே சென்று விடும்.

குழந்தை எப்படி பெண்ணின் கருவ்றைக்குள் செல்கிறது என்று அறிவியல் பாடம் நடத்தும் போது அதைப் பற்றி பேசினால் அது ஆபாசம் ஆகாது. இன்றைக்கு கணவனின் விந்தை மட்டும் எடுத்து அதில் இருந்து உயிரணுவை மட்டும் பிரித்து பெண்ணுக்குள் செலுத்துகிறார்கள். அந்தரங்க உறுப்பு வழியாகவே செலுத்துகிறார்கள். இப்படி சொல்வது ஆபாசமா? உண்மை விளக்கமா?

இது குறித்து கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இல்லை.

மேலும் மற்ற சமுதாய மக்கள் இதைப் பற்றிக் கேட்டால் கூட அதில் நியாயம் உள்ளது. கிறித்தவர்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. அவர்கள் நம்பிக்கை கொண்ட பைபிளிலும் இது போல் தான் சொல்லப்பட்டுள்ளது.

18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

மத்தேயு 1

20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

மத்தேயு 1

ஒரு பெண் இன்னாரால் கர்ப்பமானாள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவனால் செலுத்தப்பட்ட உயிரணு மூலம் குழந்தை உருவானது என்று தான் பொருள்.

பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்றால் அந்தக் குழந்தை உருவாவதற்கான உயிரணு பரிசுத்த ஆவியால் செலுத்தப்பட்டுள்ளது என்று தான் அர்த்தம். கிறித்தவ மத போதகர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா1

ஒரு பெண் மேலே பரிசுத்த ஆவி வரும். அதனால் குழந்தை உண்டாகும் என்றால் அதன் அர்த்தம் என்ன? ஏதோ உடறுறவு கொண்டார்கள் என்பது போன்ற அர்த்தம் இதில் உள்ளது. ஆனால் குர்ஆன் வானவர் ஊதினார் என்று நாகரிகமாக இதைச் சொல்கிறது.

அதே சமயம் இப்படி கேள்வி கேட்கும் கிறித்தவ போதகர்கள் தங்கள் பைபிளில் மலிந்து கிடக்கும் ஆபாசங்களுக்கு பதில் சொல்ல முன்வர வேண்டும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...