521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான்.

1, அவ்வல் (முதலானவன்)

2, ஆகிர் (முடிவானவன்)

3, ளாஹிர் (மேலானவன்)

4, பாதின் (அடித்தளமானவன்)

இந்த நான்கு பண்புகள் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளன.

பொதுவாக ளாஹிர் என்ற சொல்லுக்கு வெளிப்படையானவன் என்று தான் பொருள் செய்யப்படுகிறது. எது கண்ணுக்கு முன்னாள் வெளிப்படையாகத் தெரிகிறதோ அதை ளாஹிர் என்பார்கள். ஆனால் அல்லாஹ் யாருடைய கண்களுக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படியனால் ளாஹிர் என்பதற்கு இது அல்லாத வேறு அர்த்தங்கள் இருந்தால் அதைத்தான் கொடுக்க வேண்டும்.

நாம் தேடினால் வெற்றி கொண்டவன் மேல் நிலையில் உள்ளவன் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது நீயே ளாஹிர். உனக்கு மேல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 5225)

இதன் மூலம் ளாஹிர் என்பதன் பொருள் மேலானவன் என தெளிவுபடுத்துகிறார்கள்.

அது போல் பாத்தின் என்ற சொல் அந்தரங்கமானது; பார்வைக்கு புலப்படாதது என்ற பொருளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பண்பைக் கூறி துஆ செய்யும் போது நீயே பாத்தின் உனக்குக் கீழே எதுவும் இல்லை என்று விளக்கியுள்ளார்கள். . (முஸ்லிம் 5225)

எனவே தான் இச்சொல்லுக்கு அடித்தளமானவன் என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.

ஒரு பொருளுக்கு அஸ்திவாரமாக இருப்பவை தான் அப்பொருளின் இறுதியாகும். அதற்கும் கீழ் அப்பொருளின் பாகங்கள் இருக்காது. அது போல் அகில உலகுக்கும் அடித்தளமாக அல்லாஹ் இருப்பதால் அவனுக்குக் கீழேயும் எதுவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

நீ தான் அவ்வல் – முதலானவன். உனக்கு முன்னர் எதுவும் இருந்ததில்லை.

நீ தான் ஆகிர் – முடிவானவன். உனக்குப் பின்னர் எதுவும் இருக்காது.

நீ தான் ளாஹிர் – மேலானவன். உனக்கு மேலே எதுவும் இல்லை

நீ தான் பாதின் – அடித்தளமானவன். உனக்குக் கீழே எதுவும் இல்லை

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நான்கு பண்புகளை விளக்கியுள்ளனர். நூல் முஸ்லிம் 5254, 5225

முதாலானவன் என்பதும் முடிவானவன் என்பதும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றும். மேலானவன் என்பதும் அடிததளமானவன் என்பதும் ஒன்றுக்கொன்று முரண் போல் தோன்றும்.

அல்லாஹ்வின் அதிகமான பெயர்கள் ஒரு கோனத்தில் பார்த்தால் அவற்றுக்கு இடையே முரண்பாடு உள்ளது போல் தான் தெரியும். அல்லாஹ் கோபக்காரன் என்பதும் கருணை உள்ளவன் என்பதும் முரண்போல் தோன்றினாலும் சரியான கோனத்தில் பார்க்கும் போது முரண்பாடாக இருக்காது.

சிலர் விஷயத்தில் அல்லாஹ் கோபக்காரனாக இருப்பான். வேறு சிலர் விஷயத்தில் கருணையைப் பொழிகிறான் என்று புரிந்து கொண்டால் அதில் முரண்பாடாகத் தெரியாது.

மனிதர்களிடமும் இப்படி முரண்பட்ட தன்மைகள் இருக்கின்றன. சரியான கோனத்தில் பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என விளங்கும்.

இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு பண்புகள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்துள்ள விளக்கத்தை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். எந்தக் கோனத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது என்று நபிகள் விளக்கி விட்டதால் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளலாம்

Read in OnlinePJ.in

By Farook

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...