71. நடுத் தொழுகையா? சிறந்த தொழுகையா?

இவ்வசனத்தில் (2:238) உஸ்தா எனும் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது.

உஸ்தா எனும் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல் : புகாரீ 6396)

உஸ்தா எனும் சொல்லுக்கு பல அறிஞர்கள் சிறந்த தொழுகை என்று விளக்கம் தருகிறார்கள்.

மிகச் சில அறிஞர்கள் நடுத்தொழுகை என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது ஒரு நாளின் முதல் தொழுகை சுபுஹ் ஆக இருந்தால் தான் அஸர் நடுத்தொழுகையாக ஆகும். எனவே ஒரு நாளின் துவக்கம் சுபுஹ் தான் மக்ரிப் அல்ல என்ற கருத்துடையவர்கள் இந்த விளக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

வஸத என்ற சொல்லும் அதில் இருந்து பிறந்த சொற்களும் நடு என்ற கருத்தைத் தாங்கி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை,

ஆனால் இங்கே நடு என்ற சொல் பயன்படுத்தப்படாமல் மிக நடுவு என்ற பொருளைத் தரும் இஸ்முத் தஃப்லீல் – கம்பேரிட்டிவ் டிகிரி – எனும் சொல்லமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்முத் தஃப்லீல் என்றால் அதை விட அவனை விட என்ற கூடுதல் அர்த்தம் தரும் சொல்லமைப்பாகும்.

இப்ராஹீமை விட இஸ்மாயீல் நல்லவன் என்று கூறினால் இருவரும் நல்லவர்கள் என்ற கருத்துடன் ஒருவன் கூடுதல் நல்லவனாக இருக்கிறான் என்ற கருத்து வரும்.

மற்ற மாணவர்களை விட மூஸா திறமை மிக்கவன் என்று சொன்னால் எல்லோரும் திறமைசாலிகளாக உள்ளனர். ஆயினும் மூஸா மற்றவர்களை விட கூடுதல் திறமை உள்ளவனாக இருக்கிறான் என்ற கருத்தை தரும்.

ஒரு தன்மை ஒருவனிடம் கூடுதலாகவும் இன்னொருவனிடம் கொஞ்சம் குறைவாக இருக்கும் போது தான் கம்பேர் செய்து ஒப்பிட்டுக்காட்ட முடியும்.

ஆனால் நடுவு என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும். அதைவிட நடுவு, இதை விட நடுவு என்று ஒப்பிட்டு பேச முடியாது. இது கொஞ்சம் கூடுதல் நடுவு இது கொஞ்சம் குறைவான நடுவு என்று சொல்ல முடியாது.

நடுவு என்பது கூடுதல் குறைவை ஏற்காத சொல்லாகும். நடு என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்கும். இரு பக்கமும் சமமான இடைவெளி இருந்தால் அதை நடுவு என்று சொல்வோம்.

உதாரணமாக அக்பர், அவ்ஸத் போன்ற அமைப்பில் உள்ளவை ஆண்பால் இஸ்முத் தஃப்லீல் ஆகும். குப்ரா உஸ்தா போன்ற அமைப்பில் உள்ளவை பெண்பால் இஸ்முத் தஃப்லீல் ஆகும்.

அக்பர் என்றால் மிகப் பெரியவன் என்று பொருள் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஏனெனில் பெரியவர்கள் என்ற நிலையில் பலர் உள்ளனர். அனைவரையும் விட பெரியவன் என்ற கருத்தில் இச்சொல்லை ஒருவருக்குப் பயன்படுத்த முடியும்.

ஆனால் அவ்ஸத், உஸ்தா என்ற சொல்லமைப்பு இஸ்முத் தஃப்லீல் வடிவில் இருந்தாலும் மிக நடுவு என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாக ஆகிவிடும். ஏனெனில் நடு என்று சொல்வதாக இருந்தால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். மிக நடுவு குறைந்த நடுவு என்று சொன்னால் நடுவு என்பதே பொருளற்றதாகி விடும்.

தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் நடுத்தொழுகை என்பதை நடுவு என்ற பொருளில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் தொழுகைகளையும் மிக நடுத் தொழுகையையும் என்ற பொருள் தரும் வகையில் இஸ்முத் தஃப்லீல் ஆக குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அதிக நடுவில் உள்ள தொழுகை என்று தான் மொழி பெயர்க்க வேண்டிவரும். நடுவு என்றால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும் என்பதற்கு முரணாக இது அமைந்து விடும்.

ஒரு பொருளைப் பற்றி இரண்டாவது என்று சொல்லலாம். மிக இரண்டாவது என்று சொல்ல முடியாது. மூன்றாவது நான்காவது போன்ற எல்லாச் சொற்களையும் மிக மூன்றாவது மிக நான்காவது என்று பயன்படுத்த முடியாது. அதுபோல் தான் நடுவு என்பதும். அதில் மிக என்ற கருத்தைத் தரும் இஸ்முத் தஃப்லீல் வராது. அப்படி வரும் சொற்களுக்கு சிறந்த என்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இதனால் தான் நாம் நடுத்தொழுகை என்று மொழி பெயர்க்காமல் மிகச் சிறந்த  தொழுகையையும் என்று மொழி பெயர்த்துள்ளோம்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...