71. நடுத் தொழுகையா? சிறந்த தொழுகையா?

இவ்வசனத்தில் (2:238) உஸ்தா எனும் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது.

உஸ்தா எனும் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல் : புகாரீ 6396)

உஸ்தா எனும் சொல்லுக்கு பல அறிஞர்கள் சிறந்த தொழுகை என்று விளக்கம் தருகிறார்கள்.

மிகச் சில அறிஞர்கள் நடுத்தொழுகை என்று விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது ஒரு நாளின் முதல் தொழுகை சுபுஹ் ஆக இருந்தால் தான் அஸர் நடுத்தொழுகையாக ஆகும். எனவே ஒரு நாளின் துவக்கம் சுபுஹ் தான் மக்ரிப் அல்ல என்ற கருத்துடையவர்கள் இந்த விளக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

வஸத என்ற சொல்லும் அதில் இருந்து பிறந்த சொற்களும் நடு என்ற கருத்தைத் தாங்கி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை,

ஆனால் இங்கே நடு என்ற சொல் பயன்படுத்தப்படாமல் மிக நடுவு என்ற பொருளைத் தரும் இஸ்முத் தஃப்லீல் – கம்பேரிட்டிவ் டிகிரி – எனும் சொல்லமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்முத் தஃப்லீல் என்றால் அதை விட அவனை விட என்ற கூடுதல் அர்த்தம் தரும் சொல்லமைப்பாகும்.

இப்ராஹீமை விட இஸ்மாயீல் நல்லவன் என்று கூறினால் இருவரும் நல்லவர்கள் என்ற கருத்துடன் ஒருவன் கூடுதல் நல்லவனாக இருக்கிறான் என்ற கருத்து வரும்.

மற்ற மாணவர்களை விட மூஸா திறமை மிக்கவன் என்று சொன்னால் எல்லோரும் திறமைசாலிகளாக உள்ளனர். ஆயினும் மூஸா மற்றவர்களை விட கூடுதல் திறமை உள்ளவனாக இருக்கிறான் என்ற கருத்தை தரும்.

ஒரு தன்மை ஒருவனிடம் கூடுதலாகவும் இன்னொருவனிடம் கொஞ்சம் குறைவாக இருக்கும் போது தான் கம்பேர் செய்து ஒப்பிட்டுக்காட்ட முடியும்.

ஆனால் நடுவு என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும். அதைவிட நடுவு, இதை விட நடுவு என்று ஒப்பிட்டு பேச முடியாது. இது கொஞ்சம் கூடுதல் நடுவு இது கொஞ்சம் குறைவான நடுவு என்று சொல்ல முடியாது.

நடுவு என்பது கூடுதல் குறைவை ஏற்காத சொல்லாகும். நடு என்றால் ஒன்றே ஒன்று தான் இருக்கும். இரு பக்கமும் சமமான இடைவெளி இருந்தால் அதை நடுவு என்று சொல்வோம்.

உதாரணமாக அக்பர், அவ்ஸத் போன்ற அமைப்பில் உள்ளவை ஆண்பால் இஸ்முத் தஃப்லீல் ஆகும். குப்ரா உஸ்தா போன்ற அமைப்பில் உள்ளவை பெண்பால் இஸ்முத் தஃப்லீல் ஆகும்.

அக்பர் என்றால் மிகப் பெரியவன் என்று பொருள் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஏனெனில் பெரியவர்கள் என்ற நிலையில் பலர் உள்ளனர். அனைவரையும் விட பெரியவன் என்ற கருத்தில் இச்சொல்லை ஒருவருக்குப் பயன்படுத்த முடியும்.

ஆனால் அவ்ஸத், உஸ்தா என்ற சொல்லமைப்பு இஸ்முத் தஃப்லீல் வடிவில் இருந்தாலும் மிக நடுவு என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாக ஆகிவிடும். ஏனெனில் நடு என்று சொல்வதாக இருந்தால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். மிக நடுவு குறைந்த நடுவு என்று சொன்னால் நடுவு என்பதே பொருளற்றதாகி விடும்.

தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் நடுத்தொழுகை என்பதை நடுவு என்ற பொருளில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் தொழுகைகளையும் மிக நடுத் தொழுகையையும் என்ற பொருள் தரும் வகையில் இஸ்முத் தஃப்லீல் ஆக குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அதிக நடுவில் உள்ள தொழுகை என்று தான் மொழி பெயர்க்க வேண்டிவரும். நடுவு என்றால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும் என்பதற்கு முரணாக இது அமைந்து விடும்.

ஒரு பொருளைப் பற்றி இரண்டாவது என்று சொல்லலாம். மிக இரண்டாவது என்று சொல்ல முடியாது. மூன்றாவது நான்காவது போன்ற எல்லாச் சொற்களையும் மிக மூன்றாவது மிக நான்காவது என்று பயன்படுத்த முடியாது. அதுபோல் தான் நடுவு என்பதும். அதில் மிக என்ற கருத்தைத் தரும் இஸ்முத் தஃப்லீல் வராது. அப்படி வரும் சொற்களுக்கு சிறந்த என்ற பொருளைத் தான் கொடுக்க வேண்டும் என்று இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இதனால் தான் நாம் நடுத்தொழுகை என்று மொழி பெயர்க்காமல் மிகச் சிறந்த  தொழுகையையும் என்று மொழி பெயர்த்துள்ளோம்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...