162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா?

இப்ராஹீம் நபியவர்கள் முதலில் நட்சத்திரத்தைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சந்திரனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சூரியனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு இவை கடவுளாக இருக்க முடியாது என்று விளங்கிக் கொண்டார்கள் என்று இவ்வசனத்தில் (6:76-78) கூறப்படுகிறது.

ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு போதும் இணை வைத்தவராக இருந்ததில்லை என 2:135, 3:67, 3:95, 6:161, 16:120, 16:123 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகவே இருந்ததில்லை என்ற காரணத்தினால் சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களைக் கடவுள் எனச் சொன்னது மக்களுக்குப் படிப்படியாகப் புரிய வைப்பதற்காகத் தான் இருக்க முடியும்.

அவற்றைக் கடவுள் என்று இப்ராஹீம் நபியவர்கள் உண்மையாக நினைத்திருந்தால் “அவர் இணை வைத்தவராக இருந்ததில்லை” என்று கூறும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக அமைந்து விடும்.

ஆரம்பத்தில் அறியாமையின் காரணமாக இப்ராஹீம் நபியவர்கள் நபியாக ஆவதற்கு முன் இவ்வாறு கூறியிருக்கலாமா என்றால் அதுவும் தவறாகும்.

ஏனெனில் இந்தச் சான்றை நாம் தான் இப்ராஹீமுக்கு வழங்கினோம் என்று 6:83 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு இப்ராஹீம் நபி வாதிட்டது அல்லாஹ் கற்றுக் கொடுத்த அடிப்படையில் தான் என்பது இதிலிருந்து தெரிகிறது. மக்களுக்குப் புரிய வைப்பதற்காகவே இவ்வாறு இப்ராஹீம் நபியவர்கள் கூறினார்கள் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காகச் சில தந்திரமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய வரலாற்றைப் படிப்பினையாக அல்லாஹ் நமக்குச் சொல்லிக் காட்டுவதால் பிறருக்குப் புரிய வைப்பதற்காக படிப்படியாகச் செய்திகளைச் சொல்லலாம் என்ற படிப்பினையையும் இதிலிருந்து பெறலாம்.

மார்க்கம் தடை செய்துள்ள அம்சங்கள் ஏதும் இடம் பெறாமல் நாடகம் போன்ற வடிவில் நல்ல அறிவுரைகளைக் கூறலாம் என்பதற்கும் இவ்வசனத்தைச் சான்றாகக் கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியின் இந்த வழிமுறையை அல்லாஹ்வும் 6:83 வசனத்தில் அங்கீகரிக்கிறான்.

மக்களைத் திருத்துவதற்காக இப்ராஹீம் நபி அவர்கள் பொய் சொன்னது போல் நாமும் மக்களை நல்வழிப்படுத்த பொய் சொல்லலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

குருடர் பார்க்கிறார்; செவிடர் கேட்கிறார் என்று சில மதத்தினர் பிரச்சாரம் செய்வது போல் நாமும் பிரச்சாரம் செய்யலாம் என்றும் கருதுகின்றனர். இப்ராஹீம் நபியவர்களின் இந்த வழிமுறையைத் தமக்குரிய சான்றாக இவர்கள் காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

ஏனெனில் குருடர் பார்க்கிறார் என்பது போன்ற பிரச்சாரம் செய்பவர்கள், அந்தப் பொய்யை மக்கள் நம்பி, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்கின்றனர். அதற்குச் செவிகொடுக்கின்ற மக்களும் அதை மெய் என்றே கருதுகின்றனர்.

ஆனால் இப்ராஹீம் நபி, தாம் சொன்னதை உண்மை என்று நம்பிச் சொல்லவில்லை. மக்கள் அதை உண்மை என்று நம்ப வேண்டும் என்பதற்காகவும் சொல்லவில்லை. சூரியனையோ, சந்திரனையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதைச் சொல்லவில்லை.

எந்த விதமான ஆற்றலும் இல்லாத சிலையை விட நட்சத்திரம் பரவாயில்லை எனக் கூறி அம்மக்களை இப்ராஹீம் நபியவர்கள் ஒருபடி மேலே கொண்டு வருகின்றனர்.

நட்சத்திரத்தில் அவ்வளவு வெளிச்சம் இல்லை; அதை விட அதிக வெளிச்சம் தரும் சந்திரன் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறி இன்னொரு படி அவர்களை மேலே ஏற்றுகிறார்கள்.

கடவுள் என்று நம்புவதற்கு இது போதாது; இதை விடவும் பெரிதாக உள்ள சூரியன் தான் கடவுளாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். இதன் மூலம் இன்னொரு படி அம்மக்களின் சிந்தனையைக் கூர்மைப்படுத்துகிறார்கள்.

பின்னர் அகில உலகையும் படைத்தவன் தான் கடவுளாக இருக்க முடியும் எனக் கூறி அம்மக்களைச் சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.

கீழே இருப்பவரைப் படிப்படியாக மேலே கொண்டு வந்து நிறுத்துவதற்குத் தான் இப்ராஹீம் நபியின் வழியில் முன்மாதிரி உள்ளது.

மதத்தைப் பரப்ப பொய் சொல்வோர் தப்பான கொள்கையை மக்கள் ஏற்று நம்ப வேண்டும் என்பதற்காகவே பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய்யிலேயே மக்களை நிலைத்திருக்கச் செய்கிறார்கள். மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த இடத்திலேயே அவர்களை நிறுத்துவதற்காகச் சொல்லும் பொய்க்கும், இப்ராஹீம் நபியின் இந்த வழிமுறைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

(மேலும் விபரத்திற்கு 236, 336, 432 ஆகிய குறிப்புகளையும் காண்க!)

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...