247. இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்பு கோரலாமா?

முஸ்லிம்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை இவ்வசனத்தில் (9:113)அல்லாஹ் விளக்குகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பெற்றோரும், உறவினரும், முஸ்லிம்களின் பெற்றோரும், உறவினரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போராக இருந்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரக் கூடாது என்பது தான் அந்தக் கொள்கை விளக்கம்.

எனக்கு இணை கற்பித்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின்னர் அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடுவது அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாக ஆகும் என்பதால் இவ்வாறு தடை விதிக்கப்படுகிறது.

பொதுவாக தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கருதும் மனிதன், தனக்கு வேண்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் செய்யும் தவறுகளை மன்னிப்பவனாக இருக்கிறான்.

ஆனால் அல்லாஹ்வின் தன்மை இதற்கு நேர் எதிரானதாகும். அவனுக்கு இணையாக மற்றவர்களைக் கருதும் போது தனது இடத்தை மற்றவர்களுக்குக் கொடுத்ததால் அல்லாஹ் கோபப்படுகிறான். நபிகள் நாயகமும், முஸ்லிம்களும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் தனது கண்ணியம் என்று வரும் போது அதையெல்லாம் அல்லாஹ் கவனிக்க மாட்டான். அவனுக்கு இணை கற்பித்து அவனது கண்ணியத்துடன் விளையாடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான். அவர்களை மன்னிக்க மாட்டான் என்பது ஒரு புறமிருக்க அப்படி மன்னிப்பு கேட்பதும் குற்றம் என்று சொல்கிறான்.

இவ்வசனம் இக்கொள்கையைத் தெளிவாக விளக்குகிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு நேர்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யலாம். அவர்களுக்கு இவ்வுலகச் செல்வங்களைக் கேட்டு துஆ செய்யலாம். அவர்களது உடல் ஆரோக்கியத்துக்காக துஆச் செய்யலாம். இதையெல்லாம் அனுமதிக்கும் இறைவன் தனக்கு இணை கற்பிப்பவர்களுக்காக மன்னிப்பு கோருவதை அனுமதிக்க மறுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்குக் கூட இதில் விதிவிலக்கு இல்லை என்றும் இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இதில் கூடுதல் தெளிவைப் பெறலாம்.

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்’ வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை வைத்து உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். அப்போது தான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பு அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

அறிவிப்பவர் : முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி)

நூல் : புகாரீ : 3884, 4675

இஸ்லாமை ஏற்காவிட்டாலும் இஸ்லாமுக்கு உறுதுணையாக இருந்த அபூதாலிபுக்காக நான் மன்னிப்புத் தேடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மறுத்து இவ்வசனம் அருளப்பட்டது.

அல்லாஹ்வின் விஷயத்தில் வரம்பு மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இறைத்தூதர்களும் காப்பாற்ற முடியாது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக அறிவிக்கின்றது.

இது போல் தமது தாயாருக்காக பாவமன்னிப்பு கோர நபியவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கோரினார்கள். அதற்கும் அல்லாஹ் அனுமதி மறுத்துவிட்டான் என்பதைப் பின் வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

‘என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1621, 1622

நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி அல்லாஹ்வின் நண்பர் என்று அல்லாஹ்வே பாராட்டிய இப்ராஹீம் நபியவர்களும் தமது தந்தைக்காக பாவமன்னிப்பு தேடியதாகவும், பாவமன்னிப்பு தேட அனுமதி கேட்டதாகவும் 14:41, 19:47, 26:86 வசனங்களில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

இதற்காக அல்லாஹ் இப்ராஹீம் நபியைக் கண்டித்த பின் அதிலிருந்து அவர்கள் விலகிக் கொண்டார்கள் என்று 9:114 வசனம் கூறுகிறது.

அனைத்து விஷயங்களிலும் இப்ராஹீம் நபியிடம் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உண்டு என்று கூறிய இறைவன் அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு தேடியதில் முன்மாதிரி இல்லை என்று 60:4 வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...