279. ஜிப்ரீலின் கூற்று திருக்குர்ஆனில் இடம் பெறுமா?

திருக்குர்ஆன் வானவர்களின் கூற்று என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் (19:64) அமைந்துள்ளது.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக இருந்தால் இறைவன் அதை எடுத்துக் காட்டும் வகையில் தான் இடம் பெற வேண்டும்.

ஆனால் இந்த வசனத்தில் “இறைவனின் அனுமதி இல்லாமல் நாம் இறங்க மாட்டோம்” என்று வானவர் கூறுவது திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. வானவரின் சொந்தக் கூற்று எவ்வாறு திருக்குர்ஆனில் இடம் பெறலாம் என்ற சந்தேகம் இங்கே எழக்கூடும். ஆயினும் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்ற சொல்லமைப்புகள் காணப்படுகின்றன.

இதற்குக் காரணம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் நூலாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகவே வழங்கப்பட்டது. பேச்சு வழக்கில் சில சொற்களை நாம் கூறாவிட்டாலும் சூழ்நிலையை வைத்து அதைப் புரிந்து கொள்வோம்.

ஒரு சபையில் இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் இடையே உள்ள விவகாரத்தை சபைத் தலைவர் விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஒருவர் அப்படியே எழுதுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.

நீ செய்தாயா என்று தலைவர் இஸ்மாயீலிடம் கேட்டார்.

நான் செய்யவில்லை என்று இஸ்மாயீல் சொன்னார்.

உடனே தலைவர் இப்ராஹீமை நோக்கி இவர் செய்யவில்லை என்கிறாரே? ஆதாரமில்லாமல் ஏன் குற்றம் சாட்டுகிறாய் என்று கேட்டார்.

என்னிடம் ஆதாரம் உள்ளது என்று இப்ராஹீம் சொன்னார்.

அந்த விசாரணையை இப்படி ஒருவர் எழுதுகிறார் என்றால் இது அவர் புரிந்து கொண்ட அடிப்படையில் எழுதியதாகும். ஆனால் அங்கே பேசப்பட்ட சொற்களை மட்டும் எழுதினால் எப்படி இருக்கும்?

நீ செய்தாயா? நான் செய்யவில்லை. இவர் செய்யவில்லை என்கிறாரே? ஆதாரமில்லாமல் ஏன் குற்றம் சாட்டுகிறாய்? என்னிடம் ஆதாரம் உள்ளது.

அந்த சபையில் பேசப்பட்டது இவ்வளவு தான். இரண்டு பாராக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பேச்சின் போது எவ்வளவு வார்த்தைகள் விடுபட்டுள்ளன என்று பாருங்கள். இப்படிச் சொன்னார். அப்படிக் கேட்டார் என்பது போன்ற சொற்களை நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் பல உரையாடல்கள் அமைந்துள்ளன.

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட லவ்ஹூல் மஹ்பூலில் இருக்கிறது. அல்லாஹ்வின் அனுமதியுடன் ஜிப்ரீல் அவ்வப்போது எடுத்து வந்து சொல்வார்.

சில நாட்கள் வஹீ வராமல் போகும் என்பதும், லவ்ஹுல் மஹ்பூலில் எழுதப்பட்டு இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கவலைப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டு இருந்தது. அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் நாம் இறங்க மாட்டோம் என்ற வசனத்தை லவ்ஹுல் மஹ்பூலில் இருந்து ஜிப்ரீல் எடுத்துச் செல்வார் என்பதும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

(இது பற்றி மேலதிக விபரத்தை அறிய 492வது குறிப்பை வாசிக்கவும்)

அதனடிப்படையில் நாம் இறங்க மாட்டோம் என்று ஜிப்ரீல் கூறினார் என்றால் நாம் இறங்க மாட்டோம் என்பதை அல்லாஹ் கூறச் சொன்னான் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்ன அனைத்துமே அல்லாஹ் கூறச் சொன்னவை தான்.

இது போல் 37:164 வசனத்தில் எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள் என்று உள்ளது.

நாங்கள் என்பது வானவர்களைக் குறிக்கிறது. வானவர்களே நேரடியாகக் கூறியது திருக்குர்ஆனில் இடம் பெற்றதாக நினைக்கக் கூடாது. இப்படி அல்லாஹ் கூறச் சொன்னான் என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் ஒலி வடிவமாக அருளப்பட்டதால் அருளப்படும் சூழ்நிலையை வைத்துப் புரிந்து கொள்வார்கள் என்பதற்காக பேச்சு வழக்குக்கு ஏற்ப திருக்குர்ஆனும் இந்த நடையைப் பயன்படுத்தியுள்ளது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...