489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) கூறுகின்றன.

திருக்குர்ஆனில் பிறமொழிச் சொற்களும் இடம் பெற்று இருக்கும் போது தெளிவான அரபுமொழி என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று திருக்குர்ஆனில் குறை காணப் புகுந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உலகில் உள்ள எந்த மொழியாக இருந்தாலும் அதில் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் இருக்காது. பிறமொழிச் சொற்கள் கலப்பதால் அது வேறுமொழியாக ஆகாது.

பிறமொழி பேசும் மக்களின் பெயர்கள் பிறமொழியில் தான் அமைந்திருக்கும். அந்த மக்களின் பெயர்களை நாம் பயன்படுத்தும் போது அப்படியே தான் பயன்படுத்தியாக வேண்டும்.

அது போல் ஒரு பகுதியில் விளையும் பொருள்கள், அல்லது தயாரிக்கப்படும் பொருட்கள் இன்னொரு மொழிபேசும் பகுதிக்குப் போகும் போது சில நேரங்களில் பிறமொழிப் பெயருடனே போய்ச் சேர்ந்து விடும். இட்லி எனும் உணவுப் பொருளை அறியாத பகுதிக்கு இட்லி அறிமுகமாகும் போது இட்லி என்ற பெயரிலேயே அறிமுகமாகி விடும். இது போன்ற காரணங்களாலும் பிறமொழிக் கலப்பில் இருந்து எந்த ஒரு மொழியும் தப்பிக்க முடியாது.

தெளிவான அரபுமொழி என்பதற்குப் பிறமொழிச் சொற்கள் கலப்பு இல்லாதது என்று பொருள் இல்லை.

ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணமும், மரபுகளும் உள்ளன. அதைப் பேணி ஒருவன் பேசினால் அவன் தெளிவான மொழியில் பேசுகிறான் என்று சொல்வோம். அதை மீறினால் தெளிவான மொழியில் பேசுகிறான் என்று சொல்ல மாட்டோம்.

உதாரணமாக மக்கள் என்பதை மக்கள்கள் என்றும், பறவைகள் வந்தன என்பதை பறவைகள் வந்தது என்றும், அவன் வெட்டப்படுவான் என்பதை அவனை வெட்டப்படும் என்றும், செய்திகள் வாசிப்பவர் என்று சொல்லாமல் செய்திகள் வாசிப்பது என்றும் இன்னும் பல வகைகளிலும் மொழியைக் கொலை செய்கிறார்கள். இவை தமிழ்ச்சொற்களாக இருந்தாலும் இதைச் சரியான தமிழ் என்று நாம் சொல்ல மாட்டோம்.

அது போல் பேச்சு வழக்கில் பல சொற்களைச் சிதைத்தும் பேசுகிறார்கள். எங்கிருந்து வருகிறாய் என்பதை எங்கேந்து வர்ரே என்பது போல் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

இது போல் தமிழ் மொழியின் இலக்கணத்தை மீறி தமிழில் பேசினாலும் அது தெளிவான தமிழ் என்று சொல்லப்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தும் திருக்குர்ஆனில் இது போல் கொச்சையான அரபு நடை காணப்படவில்லை. மொழிப் பண்டிதர்கள் பேணக் கூடிய அளவுக்கு திருக்குர்ஆன் இலக்கணத்தையும், மொழிமரபையும் பேணியுள்ளது. கொச்சையான நடை இதில் இல்லை. வார்த்தைகளைக் கடித்துக் குதறுதல் இல்லை.

இதைத் தான் தெளிவான அரபி என்று சொல்வார்கள்.

ஜார்ஜ் புஷ் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் துபாய் போனார் என்று ஒருவர் பேசினால் அதில் போனார் என்பதும், ஏர்லைன்ஸில் என்பதில் உள்ள இல் என்பதும் தவிர மற்ற அனைத்துமே வேற்று மொழிச்சொற்கள் தான். ஆனாலும் இதை நல்ல தமிழ் என்போம். ஏனெனில் பிற மொழிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ் இலக்கண விதிப்படி இது அமைந்துள்ளது.

நாமல் அனைவர்களும் முதல்வரிட்டெ முறையிடோனும் என்று ஒருவன் பேசினால் எல்லாமே தமிழ்ச் சொல்லாக இருந்தும் கொச்சைத் தமிழ் என்போம். இச்சொற்கள் தமிழாக இருந்தாலும் அது சிதைக்கப்பட்டு விட்டது தான் காரணம்.

தெளிவான அரபி, கொச்சையான அரபி என்பதும் இது போல் தான் பயன்படுத்தப்படுகின்றன.

எல்லா மொழிகளிலும் பிறமொழிச் சொற்கள் கலந்திருப்பது போல் அரபுமொழியிலும் கலந்துள்ளதால் திருக்குர்ஆனிலும் அந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுவது இயல்பானது தான். இதனால் திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் உள்ளது என்பதற்கு முரணாக ஆகாது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...