முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதா?

NPR தகவல் சேகரிப்பு பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டு விட்டது குறித்து பலரும் பலவாறாக பதிவிட்டு வருகின்றனர். வைகோ உள்ளிட்ட தலைவர்களும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எதை நாம் கண்டிப்பதாக இருந்தாலும் உண்மை அடிப்படையிலும், அறிவார்ந்த முறையிலும் கண்டிக்க வேண்டும். மேலோட்டமாக நாம் தவறு என்று கருதும் விஷயம் ஆழமாகப் பார்க்கும் போது தவறானதாக இல்லாமல் இருக்கலாம். எனவே சிந்தித்து பதிவிடுவது நல்லது.

முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் இந்த தகவல் திரட்டியில் விடுபட்டுள்ளது என்பது உண்மை தான்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும், பண்டிகைகளுக்கும் என்ன சம்மந்தம்?  இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போது தங்களின் பிறந்த நாளும் பிறந்த ஆண்டும் வயதானவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை உத்தேசமாகக் கண்டறிய சில விபரங்களைக் கேட்பார்கள்.

உதாரணமாக ஜப்பான்காரன் குண்டு போட்ட ஆண்டில் பிறந்தேன்; அல்லது பாகிஸ்தான் பிரிவினையின் போது பிறந்தேன். அல்லது இந்தச் சம்பவங்கள் நடக்கும் போது எனக்கு பத்து வயது இருக்கலாம் என்பது போல் சொல்வார்களானால் அதை வைத்து பிறந்த வருடத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

எந்தச் சம்பவத்துக்கு எந்த ஆண்டு என்ற விபரம் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.

இதை மேனுவல் புத்தகத்தில் காணலாம்.

ஆங்கில ஆண்டு தெரியாமல் இஸ்லாமிய ஆண்டு 1440 ல் பிறந்தேன் என்று சொல்வார்களானால் 1440 க்கு உரிய கி.பி ஆண்டு எது என்று ஒரு அட்டவனையில் சொல்லி உள்ளார்கள். அதன்படி பிறந்த ஆண்டைப் பதிவார்கள். இஸ்லாமிய ஆண்டு மட்டுமின்றி ஒவ்வொரு பகுதியில் வழக்கத்தில் உள்ள ஆண்டுக்கு நிகரான ஆங்கில ஆண்டுகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளார்கள்.

இதையும் மேனுவலில் காணலாம்.

அதில் இஸ்லாமிய ஆண்டைப் புறக்கணிக்கவில்லை.

பிறந்த ஆண்டை உத்தேசமாக அறிந்த பின் பிறந்த மாதத்தைக் கண்டறிய அனைத்து மதத்தினரின் பண்டிகைகளைப் பட்டியல் போட்டுள்ளார்கள்.

உதாரணமாக பொங்கல் மாதம் பிறந்தேன் என்ற அளவுக்குத் தான் அவர்களால் சொல்ல முடியும் என்றால் ஜனவரி என்று குறிப்பிடுவார்கள். இப்படி ஒவ்வொரு பண்டிகைக்குமான ஆங்கில மாதங்களைப் பட்டியலில் போட்டுள்ளார்கள். அதை வைத்து பிறந்த மாதம் எது என்று முடிவு செய்வார்கள்.

இதில் தான் முஸ்லிம் பண்டிகைகள் சொல்லப்படவில்லை. இதற்குக் காரணம் முஸ்லிம் பண்டிகளைகளை வைத்து ஆங்கில மாதத்தை முடிவு செய்ய முடியாது என்பது தான்.

உதாரணமாக ரம்ஜான் பண்டிகையின் போது பிறந்தேன் என்று சொல்வார்களானால் அதை வைத்து ஆங்கில மாதம் இது என்று முடிவு செய்ய முடியாது, முஸ்லிம் பண்டிகைகள் பிறை அடிப்படையிலானது என்பதால் ரம்ஜான் பண்டிகை ஜனவரியிலும் வரும். பிப்ரவரியிலும் வரும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் வரும்.

எனவே தான் முஸ்லிம் பண்டிகைகள் சேர்க்கப்படவில்லை என்று தான் இதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இதை விமர்சிக்கும் போது நம்முடைய அறிவைக் குறை சொல்வார்கள்.

NPR NRC CAA ஆகியன வேண்டாம் என்பதற்கான சரியான வாதங்கள் உள்ளன. அவற்றை மட்டும் முன்வைத்து வாதிடுவதும், இது போல அறைகுறையாக புரிந்து கொண்டு விமர்சிப்பத்தை தவிர்ப்பதும் நல்லது.

அதிகாரிகள் கணக்கு எடுப்பதற்கான மேனுவலை pdf வடிவில் இணைத்துள்ளோம். அதைப் பார்த்து இதை அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் பண்டிகைகளைக் குறிப்பிட்டு இருந்தாலும் நாம் எதிர்ப்போம்.

ஒட்டு மொத்தமாக இந்தக் கணக்கெடுப்பையே எதிர்க்கிறோம்.

இது போன்ற அர்த்தமற்ற விமர்சனங்கள்: அடிப்படையான விஷயத்திலிருந்து நம்மை தூரமாக்க இடம் கொடுக்கக் கூடாது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...