முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதா?

NPR தகவல் சேகரிப்பு பட்டியலில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டுள்ளதா?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் முஸ்லிம் பண்டிகைகள் விடுபட்டு விட்டது குறித்து பலரும் பலவாறாக பதிவிட்டு வருகின்றனர். வைகோ உள்ளிட்ட தலைவர்களும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எதை நாம் கண்டிப்பதாக இருந்தாலும் உண்மை அடிப்படையிலும், அறிவார்ந்த முறையிலும் கண்டிக்க வேண்டும். மேலோட்டமாக நாம் தவறு என்று கருதும் விஷயம் ஆழமாகப் பார்க்கும் போது தவறானதாக இல்லாமல் இருக்கலாம். எனவே சிந்தித்து பதிவிடுவது நல்லது.

முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் இந்த தகவல் திரட்டியில் விடுபட்டுள்ளது என்பது உண்மை தான்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கும், பண்டிகைகளுக்கும் என்ன சம்மந்தம்?  இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போது தங்களின் பிறந்த நாளும் பிறந்த ஆண்டும் வயதானவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை உத்தேசமாகக் கண்டறிய சில விபரங்களைக் கேட்பார்கள்.

உதாரணமாக ஜப்பான்காரன் குண்டு போட்ட ஆண்டில் பிறந்தேன்; அல்லது பாகிஸ்தான் பிரிவினையின் போது பிறந்தேன். அல்லது இந்தச் சம்பவங்கள் நடக்கும் போது எனக்கு பத்து வயது இருக்கலாம் என்பது போல் சொல்வார்களானால் அதை வைத்து பிறந்த வருடத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

எந்தச் சம்பவத்துக்கு எந்த ஆண்டு என்ற விபரம் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.

இதை மேனுவல் புத்தகத்தில் காணலாம்.

ஆங்கில ஆண்டு தெரியாமல் இஸ்லாமிய ஆண்டு 1440 ல் பிறந்தேன் என்று சொல்வார்களானால் 1440 க்கு உரிய கி.பி ஆண்டு எது என்று ஒரு அட்டவனையில் சொல்லி உள்ளார்கள். அதன்படி பிறந்த ஆண்டைப் பதிவார்கள். இஸ்லாமிய ஆண்டு மட்டுமின்றி ஒவ்வொரு பகுதியில் வழக்கத்தில் உள்ள ஆண்டுக்கு நிகரான ஆங்கில ஆண்டுகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளார்கள்.

இதையும் மேனுவலில் காணலாம்.

அதில் இஸ்லாமிய ஆண்டைப் புறக்கணிக்கவில்லை.

பிறந்த ஆண்டை உத்தேசமாக அறிந்த பின் பிறந்த மாதத்தைக் கண்டறிய அனைத்து மதத்தினரின் பண்டிகைகளைப் பட்டியல் போட்டுள்ளார்கள்.

உதாரணமாக பொங்கல் மாதம் பிறந்தேன் என்ற அளவுக்குத் தான் அவர்களால் சொல்ல முடியும் என்றால் ஜனவரி என்று குறிப்பிடுவார்கள். இப்படி ஒவ்வொரு பண்டிகைக்குமான ஆங்கில மாதங்களைப் பட்டியலில் போட்டுள்ளார்கள். அதை வைத்து பிறந்த மாதம் எது என்று முடிவு செய்வார்கள்.

இதில் தான் முஸ்லிம் பண்டிகைகள் சொல்லப்படவில்லை. இதற்குக் காரணம் முஸ்லிம் பண்டிகளைகளை வைத்து ஆங்கில மாதத்தை முடிவு செய்ய முடியாது என்பது தான்.

உதாரணமாக ரம்ஜான் பண்டிகையின் போது பிறந்தேன் என்று சொல்வார்களானால் அதை வைத்து ஆங்கில மாதம் இது என்று முடிவு செய்ய முடியாது, முஸ்லிம் பண்டிகைகள் பிறை அடிப்படையிலானது என்பதால் ரம்ஜான் பண்டிகை ஜனவரியிலும் வரும். பிப்ரவரியிலும் வரும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் வரும்.

எனவே தான் முஸ்லிம் பண்டிகைகள் சேர்க்கப்படவில்லை என்று தான் இதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இதை விமர்சிக்கும் போது நம்முடைய அறிவைக் குறை சொல்வார்கள்.

NPR NRC CAA ஆகியன வேண்டாம் என்பதற்கான சரியான வாதங்கள் உள்ளன. அவற்றை மட்டும் முன்வைத்து வாதிடுவதும், இது போல அறைகுறையாக புரிந்து கொண்டு விமர்சிப்பத்தை தவிர்ப்பதும் நல்லது.

அதிகாரிகள் கணக்கு எடுப்பதற்கான மேனுவலை pdf வடிவில் இணைத்துள்ளோம். அதைப் பார்த்து இதை அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் பண்டிகைகளைக் குறிப்பிட்டு இருந்தாலும் நாம் எதிர்ப்போம்.

ஒட்டு மொத்தமாக இந்தக் கணக்கெடுப்பையே எதிர்க்கிறோம்.

இது போன்ற அர்த்தமற்ற விமர்சனங்கள்: அடிப்படையான விஷயத்திலிருந்து நம்மை தூரமாக்க இடம் கொடுக்கக் கூடாது.

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...