அனைத்து முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது ஏன்?

? கலிமாச் சொன்ன அனைத்து முஸ்லிம்களும் எங்களுக்குத் தேவையில்லை. தவ்ஹீத்வாதிகள் மட்டும்தான் வேண்டும் என்று தனியாக இயக்கம் ஆரம்பித்த நீங்கள் இடஒதுக்கீட்டு பேரணிக்கு அனைத்துப் பிரிவு முஸ்லிம்களையும் அழைப்பது உங்களுக்கு முரண்பாடாக தோன்றவில்லையா? என்று சிலர் கேட்கிறார்களே?

எம். செய்யது இக்பால், சென்னை-13

பதில்

தவ்ஹீத்வாதிகளைத் தவிர ஏனைய முஸ்லிம்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று நாங்கள் ஒரு காலத்திலும் சொன்னது கிடையாது. அவ்வாறு கருதியதும் இல்லை. அவ்வாறு நாம் கருதி இருந்தால் தான் அது முரண்பாடாகும்.

பிரச்சனை என்னவென்றால், தவ்ஹீத் கொள்கையை விட்டுவிடாமல் அனைத்து முஸ்லிம்களுக்காவும் போராட முடியுமா? முடியாதா? என்பது தான். இதில் முடியும் என்பதே நமது நிலைபாடு.

இந்த நிலைபாடு இன்று நேற்று அல்ல. 90-களிலேயே நாம் எடுத்தது. அதனால் தான் சமுதாயப் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடுவதற்காக நாம் 1995ல் இயக்கத்தை (தமுமுக) உருவாக்கினோம்.

அதற்கு முன்பும் கூட தவ்ஹீத் பிரச்சாரம் மட்டும் செய்து வந்த காலத்திலேயே தடா’ போன்ற கொடிய சட்டங்களை எதிர்த்து அனைவருக்காகவும் எழுத்துப் போர் செய்திருக்கிறோம். மக்களைத் திரட்டி வீதிகளில் போராடி இருக்கிறோம். அவைகளெல்லாம் தவ்ஹீத்வாதிகளுக்காக செய்தது அல்ல. ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காகவும் செய்தது.

அதன் பின்னர் நாம் கட்டிய சமுதாயப் பேரியக்கத்தின் மூலமாக அனைத்துப் பிரிவு முஸ்லிம்களுக்காகவும் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். நூற்றுக்கணக்கான கூட்டங்களை நடத்தி அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். அப்பொதெல்லாம் தவ்ஹீத் பிரச்சாரத்தை விட்டு விட்டு இதையெல்லாம் செய்யவில்லை. நம்முடைய முன்னாள் சகாக்களும் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை.

1995ல் இயக்கம் கண்டதிலிருந்து பிரிவினைக்குச் சற்று முன் வரை தவ்ஹீத் பிரச்சாரம் செய்து கொண்டே அனைத்து முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காகவும் போராடலாம் என்பது தான் நம் அனைவரின் நிலையாக இருந்தது. அந்த நிலையில் தான் இப்போதும் நாம் நீடிக்கிறோம்.

நம்மைப் பொறுத்தவரை அழைப்பு விடுக்கும் அமைப்பின் பெயர் தான் மாறியுள்ளதே தவிர, தவ்ஹீதை சொல்லிக் கொண்டே அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடலாம் என்ற நிலைபாட்டில் நம்மிடம் எந்த மாற்றமும் இல்லை.

அதனடிப்படையில் தான் தவ்ஹீதை சொல்லிக் கொண்டே அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறோம்.

தவ்ஹீதையும் நாம் சொல்லிக் கொண்டு சமுதாயப் பணியிலும் அக்கறை செலுத்திய போது தான் நாம் ஒன்றிணைந்து செயல்பட்ட இயக்கம் மிகப்பெரும் வளர்ச்சியடைந்தது. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரத்தை விட்டால் தான் அனைத்து முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்க முடியும் என்று அவர்கள் தான் நிலைமாறினார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை அமைப்பின் பெயர்தான் மிஞ்சி இருக்கிறதே தவிர, நிலைபாடு மாறிவிட்டது.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது தவ்ஹீத்வாதிகளுக்கு மட்டும் சொந்தமான பிரச்சனை அல்ல. அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமான பிரச்சனை. எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்சனைக்காக போராடும் போது எல்லோரையும் தான் அழைக்க வேண்டும்.

சிலரின் விதண்டாவாதத்திற்காக இதையும் சொல்லிக் கொள்கிறோம். தவ்ஹீத்வாதிகளுக்கு மட்டும் சொந்தமான பிரச்சனைக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது தவ்ஹீத்வாதிகளை மட்டும் தான் நாம் அழைப்போம்.

28.02.2012. 12:26 PM

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...