கோவிலைவிட கழிவறை முக்கியம் என்று மோடி சொன்னது சரியா

கேள்வி கோவில் கட்டுவதைவிட கழிப்பறைகள் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று மோடி பேசியுள்ளாரே?

மசூது, கடையநல்லூர்

பதில்  இதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

இதே கருத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் என்பவர் கூறினார். இதைக் கூறியவுடன் சங்பரிவாரத்தின் அனைத்து இயக்கங்களும் அவருக்கு எதிராக வரிந்துகட்டி எதிர்ப்புத் தெரிவித்தன. ஜெயராம் ரமேஷ் இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டார் என்று கூறாத ஒரு இந்துத்துவா கட்சியும் இருக்கவில்லை.

மோடி இப்போது கூறுவது தான் அவரது உண்மையான கருத்து என்றால் ஜெய்ராம் ரமேஷ் கூறியதை நான் ஆதரிக்கிறேன் என்று அப்போது மோடி கூறியிருக்க வேண்டும். அவருக்குத் தார்மீக ஆதரவு அளித்து இருக்க வேண்டும்.

அப்போது வாய் திறக்காமல் மௌனமாக இருந்துவிட்டு இப்போது இந்தக் கருத்தைக் கூறுகிறார்.

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? மோடி ஒரு சந்தர்ப்பவாதி என்பதும் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் வேஷதாரி என்பதும் தான்.

இது புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயமாகும்.

இந்துத்துவா இயக்கங்கள் ஜெய்ராம் ரமேஷை எதிர்த்தது இந்து மதத்தின் மீது உள்ள பக்திக்காக என்றால் அதே கொந்தளிப்பை இப்போதும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மோடியின் வீட்டுமுன் விளக்குமாறுகளுடன் கூடியிருக்க வேண்டும். ஆனால் ஜெய்ராம் ரமேஷுக்குக் கொடுத்த எதிர்ப்பில் ஐந்து சதவிகிதம் கூட இவர்கள் மோடிக்கு எதிராக கருத்துக் கூறவில்லை. கண்டிக்கவில்லை.

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன?

இந்து மதத்தின் பெயரால் இயக்கம் நடத்தும் இவர்களுக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லை. பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக உள்ளதால் இந்து உணர்வைக் கிளறி தம்மை வளர்த்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம் என்பது இதில் இருந்து தெரியும் இரண்டாவது உண்மையாகும்.

இது பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தங்கள் கடவுள் சிலையைத் தாங்களே உடைத்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழி போடுவதில் இருந்து இவர்களுக்கு இந்து கடவுள் மீது பக்தி இல்லை என்பதை முன்னரே நாம் பார்த்திருக்கிறோம்.

கற்பு, ஒழுக்கத்தை இந்து மதமும் அதில் நம்பிக்கை உள்ளவர்களும் பேணக் கூடியவர்களாக உள்ளனர். இந்து மதத்தின் பெயரால் இயக்கம் நடத்துவோர் பொது மக்களை விட அதிக பக்திமான்களாகவும் ஒழுக்கமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவினர் என்ன செய்தனர்?

சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்தனர்.

நிர்வாண நடனத்தை ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து ரசித்தனர்.

நித்தியானந்தாவை தங்களின் லோட்டஸ் டிவியில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

அழகியோடு பாஜக தலைவர் உல்லாசம் அனுபவித்த காட்சியை உலகமே பார்த்து காரித்துப்பியது.

மயக்க மருந்து கொடுத்து சிறுமியைச் சூறையாடிய பாஜக தலவர்களும் உள்ளனர்.

குசும்ராயுடன் ஆட்டம் போட்ட கல்யாண்சிங்,

வேலைக்காரனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட அமைச்சர்

என நீளும் பட்டியலில் இருந்து இவர்களுக்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தமில்லை என்பதை இந்துக்கள் புரிந்து கொண்டனர். (இது குறித்து ஆதாரங்களுடன் தனிக்கட்டுரை காண்க)

மோடியின் இந்தத் தத்துவத்துக்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பதும் அந்தப் பட்டியலில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்து மதம் என்பது இவர்கள் கடைப்பிடிக்கும் தத்துவம் அல்ல. இந்துக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க உதவும் பிழைப்புக்கான ஒரு வழியாகும் என்பதை எஞ்சிய இந்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியோ, ஜெயராம் ரமேஷோ இவர்கள் இவ்வாறு கூறியது சரியா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

இது போன்ற கருத்துக்கள் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடு என்று ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன.

உண்மையில் சிந்தனைக் குறைவின் காரணமாகவே இது போன்று உளறுகின்றனர் என்பது தான் நமது நிலைபாடு.

கோவில்கள் மீது முஸ்லிம்களாகிய நமக்கு நம்பிக்கை இல்லாததால் இது போன்ற பேச்சுக்களைக் கேட்கும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படக் கூடாது. இதை ஆதரித்தால் பள்ளிவாசல் கட்டுவதை விட கழிவறை தான் முக்கியம் என்று ஒரு அரைவேக்காடு நாளைக்குக் கூறுவான்.

இந்த இரண்டையும் கேட்டு நாத்திகர்களும் மகிழ்ச்சியடையக் கூடாது.

பெரியார் சிலை வைப்பதைவிட, இயக்க அலுவலகம் கட்டுவதை விட, கிளைகள் அமைப்பதை விட ,கொடிகள் கட்டுவதை விட கக்கூஸ் கட்டுவது நல்லது என்று கூறும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

இவை எல்லாம் மடத்தனமான வார்த்தைகள்.

ஒரு மனிதனுக்கு ஏராளமான தேவைகள் உள்ளன. அவை அனைத்தும் சமமான முக்கியத்துவம் உடையவை அல்ல என்ற போதும் மனிதன் அனைத்துக்கும் செலவிடுகிறான்.

ஆடை அணிவதை விட சோறுதான் முக்கியம் என்று கூறி நிர்வாணமாக யாரும் திரிவதில்லை. இரண்டையும் சேர்த்துச் செய்வது முரண்பாடானது அல்ல. சோற்றுக்கும் செலவிட்டு ஆடைக்கும் செலவிட முடியும்.

குழம்பைவிட சோறு முக்கியம் என்பது உண்மை என்றாலும் இதன் படி வெறும் சோற்றை யாரும் சாப்பிடுவதில்லை.

கோவில் மீது நம்பிக்கை உடையவர்கள் கோவிலைக் கட்டுவதுடன் கழிவறையையும் கட்டுவதில் என்ன பிரச்சனை உள்ளது?

பள்ளிவாசலையும் கட்டிக் கொண்டு கழிவறைக்குச் செலவிடாமல் யாரும் இருப்பதில்லை. அரை வேக்காட்டுத்தனமாக சிந்திப்பவர்கள் அடிக்கடி இது போல உளறி அறிவாளிகளாகக் காட்டப்பட்டு வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் பக்தியுடன் மதிப்பதையும், அவர்கள் இழிவாக நினைப்பதையும் சமமாக வைத்து யாரும் பேசுவது நல்லதல்ல.

மோடியாக இருக்கப் போய் இவ்வாறு கூறிவிட்டு தப்பித்து விட்டார். இதை குலாம் நபி ஆசாத், அல்லது சல்மான் குர்ஷித் சொன்னால் என்னவாகி இருக்கும்? ஆபாச ஓவியன் ஹுசைனுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இது போன்ற வாசல்களைத் திறந்து விடக்கூடாது என்பது தான் நமது நிலை.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

கோவில்களையும், பள்ளிவாசல்களையும் அதில் நம்பிக்கை உள்ள மக்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு கட்டுகிறார்கள். இதில் அரசுக்கு எந்த வேலையுமில்லை.

ஆனால் கழிவறை கட்டுவது அரசின் கடமையாகும்.

அது மக்கள் செய்யவேண்டியது.

இது அரசு செய்ய வேண்டியது.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையும் ஒப்பிட்டு மோடி பேசியதிலும் அவரது மடமை வெளிப்படுகிறது.

திருச்சியில் பிசுபிசுத்த மாநாட்டுக்குச் செலவு செய்த கோடிக்கணக்கான ரூபாயில் திருச்சி முழுவதும் கழிவறை கட்டலாமே என்று நாம் கேட்டால் மோடி இதற்கு கைதட்டுவாரா?

07.10.2013. 3:12 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...