மீலாதும் மவ்லூதும் கூடாது – தேவ்பந்த் மதரஸா ஃபத்வாவின் தமிழாக்கம்:

உலக அளவில் ஹனபி மத்ஹபைப் பின்பற்றும் மக்களின் தலைமைக் கல்விக்கூடமாக தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா அமைந்துள்ளது. பல்லாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் படித்து வரும் இம்மாபெரும் ஹனபி மத்ஹபின் பல்கலைக் கழகமான இம்மதரஸா மீலாதும் மவ்லூதும் மார்க்கத்தில் கிடையாது; அவ்லியாக்கள் அதை ஓதச் சொல்லவில்லை என்று தேவ்பந்த் மதரஸா ஃபத்வா கொடுத்துள்ளது. நாங்கள் ஹனபிகள் என்று கூறிக் கொண்டு மேற்கண்ட செயல்களைச் செய்து வருவோர் இனியாவது இதில் இருந்து திருந்திக் கொள்வார்களா?

  உருது ஃபத்வாவின் தமிழாக்கம் இதோ:

கண்ணியத்திற்குரிய தலைமை முஃப்தி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். கீழ்கண்ட இரு விஷயங்களைப் பற்றி தயவு செய்து தெளிவைத் தந்து நன்றி நவில வாய்ப்பைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ரபியுல் அவ்வல் 12 ஆம் தேதி அன்று வழக்கமாக மவ்லூத் ஓதப்படுகிறது. இதைப்போல குறிப்பிட்ட நாளில் மவ்லூத் ஓதுவது மார்க்க அடிப்படையில் கூடுமா அல்லது கூடாதா ?

2) ரமலானுடைய மாதத்தில் தராவீஹ் தொழுகையின் ஒவ்வொரு நான்கு ரக்அத்திற்கு பிறகு கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீத், கலிமா தவ்ஹீதுடன் நான்கு கலீபாக்களின் பெயரில், அதாவது முதல் நான்கு ரக்அத்திற்கு பிறகு முதல் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயராலும், இரண்டாம் நான்கு ரக்அத்திற்கு பிறகு இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் பெயராலும், மூன்றாம் நான்கு ரக்அத்திற்கு பிறகு மூன்றாம் கலீபா உஸ்மான் கனி (ரலி) அவர்களின் பெயராலும், நான்காம் நான்கு ரக்அத்திற்கு பிறகு அலி ஹைதர் (ரலி) அவர்களின் பெயராலும் தஸ்பீஹ் படிக்கப்படுகிறது. மார்க்கத்தில் இதைப்போல தஸ்பீஹ் படிப்பது கூடுமா அல்லது கூடாதா ? தெளிவு படுத்தவும்.

அல்லாஹ் தங்களின் ஆயுளில் பரக்கத்தை கொடுத்து தங்களுடைய பணியை எல்லா இடங்களிலும் பரவச் செய்யட்டும்.

வஸ்ஸலாம்

ஷம்சுத்தீன்

சென்னை

2 முஹர்ரம் 1426

பதில் :

1) இறுதித்தூதர் அஹ்மதே முஜ்தபா முஹம்மதே முஸ்தபா (ஸல்) அவர்களுடைய திருப்பெயர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்புகள் உதாரணத்திற்கு கொடுக்கல் வாங்கல், கடன் மற்றும் அடமானம் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு, உட்காருதல் எழுதல் போன்றவைகளை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆடைகளைப்பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லது கால்நடைகளான ஒட்டகம், ஆடு, குதிரை போன்றவைகளைப்பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும் அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைப் பருவம் மற்றும் பிறப்பை பற்றி குறிப்பிடப்படுவதாக இருந்தாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப்பற்றி எதைக் குறிப்பிடுவதாக இருந்தாலும், அதிலிருந்து பாடம் மற்றும் படிப்பினை பெறுவது, சந்தேகத்திற்கு இடமின்றி பரக்கத்தும் கட்டாயமும் ஆகும். அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தருவதாகும்.

ஆனால் இச்செய்திகள் ஆதாரப்பூர்வமற்ற செய்திகளாகவும், நம்ப முடியாத செய்திகளாகவும், இட்டுகட்டப்பட்ட செய்திகளாவும் இருக்கக் கூடாது. இதைப் போன்ற செய்திகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எனவே, வழக்கத்தில் இருக்கும் மீலாதைக் கொண்டாடுவது தெளிவான தீய நூதனப் பழக்கமாகும் (பித்அத் சய்யிஆ), பழக்கத்தில் இருக்கும் இந்த மீலாதிற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் ஆதாரம் இல்லை, சஹாபாக்கள், தாபியீன்கள், தப்அ தாபியீன்கள் மற்றும் முழுமையான அவ்லியாக்களிடமிருந்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக இந்த உம்மத்தின் 600 ஆண்டு காலங்கள் வழக்கத்தில் இருக்கும் மீலாது இல்லாமல் தான் கடந்தது. மீலாது உருவாக்கப்பட்ட போது அல்லாமா இப்னு அமீர் அல்ஹாஜ் மக்கீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய நூலான அல்மத்கலில் விரிவான ஆதாரங்களை கொண்டு இதை தடுத்துள்ளார்கள். இது வரைக்கும் சத்தியத்தில் இருக்கும் உலமாக்கள் இதை தடுத்து கொண்டு தான் வருகிறார்கள்.

2) தராவீஹ் உடைய ஒவ்வொரு நான்கு ரக்அத்திற்கு பிறகு உட்கார வேண்டும். உட்காரும் எவருக்கும் துஆ செய்வதற்கோ அல்லது தரூத் (ஸலவாத்) ஒதுவதற்கோ, அல்லது மஸ்ஜிதுல் ஹராமாக இருந்தால் தவாஃப் செய்வதற்கோ அதிகாரம் உள்ளது. தங்களுடைய பகுதியில் வழக்கத்தில் இருக்கும் கலீமா ஷஹாதத் போன்றவற்றை ஓதுதல் என்பது பிக்ஹ் நூல்களிலோ, பத்வா நூற்களிலோ அல்லது ஹதீஸ்களிலோ அல்லது ஹதீஸ்களின் விரிவுரைகளிலோ, இந்த திக்ருகள் தராவீஹ்வுடைய சுன்னத்களில் இடம் பெறவில்லை. அதைப் போல இந்த திக்ருகள் ஒழுக்கம் மற்றும் விரும்பத் தக்கவைகளிலும் இடம்பெறவில்லை. ஆக இவை எல்லாம் விடுவதற்கு தகுதியானவைகள். தூர பார்வையுடனும், ஹிக்மத்துடனும் இவைகளை விட்டு மக்களை தூரமாக்க முயற்சி செய்யப்பட வேண்டும்.

28.08.2011. 12:55 PM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...