ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது?

அப்துர் ரஜாக்

பதில் :

பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 9:107

  • இறைவனை மறுத்தல்,
  • பிறருக்குத் தீங்கிழைத்தல்,
  • பிரிவை ஏற்படுத்துதல்,
  • அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்கு புகலிடம் அளித்தல்

ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிவாசலில் தொழக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த நான்கு அம்சங்களில் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் பள்ளிவாசலைப் பராமரிக்க வேண்டும்.

எந்தப் பள்ளிவாசலில் இந்த நான்கு அம்சங்களும் ஒரு சேர அமைந்துள்ளதோ அந்தப் பள்ளிவாசலில் தொழக் கூடாது என்று மேற்கண்ட வசனத்தின் மூலம் சந்தேகமற அறியலாம்.

ஆனால் இந்த நான்கு அம்சங்களில் ஓரிரு அம்சங்கள் இருந்தால் அதில் தொழக் கூடாது என்ற முடிவை எடுக்கக் கூடாது. நான்கும் சேர்ந்து இருந்தால் தான் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் நான்கு அம்சங்களும் சேர்ந்து இருந்தால் தான் அந்தப் பள்ளிகளில் தொழக் கூடாது என்று மேற்க்ண்ட வசனங்கள் கூறுகின்றன.

நான்கு அம்சங்களில் முன்று அம்சங்கள் இல்லாமல் இருந்து அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் மட்டும் நடக்கும் பள்ளிகளிலும் தொழக் கூடாது என்று சிலர் வாதம் செய்து வருகின்றனர்.

இதற்கு பின்வரும் வசனத்தை ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

{وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (18) } [الجن: 18، 19]

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கு உரியன. எனவே அல்லாஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள்

திருக்குர்ஆன் 72:18

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பதால் பள்ளிவாசலில் அல்லஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மவ்லிது போன்ற இணை கற்பிக்கும் பாடல்களைப் பள்ளிவாசலில் பாடுகின்றனர். இதன் மூலம் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கின்றனர். எனவே அது பள்ளிவாசலாக ஆகாது என்று காரணம் கூறி ஷிர்க் வைக்கும் காரியங்கள் நடக்கும் பள்ளிவாசல்களில் தொழக்கூடாது என்பது அவர்களின் வாதம்.

ஆதாரம் என்று ஒரு குர்ஆன் வசனத்தை யாராவது சொன்னால் அந்த வசனத்தில் அந்தக் கருத்து இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். குருட்டுத்தனமாக ஏற்கக் கூடாது. இது பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்

தமது இறைவனின் வசனங்கள் மூலம் அவர்களுக்கு அறிவுறை கூறப்பட்டால் அதன் மீது குருடர்களாகவும், செவிடர்களாகவும் விழ மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 25:73

அல்லாஹ் சொல்கிறான் என்று ஒரு வசனத்தைக் காட்டி அவ்வசனத்தில் இல்லாத கருத்தைத் தினித்தால் குருட்டுத் தனமாக விழக் கூடாது என்று இவ்வசனம் மூலம் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

இவர்கள் ஆதாரமாகக் காட்டும் வசனம் சொல்வது என்ன? அல்லாஹ்வுடன் வேறு யாரையும் நீங்கள் அழைக்கக் கூடாது என்பது தான் இவ்வசனம் சொல்லும் கருத்தாகும். பள்ளிவாசலில் மற்றவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்தால் அந்த இடத்தில் தொழாதீர்கள் என்ற கருத்துக்கு இதில் கடுகளவும் இடமில்லை.

நாம் ஒரு பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். அங்கே சென்று அல்லாஹ்வை மட்டும் நாம் அழைக்கிறோம்.

சிலர் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கிறார்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களை ஏன் அழைத்தீர்கள் என்று அவ்வாறு அழைத்தவர்களை நோக்கி கேள்வி கேட்கலாம்.

அல்லாஹ்வை மட்டும் அழைத்த நம்மை நோக்கி இக்கேள்வியை நம்மை நோக்கி எழுப்ப முடியுமா?

அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கும் இடத்தில் நீங்கள் தொழாதீர்கள் என்று இவ்வசனத்தில் இருந்து எவ்வாறு கருத்து எடுக்க முடியும்?

அல்லாஹ் அல்லாதவர்களை மற்றவர்கள அழைத்தாலும் நாம் அல்லாஹ்வைத் தான் அழைக்க வேண்டும். மற்றவர்களும் அல்லாஹ்வைத் தான் அழைக்க வேண்டும். இந்தக் கருத்து மட்டுமே இதில் அடங்கியுள்ளது.

ஆனால் 9:107,108 வசனங்களில் நான்கு அம்சங்கள் இருந்தால் அங்கே தொழாதே என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனங்கள் தெளிவாகச் சொல்லும் கருத்துக்கு மாற்றமாக 72:18 வசனத்துக்கு அதில் இல்லாத கருத்தைக் கொடுப்பது அறிவீனமாகும். குருட்டுத்தனமாகவும் செவிட்டுத்தனமாகவும் வீழ்வதாகும்.

அல்லாஹ்வின் பள்ளிவாசலில் செய்யக் கூடாத பல காரியங்கள் உள்ளன. அந்தக் காரியங்களை யாரேனும் பள்ளிவாசலில் செய்தால் அது பள்ளிவாசல் இல்லை என்ற கருத்து வருமா? பள்ளிவாசலில் அவற்றைச் செய்யாதீர்கள் என்ற கருத்து வருமா?

பள்ளிவாசலில் விற்பனை செய்யக் கூடாது; வாங்கக் கூடாது; காணாமல் போன பொருளைத் தேடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்

ஒரு பள்ளிவாசலில் விற்பதோ வாங்குவதோ செய்யப்பட்டால் பள்ளிவாசலில் செய்யத் தகாத காரியங்களை செய்து விட்டார்கள் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு. அதனால் அப்பள்ளியில் தொழக் கூடாது என்ற அர்த்தம் இதில் உள்ளதா?

ஷிர்க்கும் வியாபாரமும் ஒன்றா என்ற விதண்டாவாதம் செய்யக் கூடாது. ஷிர்க் கொடும் குற்றம் என்பது தனி விஷயம்.

பள்ளிவாசலில் வியாபாரம் செய்யக் கூடாது என்று தடை உள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட காரியங்கள் நிகழ்ந்தால் அது பள்ளிவாசல் இல்லை என்று ஆகுமா என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்

குளிப்பு கடமையானவர் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தடை உள்ளது. குளிப்பு கடமையான சிலர் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் என்று நமக்கு தெரிய வருகிறது. பள்ளிவாசலில் செய்யத் தகாத காரியம் செய்யப்பட்டதால் அது பள்ளிவாசல் இல்லை என்று யாராவது சொல்வார்களா? அல்லது அந்தக் காரியத்தைப் பள்ளிவாசலில் செய்தவர்கள் குற்றம் செய்துள்ளார்கள் என்று கருதுவார்களா?

ஹரம் எல்லையில் வேட்டையாடக் கூடாது; புல் பூண்டுகளைப் பறிக்கக் கூடாது என்று தடை உள்ளது. ஹரமில் மேற்கண்ட காரியங்களைச் சிலர் செய்து விட்டால் அது பள்ளிவாசல் தகுதியை இழந்து விட்டது; எனவே அங்கே தொழக் கூடாது என்று புரிந்து கொள்ள முடியுமா? அந்தக் காரியங்களை அங்கே செய்யக் கூடாது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும்.

பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரக் கூடாது என்று தடை உள்ளது. யாரோ சிலர் பூண்டு சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்கு வந்து விட்டால் பள்ளியில் செய்யக் கூடாத காரியம் செய்து விட்டதால் இது பள்ளி அல்ல என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?

அல்லாஹ்வுடன் யாரையும் அழைக்காதீர்கள் என்றால் அவ்வாறு செய்யக் கூடாது என்ற அர்த்தம் தான் அதற்கு உண்டு. யாரோ அங்கே இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்வதால் அது பள்ளிவாசலே அல்ல என்ற கருத்து அதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய மஸ்ஜிதுன்னபவியில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வாசகங்கள் இன்றும் எழுதப்பட்டுள்ளன. அதை அழித்தால் குழப்பம் ஏற்படும் என்று சவூதி அரசு அதில் கை வைக்காமல் உள்ளது. எனவே அல்லாஹ்வுக்கு இனை கற்பிக்கும் பாடல் எழுதப்பட்டுள்ளதால் மஸ்ஜிதுன்னபவியில் தொழக் கூடாது என்பார்களா?

கப்ருகள் மீது கட்டடம் கட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அவர்கள் தடை செய்த கட்டடம் மஸ்ஜிதுன்னபிக்குள் கட்டப்பட்டுள்ளதால் மதீனா பள்ளியில் தொழக் கூடாது என்று சொல்வார்களா?

எனவே 9:107,109 வசனங்களில் கூறப்பட்டதன் அடிப்படையில் அதில் கூறப்பட்ட நான்கு காரியங்கள் ஒரு சேர இருந்தால் மட்டுமே அந்த பள்ளியில் தொழக் கூடாது. அவற்றில் ஒன்று விடுபட்டால் கூட அதில் தொழலாம் என்பதே சரியான கருத்தாகும்

.இது குறித்து விரிவாக அறிய

தொழக்கூடாத பள்ளிகள் உண்டா என்ற் ஆக்கத்தைப் பார்க்கவும்

https://onlinepj.in/index.php/videos/online-videos/simple-question-and-answers/thozakkoodatha_pallivasal

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...