சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா

  • இறைவனுக்காக உயிர் தியாகம் செய்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் 72 ஹூருல் ஈன்கள் கிடைக்கும் என்ற ஹதீஸை எடுத்துக்காட்டி இஸ்லாமை விமர்சனம் செய்கிறார்கள்.
  • அப்படி ஹதீஸ் உள்ளதா? இருந்தால் இந்த விமர்சனத்துக்கு இஸ்லாத்தின் பதில் என்ன?
  • இந்தச்  செய்தி தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்படாவிட்டாலும் ஆங்கில உலகத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமாக இஸ்லாத்தைக்  அசிங்கமாகக் காண்பிப்பதற்காக இந்த ஹதீஸைப் பரப்புகிறார்கள்.
  • இம்ரான் கோவை

பதில்

இந்தக் கருத்துடைய ஹதீஸ்கள் அஹ்மத், தப்ரானி திர்மிதி உள்ளிட்ட நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

இது ஆதாரப்பூர்வமான செய்தி தான்.

ஆனால் இதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.

இது குறித்து விமர்சிக்கும் கிறித்தவர்கள் பைபிளை சரியாக அறியாமல் விமர்சிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட வசனங்களை மட்டும் பார்த்து விட்டு பரலோக ராஜ்ஜியம் குறித்து முடிவு செய்கிறார்கள்

24. போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்க வேண்டும் என்று மோசே சொன்னாரே.

25. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப் போனான்.

26. அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.

27. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

28. ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள்;

மத்தேயு 22:24-30

பரலோக ராஜ்ஜியத்தில் உண்ணுதல், பருகுதல், உடல் இன்பம் போன்றவை இல்லை. வானவர்களைப் போல் அவர்கள் எந்த இன்பங்களையும் அனுபவிக்காமல் நித்திய ஜீவனை அடைவார்கள் என்று இவ்வசங்களின் அடிப்படையில் நம்புகிறார்கள்.

அதனால் சொர்க்கத்தில் கன்னியர் கிடைப்பார்கள் என்ற செய்தி அவர்களுக்கு வியப்பாகத் தெரிகிறது.

பரலோக ராஜ்ஜியத்தில் இன்பங்கள் உண்டு எனக் கூறும் வசனங்களும் உள்ளன.

29. என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்;

மத்தேயு 19:29

பரலோக ராஜ்ஜியத்தில் தேவ தூதர்களைப் போல் இருக்க மாட்டார்கள். மாறாக இந்த உலகத்தில் தியாகம் செய்தவைகளை பன்மடங்காகப் பெற்று இன்பம் அனுபவிப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தவன் அது போல் நூறு மனைவிகளைப் பெறுவான். நிலங்களை தியாகம் செய்தவன் அது போல் நூறு மடங்கை அடைவான் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

கர்த்தருக்காக மனைவியை தியாகம் செய்தால் நூறு மனைவியைப் பெறுவார்கள் என்று சொல்லும் பைபிளை வேதமாக ஏற்றுள்ளவர்கள் 72 கன்னிகள் பற்றி கேள்வி கேட்பது அறியாமையாகும்.

6. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

7. சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

8. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

ரோமர் 2:6,7,8

அவனவனது கிரியைகளுக்கு தக்க பலனை அனுபவிப்பார்கள் என்ற இந்த வசனம் பரலோக ராஜ்ஜியத்தில் வானவர்கள் போல் இருப்பார்கள் என்ற கிறித்தவர்களின் நம்பிக்கை தவறு என்று நிரூபிக்கிறது.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்திர 5:1

பரலோக ராஜ்ஜியத்தில் தேவனால் உருவாக்கப்பட்ட வீடுகள் மாளிகைகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.

தேவன் கட்டிய வீடுகள் கிடைக்கும் என்றால் என்ன பொருள்? வீடுகளில் இருக்கும் அனைத்து சாதனங்களும் இருக்கும். அதை பரலோக ராஜ்ஜியத்தில் அனுபவிப்பார்கள் என்பது தான் பொருள்.

34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

மத்தேயு 25:34

நன்மக்களுக்காக தேவனால் ஒரு ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உரிமையாக்கிக் கொள்வார்கள் என்றால் அங்கே அனைத்து இன்பங்களும் உண்டு என்பதைத் தான் பைபிள் கூறுகிறது.

21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மார்க் 10:21

தனது செல்வத்தை நல் வழியில் செலவு செய்தவனுக்கு பரலோக ராஜ்ஜியத்தில் பொக்கிசம் உண்டு என்று இயேசு கூறியதாக இவ்வசனம் கூறுகிறது. தேவதூதர்கள் போல் இருப்பவர்களுக்கு பொக்கிஷம் எதற்கு?

அப்படியானால் தேவதூதர்கள் போல் இருப்பீர்கள் என்று இயேசு சொன்னதற்கு என்ன பொருள்?

தேவதூதர்கள் உண்ணாமல் பருகாமல் இருப்பவர்கள் அல்லர்:. மனிதர்களைப் போலவே சாப்பிடுபவர்கள் என்று பைபிள் கூறுகிறது.

ஆப்ரஹாமைச் சந்தித்த மூன்று தேவதூதர்கள் மனிதர்களின் உணவை மனிதர்களைப் போல் சாப்பிட்டுள்ளார்கள் என்று பைபிள் கூறுகிறது.

6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்று படி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

7. ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.

8. ஆபிரகாம் வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 18:6,7,8

அது போல் லோத்துவைச் சந்தித்த தேவ தூதர்கள் உணவு உட்கொண்டதாக பைபிள் சொல்கிறது

1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:

2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

3. அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்து பண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

ஆதியாகமம் 19:1,2,3

பரலோக ராஜ்ஜியத்தில் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்பதை பைபிள் அடிப்படையில் புரிந்து கொண்டால் தேவதூதர்கள் உண்பார்கள்; பருகுவார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

பல கணவன்மார்களை மணந்த பெண் யாருக்கு மனைவியாக இருப்பாள் என்ற கேள்விக்குத் தான் தேவதூதர்கள் போல் இருப்பார்கள் என்று இயேசு பதில் கூறியுள்ளார். அவள் எனக்கு உனக்கு என்று சண்டையிட்டுக் கொள்ள மாட்ட்டார்கள். கடவுள் தீர்ப்பை தேவதூதர்கள் போல் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தில் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் நாம் எடுத்துக்காட்டிய மற்ற வசனங்களுடன் இணக்கமாக அமையும்.

பரலோக ராஜ்ஜியத்தில் ஒன்றுக்கு நூறாக மனைவியர் கிடைப்பார்கள் என்று பைபிள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள் 72 கன்னிகள் குறித்து கேலி செய்து தங்களையே கேலி செய்கிறார்கள்.

அடுத்து மறுமை வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

அங்கே சாப்பிடுவார்கள் ஆனால் மலம் கழிக்க மாட்டார்கள்.

பருகுவார்கள். சிறு நீர் கழிக்க மாட்டார்கள்.

நோய், முதுமை இருக்காது.

அங்கே சோர்வு அசதி இருக்காது. முதுமை இருக்காது. மாறாத இளமையுடன் இருப்பார்கள். அங்கே கள்ளம் கபடம் இருக்காது.

இந்த உலகத்தில் எடுக்கும் முடிவைப் போல் அங்கே முடிவு எடுக்க மாட்டார்கள்.

இவை எல்லாம் சாத்தியமற்றதாக இவ்வுலகப் பார்வையில் தெரியும். ஆனால் இறைவன் தனது பேராற்றலால் மனிதர்களுக்கு இவற்றைச் செய்து கொடுக்கிறான்.

ஒருவனுக்கு கிடைக்கும் சொர்க்கம் பல மாதங்கள் பயணிக்கும் அளவு விசாலமானதாக இருக்கும். எல்லாமே பிரம்மாண்டமாக வழன்கப்படும் சொர்க்கத்தில் எத்தனை கன்னிகள் கொடுக்கப்பட்டாலும் அந்த உலகில் அது பிரச்சனையாக இருக்காது.

இதில் கிறித்தவர்கள் விமர்சிக்க ஒன்றும் இல்லை. அவர்களின் வேதத்திலும் இது போல் சொல்லப்பட்டுள்ளது என்பதே அவர்களுக்கான பதிலாகும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...