ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்

(பத்து ஆண்டுகளுகு முன் 2010ல் எழுதப்பட்ட ஆக்கம்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) முன்னாள் மாநிலத் தலைவருமான மல்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார்.

பொதுவாக அநியாயமாக யார் கைது செய்யப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகவும், களம் இறங்கி போராடுவதற்காகவும் இருந்த ஒரே அமைப்பாக அன்று தமுமுக மட்டுமே இருந்தது. இந்த இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பாதிக்கப்படும் போது கூட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தது.

ஹாமித் பக்ரி இந்த இயக்கத்தின் ஆரம்ப கால தூண்களில் ஒருவராக இருந்தும், தமுமுக இயக்கத்தை நாடு முழுவதும் பிரச்சாரத்தின் மூலம் கொண்டு சென்ற பேச்சாளர்களில் ஒருவராகவும், பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர், ரிபாயி உள்ளிட்ட தமுமுகவில் அன்றைய தலைவர்களின் தனிப்பட்ட நண்பராக இருந்தும் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டதற்காக அன்றைய தமுமுக கண்டன அறிக்கை விடவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட ஹாமித் பக்ரி வழக்குக்காக உதவி கேட்டு தமுமுகவுக்கு கடிதம் எழுதிய போதும் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

இது உண்மையில் அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

யார் யாருக்கோ போராட்டம் நடத்திய தமுமுக இயக்கம் ஹாமித் பக்ரிக்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்ற கேள்வி நியாயமானது என்றாலும் அதற்குப் பகிரங்கமாக தமுமுக எந்தப் பதிலும் சொல்லவில்லை.

செயல் வீரர்கள் கூட்டத்தில் நெருக்கமானவர்கள் மத்தியில் மட்டும் தான் தமுமுக விளக்கம் அளித்ததே தவிர மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எந்த விளக்கத்தையும் தமுமுக அளிக்கவில்லை.

தமுமுக எப்படி ஹாமித் பக்ரியை கைவிட்டதோ அது போல் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பும் ஹாமித் பக்ரியைக் கை விட்டது. அவருக்காக எந்த உதவியும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளிப்படையான எந்த விளக்கத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அளிக்கவில்லை.

தமுமுக அவரைக் கைவிட்டதிலும் தவ்ஹீத் ஜமாஅத் அவரைக் கைவிட்டதிலும் எனக்கும் பங்கு உண்டு. சொல்லப் போனால் அதிகப் பங்கு உண்டு. தமுமுக மீது பழியைப் போட்டு விட்டு நான் ஒதுங்க முடியும் என்றாலும் நானே சம்மந்தப்பட்ட விஷயத்தில் எனக்குப் பொறுப்பு இல்லை என்று மறுக்கும் கயமைத்தனம் பொய்யனுக்குத் தேவையாக இருக்கலாம். எனக்குத் தேவை இல்லை.

இது நம்ப முடியாத ஆச்சரியமாகவே மக்களுக்கு இருந்தது.

அப்போது தமுமுகவோ, தவ்ஹீத் ஜமாஅத்தோ வாய் திறந்திருந்தால் ஹாமித் பக்ரியின் நிலை இன்னும் மோசமாகப் போய் இருக்கும் என்பதால் இரண்டு இயக்கங்களும் அசாத்திய மவுனம் சாதித்தன.

ஆனால் இன்று எல்லாம் பழைய செய்தியாகி விட்டதால் இப்போது இந்த உண்மைகளைக் கூறுவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதால் இந்த உண்மைகளை நாம் சொல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. பொய்யன் கூட்டமும் இந்த உண்மைகள் வெளிவர வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதால் நாம் இந்த விஷயத்திலும் வாய் திறக்கும் அவசியம் திணிக்கப்பட்டு விட்டது.

இது குறித்த உள் விபரங்களுக்குச் செல்வதற்கு முன்னாள் ஹாமித் பக்ரி எதற்காகக் கைது செய்யப்பட்டார்? எப்படி அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டியுள்ளது.

மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி தென்காசியைச் சேர்ந்தவர். தமுமுகவில் நெல்லை மாவட்டத்தில் மாவட்டப் பொறுப்பை வகித்தவர். அவர் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் நம்முடைய தவ்ஹீத் பள்ளியில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஹாமித் பக்ரி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திரப் போலீஸார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவரிடம் அல்லது கொல்லப்பட்டவரிடம் கைப்பற்றப்பட்ட செல் போனில் அப்துர் ரஹ்மான் ஷிப்லியின் போன் நம்பர் பதிவாகி இருந்ததன் அடிப்படையில் அவர் செய்யப்பட்டார்.

அவருக்காக நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று பேர்ணாம்பட் தமுமுக கிளை தெரிவித்த போது தமுமுக தலைவர்கள் இதற்காக போராட்டம் நடத்த வேண்டாம் கூறினார்கள். நானும் அதையே கூறி காரணத்தையும் விளக்கினேன். காரணத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் கூறினேன்.

இதன் பின்னர் அப்துர்ரஹ்மான் ஷிப்லி கொடுத்த தகவலின் படி தான் 2/12/2002 அன்று ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீஸ் படை குவித்து சோதனை செய்யப்பட்டது. அவர் நடத்திய தாவா செண்டரும் சோதனை இடப்பட்டது. அவர் முதல்வராக இருந்த ஆயிஷா சித்தீகா பெண்கள் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு காயல்பட்டணமே அல்லோல கல்லோலப்பட்டது.

இது குறித்து காயல்பட்டணம் தமுமுகவினரும், உள்ளூர் பிரமுகர்களும் தமுமுக தலமையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். ஏதாவது செய்யும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் தமுமுக இதில் இப்போது நாம் தலையிட முடியாது. 8/12/2002 அன்று பீஜே கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் உங்கள் ஊரில் நடக்க உள்ளதால் அபோது பீஜே வரும் போது அதற்கான காரணங்களை தமுமுக சார்பில் தெரிவிப்பார் என்று அனைவருக்கும் ஒரே பதில் சொல்லப்பட்டது.

ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட மறு நாளோ அல்லது அதே நாளிலோ காயல்பட்டிணம் ஜாமியுல் அஸ்ஹர் இமாம் மவலவி அப்துல் மஜீத் மஹ்ளரி கைது செய்யப்பட்டார். இதே காரணத்துக்காக அதிராம்பட்டிணம் தவ்பீக் என்பவரும். சென்னை மணடி ஜக்கரியா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

யாருக்கும் அறிமுகமில்லாத மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த இருவரோ, மூவரோ இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர். பின்னர் பின்னர் இந்த வழக்கு குற்றாலத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய வழக்காக மாற்றப்பட்டது.

மூன்று மவ்லவிகள் உள்பட பத்துக்கும் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும் தமுமுகவும், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தும் மவுனம் சாதித்தது.

அது மட்டுமில்லாமல் உணர்வு இதழில் தமுமுக சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பு இது தான்

இந்த அறிவிப்பு ஹாமித் பகரி கைது விஷயத்தில் தமுமுக தலையிடாது என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியிடப்படும் போது தமுமுக தலைவராக ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ஹைதர் அலியும், பொருளாளராக பாக்கரும் இருந்தனர். நான் அமைப்பாளராக இருந்தேன்.

அனைவரும் சேர்ந்து தான் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். இதில் அனைவரும் சம பங்காளிகள் என்று இருந்தும் பொய்யன் (பாக்கர்) கூட்டம் வழக்கம் போல் ஹாமித் பக்ரிக்கு பீஜே அநீதி இழைத்து விட்டார் எனக் கூறி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. ஹாமித் பக்ரியைக் கைவிட்டதில் பீஜேக்கு உரிய பங்கு போல் பொய்யருக்கும் உண்டு என்பதற்கு இது ஆதாரமாகும்.

அத்துடன் அதே பக்கத்தில் பெண்கள் மதரஸா பற்றிய அறிவிப்பு ஒன்றும் என் பெயரில் வெளியிடப்பட்டது. ஹாமித் பக்ரியின் இரண்டாம் மனைவி மதுரையில் நடத்திய பெண்கள் மதரஸாவுக்கு என் பெயரைப் பயன்படுத்தி வசூல் வேட்டை ந்டத்தியதால் அதற்கும், எனக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுவும் நிர்வாகிகள் அனைவரும் ஆலோசித்தே உணர்வில் வெளியிடப்பட்டது.

இந்த உணர்வு அறிக்கை பைண்டிங் செய்யப்படட் புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்டது. அதானல் ஒரப்பகுதி ஸ்கேனில் வரவில்லை. நாளை பைண்டிங்கை பிரித்து முழுமையாக வாசிக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுகிறேன்.

இப்படி ஹாமித பக்ரியையும் இன்னும் சிலரையும் நாங்கள் அனைவரும் சேர்ந்து கைவிடக் காரணம் என்ன? இன்ஷா அல்லாஹ் நாளை அதை விளக்குகிறேன்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...