இலங்கை முஸ்லிம்களின் துரோகம் காரணமாகத் தான் புலிகள் கொன்றார்களா?

கேள்வி :

இலங்கை முஸ்லிம்கள், கூடவே இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்ததினால் தான் பிரபாகரன் அவர்களைக் கொன்றான். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் ஈழம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்கள்.

ஸ்ரீலங்கன் ஹோம் கார்ட் (srilankan home guard) என்ற ஒன்றில் சேர்ந்தார்கள் (தமிழர்களுக்கு எதிராக…)

அதனால் தான் பிராபகரன் அவர்களைக் கொன்றான்; முஸ்லிம் விரோதப் போக்கு என்பதற்காக அல்ல என்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். விளக்கம் தேவை.

பி.ஏ.ஜாஹிர் அஹமது

பதில்

முஸ்லிம்களையும், நடுநிலையாளர்களையும் ஏமாற்றுவதற்காக புலி பயங்ரவாத அமைப்பினர் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளில் ஒன்றாகும் இது.

இவர்கள் கூறுவது போல் தனி ஈழம் தேவை இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னதால் ஒரு சமுதாயத்தைக் கொன்று குவிக்கலாம் என்றால் அதே நியாயம் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா?

தனி ஈழம் வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவிக்க இவர்களுக்கு உரிமை உள்ளது என்றால் தனி ஈழம் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் அதை எதிர்க்கும் இவர்களைக் கூண்டோடு ஒழித்ததும் நியாயம் என்று இவர்கள் ஒப்புக் கொண்டு இந்த வாதத்தை முன்வைக்கட்டும்.

இலங்கையில் வட மாகாணத்தில் முஸ்லிமல்லாத தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இருக்கின்றனர். அது போல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இருக்கின்றனர். மற்ற பகுதிகளில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இருக்கின்றனர்.

பிரபாகரன் தனி ஈழம் கேட்பதாக இருந்தால் தனது மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதியைத் தனி ஈழமாகக் கோருவது போல், கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் ஈழம் என்று ஆக்குவதை ஒப்புக் கொள்வது தான் பொருத்தமானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியையும், தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு ஆள நினைப்பது சிங்களப் பேரின வாதத்தை விட கொடுமையானது.

இந்தப் பயங்கரவாதிகளின் கீழ் இருப்பதை விட, சிங்கள நாட்டில் இருப்பது மேல் என்று முஸ்லிம்கள் எடுத்த நிலைபாடு குறை சொல்லத்தக்கதோ துரோகமோ அல்ல. மாறாக முஸ்லிம்களையும், இந்துத் தமிழர்கள் பட்டியலில் சேர்த்து அவர்களையும் ஆள நினைத்த புலிகள் தான் துரோகம் செய்தவர்கள்.

ஐ.நா.வின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத தமிழர்களும், சிங்களர்களும் அதாவது இலங்கை அரசும் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையை முஸ்லிம்கள் வற்புறுத்திய போது முஸ்லிம் விரோதியான பிரபாகரன் இரு தரப்பு பேச்சுவார்த்தை தான் நடத்த வேண்டும். முஸ்லிகளை ஒரு தரப்பாக சேர்க்கக் கூடாது என்று சொன்னார்.

நாட்டில் சிங்களர், தமிழர், முஸ்லிம் ஆகிய மூன்று இனங்கள் உள்ளதாகச் சிங்கள அரசாங்கம் சொன்னது. ஆனால் புலி பயங்கரவாதிகளோ தமிழர், சிங்களர் என்ற இரு இனங்கள் தான் உள்ளன என்றனர். அதாவது முஸ்லிம்களை ஒழித்துக் கட்டுவது தான் இவர்களின் நோக்கம்.

மேலும், இவர்களுக்கு ஒரு கொள்கை உள்ளது என்றால் இன்னொரு இனத்துக்கு வேறு கொள்கை இருக்கும். அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக முஸ்லிம்களை இவர்கள் கொல்வார்கள் என்றால் இவர்களைப் பாரபட்சமில்லாமல் பூண்டோடு கருவருத்த சிங்கள அரசின் செயலில் ஒரு குற்றமும் இவர்கள் சொல்லக் கூடாது. தன் கொள்கையை ஏற்காதவர்களைக் கொலை செய்த இவர்களைப் பின்பற்றித்தான் சிங்கள அரசும் நடந்துள்ளது.

இதனால் தான் எப்போதும் அமெரிக்காவுக்குப் பயந்து அமெரிக்காவைச் சார்ந்தே முடிவு எடுக்கும் அரபு நாடுகள் புலிகள் முஸ்லிம் சமுதாய எதிரிகள் என்பதால் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. புலிகளின் முஸ்லிம் இனத்துவேஷம் உலக முஸ்லிமகள் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...