நாகரீக உடை அணியுங்கள் !தமிழக அரசு

ஆசிரியைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நமது கலாச்சாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குனரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகள் எல்லாம் திறந்து ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்திருப்பது ஆசிரியைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், வகுப்பறையில் நாகரீகமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகரீகமற்ற, நமது கலாச்சார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியைகள் மாணவியருக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அப்போதுதான் மாணவியர்களும் ஆசிரியைகளைப் பின்பற்றி நடக்க முயற்சிப்பார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆசிரியைகள் சரியில்லாத உடைகளுடன் வகுப்பறைகளுக்கு வருவதாகப் புகார்கள் வருவது வருத்தம் தருகிறது என்று அந்த சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.

மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும் இந்த சுற்றறிக்கையில் என்ன மாதிரியான உடைகளை ஆசிரியைகள் அணிய வேண்டும் என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்படவில்லை என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

பெண்கள் அணியும் ஆடைகள் குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருவதை நாம் காண முடிகின்றது. அந்த அடிப்படையில் தான் ஆசிரியைகளுக்கு போடப்பட்ட இந்த உத்தரவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

நாட்டில் ஒழுக்க ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் நடைபெறும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பெண்கள் அணியக்கூடிய ஆடைகள் தான் காரணம் என்பதை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாக பெண்கள் அணியும் ஆடைகள் சம்பந்தமாக பல்வேறு வாதப் பிரதிவாதங்களும், பல்வேறு புதிய உத்தரவுகளும் போடப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் தங்களது உடல் அழகை மறைக்கக் கூடிய வகையில் பெண்கள் ஆடையணிவது தான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என்ற இஸ்லாத்தின் கருத்தை உண்மைப்படுத்தும் முகமாக தமிழக அரசின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

அதே நேரத்தில் மாணவ அமைப்புகள்தான் பெண்கள் தங்களது விருப்பப்படி ஆடையணிவது தான் பெண்களுக்குரிய சுதந்திரம் என்றெல்லாம் சொல்லி கூப்பாடு போட்டு வந்தார்கள். ஆனால், அந்த மாணவர் அமைப்புகளே தற்போது இந்த விஷயத்தில் தெளிவடைந்துள்ளனர் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆம்! சென்ற வாரம் மணிப்பூரில் உள்ள மாணவர் அமைப்புகள் மாணவிகளுக்கு போட்ட தடையுத்தரவு அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் முழங்கால் தெரியும் அளவுக்கு ஆபாசமாக யூனிஃபார்ம் (சீருடை) அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் அமைப்புகள் இது தொடர்பாக மாணவிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. ஆபாச சீருடையை தவிர மொபைல் ஃபோனை கல்வி நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை ஏற்படுத்தப்படும் என்ற செய்திகள் கடந்த வாரம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் ஆபாசமான உடைகளை அணிவதற்கு தடை விதிக்க ஆறு மாணவர் அமைப்புகள் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

பாதம் வரை அணியப்படும் பானெக் என்கிற பாரம்பரிய உடையைத்தான் மாணவிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு அணிந்து வர வேண்டும். முழங்கால் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட எந்தப் பள்ளி, கல்லூரி சீருடையையும் ஏற்க இயலாது என்று மாணவர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்திருக்கிறது.

ஆல் மணிப்பூர் ஸ்டுடன்ஸ் யூனியன், டெமோக்ரெடிக் ஸ்டுடன்ஸ் அலயன்ஸ் ஆஃப் மணிப்பூர், மணிப்பூர் ஸ்டுடன்ஸ் ஃபெடரேசன் உள்ளிட்ட மாணவர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ஆபாச உடையை மாணவிகள் அணிவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருட்களை விற்பதற்கும் தடை விதித்துள்ளது என்ற செய்தியும் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை உண்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

இப்படி மாணவிகளும், ஆசிரியைகளும் ஆடை விஷயத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தங்களது உடலழகை மறைத்தாலே பற்பல விபரீதங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்பதுதான் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பு.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...