கேள்வி

இரண்டாம் அத்தியாயத்தில் பகரத் என்ற சொல்லுக்கு மற்ற தமிழாக்கங்களில் பசு மாடு என்று மொழி பெயர்த்திருக்க நீங்கள் மட்டும் காளை மாடு என்று பொருள் செய்துள்ளீர்கள். இது அகராதி அர்த்தத்துக்கு முரணாக உள்ளது என்று சிலர் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன?

கா.அ.ஃபழ்லுல் இலாஹி

பதில்:

بقرة என்ற சொல்லில் ة தா உள்ளதால் அதைப் பெண்பால் என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது பெண்பாலைக் குறிக்கும் ة தா அல்ல.

பகரத் என்ற சொல்லின் இறுதியில் உள்ள தா என்ற எழுத்து எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை முக்தாருஸ் ஸிஹாஹ் பின்வருமாறு சொல்கிறது.

مختار الصحاح

و للفرق بين الواحد و الجمع نحو بقرة و تمرة و بقر و تمر

பகர் என்றால் பன்மை. அதை ஒருமையாக்குவதற்கு தா சேர்க்கப்படும். அதாவது பகர் என்றால் மாடுகள், பகரத் என்றால் ஒரு மாடு என்று பொருள். தம்ரத் என்றால் ஒரு பேரீச்சம்பழம். தம்ரு என்றால் பேரீச்சம் பழங்கள்

ஆதாரம் : முக்தாருஸ்ஸிஹாஹ்

அதாவது பகரத் என்பதில் உள்ள தா என்பது ஒருமையின் அடையாளமாகும். பெண்பாலின் அடையாளம் அல்ல.

பகர் என்பதும் பகரத் என்பதும் பசு மாடு, காளை மாடு இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்.

இதற்கு குர்ஆனில் நேரடியான ஆதாரமும் உள்ளது.

وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنْثَيَيْنِ أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللَّهُ بِهَذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (144)6

144. “ஒட்டகத்தில் இரண்டு, (பகரில்) மாட்டில் இரண்டு உள்ளனஇவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?” என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:144

இவ்வசனத்தில் பகர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. பகரில் ஆண் பிராணியை அல்லாஹ் ஹராமாக்கினானா? பகரில் பெண் பிராணியை அல்லாஹ் ஹராமாக்கினானா என்று அல்லாஹ் கூறுகிறான்.

அதாவது பகர் என்பது காளை மாடு, பசு மாடு ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும் என்பதால் பகரில் ஆண்பிராணியா பகரில் பெண் பிராணியா என்று அல்லாஹ் கேட்கிறான். பகர் என்பதன் ஒருமைச் சொல்லான பகரத் என்பதும் இரண்டையும் குறிக்கும்.

எனவே அகராதி அடிப்படையில் பகரத் என்ற சொல்லுக்கு மாடு என்று பொதுவாக மொழி பெயர்க்க வேண்டும்.

பகரத் என்பது பசுமாட்டைத் தான் குறிக்கும் என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் 6:144 வசனத்துடன் மோதுகிறார்கள்.

பசுமாடு என்றோ காளைமாடு என்றோ மொழிபெயர்ப்பதாக இருந்தால் தக்க சான்று இருக்க வேண்டும்.

அப்படியானால் இரண்டுக்கும் பொதுவான சொல்லுக்கு காளை மாடு என்று நாம் ஏன் பொருள் செய்தோம்? என்ற கேள்விக்கு வருவோம்.

காளை மாடு, பசுமாடு ஆகிய இரண்டையும் பொதுவாக இச்சொல் குறிக்கும் என்றாலும் பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருத்தமான பொருளையே கொள்ள வேண்டும்.

பால் வியாபாரம் செய்ய மாடு வாங்கினேன் என்று சொல்லும் போது காளை மாட்டை வாங்கினேன் என்று பொருள் கொள்ள முடியாது.

உழுவதற்காக மாடு வாங்கினேன் என்று சொன்னால் பசு மாடு வாங்கினேன் என்று பொருள் கொள்ள முடியாது.

அது போல் இங்கே அந்த மாட்டைப் பற்றி மூஸா நபியின் சமுதாயம் கூடுதல் விபரம் கேட்ட போது

“அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது” என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 2:71

என்று அல்லாஹ் கூறுகிறான்.

உழவு வேலைக்கும், நீரிறைக்கவும் காளை மாடுகள் தான் பயன்படுத்தப்படும்.

மேற்கண்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையிலான மாடாக இருந்தும் அந்த வேலைகளுக்குப் பழக்கப்படுத்தப்படாத மாடு என்பது தான் இதன் கருத்து.

பசுமாடாக அந்த மாடு இருந்தால் பசுமாடு என்று அல்லாஹ் சொன்னாலே இக்கருத்து வந்து விடும். ஆனால் அப்படிச் சொல்லவில்லை

அறுக்கச் சொன்னது பசுமாடு அல்ல என்பதால் தான் மேற்கண்ட வேலைகளுக்குப் பழக்கப்படுத்தப்படாமல் செல்லமாக வளர்க்கப்படும் மாடு என்று அல்லாஹ் கூறுகிறான்,

எனவே இந்த இடத்தில் காளை மாடு என்பது தான் பொருத்தமானது என்பதால் நாம் அவ்வாறு பொருள் செய்துள்ளோம்.

பொதுவான சொல்லுக்கு பசுமாடு என்று யார் பொருள் செய்தார்களோ அவர்கள் அதற்கான பொருத்தமான காரணம் கூற வேண்டும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...