ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.

– எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம்.

பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

எந்த ஒரு காரியமும் குற்றமாக எப்போது ஆகும்? இறைவன் தடுத்தால் அது குற்றமாகும். தடுக்காவிட்டால் அது குற்றமாக ஆகாது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதுபானமும், வட்டியும் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மதுபானம் அருந்தியவர்களாகவும், வட்டி வாங்கியவர் களாகவும் யாரேனும் மரணித்திருந்தால் அவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஏனெனில், தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மனித குலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்!

இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு கேள்வி கடவுள் மறுப்பாளர்களால் எழுப்பப்பட்டு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.

அதாவது ஆதம் என்ற ஆண், ஹவ்வா என்ற பெண் ஆகிய இருவர் மூலம் தான் மனித குலம் பெருகியதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள். கிறித்தவர்களும் அவ்வாறே கூறுகிறார்கள்.

அப்படியானால் உடன் பிறந்த அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் உடலுறவு கொண்டு இருப்பார்கள். இவ்வளவு கேவலமாக மனிதப் பிறப்பு பற்றி பேசும் உங்கள் கடவுள் யோக்கியனா?

இது தான் அந்த வாதத்தின் சாரம், அவர்கள் பக்கம் பக்கமாக எழுதியுள்ள அனைத்து வாதங்களும் இந்த ஒரு பாராவுக்குள் அடக்கமாகி விடும்.

இதில் முஸ்லிம் பெயர்களிலும் சிலர் பதிவிட்டு கிண்டல் அடிக்கும் கமாண்டுகளும் அடக்கம். ஆனால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் நாம் கருதுகிறோம்.

அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படையும், அறிவியல் ஞானமும் இல்லாமல் வளர்க்கப்பட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் இக்கேள்விக்கு விடையளிக்கும் கடமை நமக்கு உள்ளது.

மனித குலத்தின் தோற்றம் பற்றி உலகில் நிலவும் கருத்துக்கள் என்ன?

1 – பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் உருவானான் என்ற டார்வினின் கொள்கை கூறுகிறது.

(இதற்கு நிகரான மடமை வேறு இல்லை என்பதை கீழ்க்காணும் லிங்கில் விளக்கியுள்ளோம்.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை

(கடவுள் மறுப்பாளர் யாரும் இது குறித்து நம்மிடம் விவாதிக்க விரும்பினால் நாம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பின் துணை கொண்டு டார்வின் கொள்கை தவறு என்று நிரூபித்துக் காட்டுவோம்.)

டார்வின் கொள்கையை இவர்கள் ஏற்றாலும் இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் அதே கேள்விக்கும், கேலிக்கும் இவர்கள் உரியவர்களாகி விடுகின்றனர்.

பரிணாமக் கொள்கைப்படி மனிதனுக்கு முந்திய நிலை குரங்கு ஆகும். குரங்குகள் அம்மாவுடனும் புணரும். சகோதரியுடனும் புணரும். இந்தக் கேடுகெட்ட இனத்தின் வழித்தோன்றல் தான் மனிதன் என்று ஆகுமே? அது பரவாயில்லையா?

குரங்குக்கு முந்திய மற்ற உயிரினங்களின் நிலையும் இது தான். இஸ்லாத்தை எந்தக் காரணத்துக்காக இவர்கள் குறை கூறினார்களோ அதே காரணம் டார்வின் கொள்கையில் இன்னும் கேவலமாக உள்ளதே?

தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் பார்க்காத மிருகத்தில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது மட்டும் இவர்களுக்கு இனிக்கிறது.

2- இந்து மதக் கொள்கை

அடுத்து மனிதன் படைக்கப்பட்டது குறித்து இந்துக்களின் நம்பிக்கை.

கடவுளின் தலையில் இருந்து படைக்கப்பட்டவன்,

தோளில் இருந்து படைக்கப்பட்டவன்,

தொடையில் இருந்து படைக்கப்பட்டவன்,

பாதத்தில் இருந்து படைக்கப்பட்டவன்

என்று நான்கு வகையாக மனிதனைப் பிரிக்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை கடவுள் மறுப்பாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் ஏற்றாலும் இதே கேள்வி இருக்கவே செய்யும்.

மேற்கண்ட நான்கு நிலைகளில் படைக்கப்பட்டவர்களும் ஒரு ஜோடி தான். அனைவரும் கடவுளிடமிருந்து நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். இந்த நம்பிக்கைப்படியும் உடன் பிறப்புக்கள் மத்தியில் தான் துவக்கத்தில் இணைதல் ஏற்பட்டு இருக்கும்.

எனவே இந்த நம்பிக்கை உள்ளவர்களும் இக்கேள்வியைக் கேட்க முடியாது.

3 – ஜீனோம் மரபணு ஆய்வு

அடுத்ததாக இன்றைய ஜீனோம் என்ற மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தத்துவம். ஜீனோம் எனும் மரபணு ஆய்வு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட நவீன ஆய்வு குறித்து இந்தியா டுடேயில் ஜீனோம் ரகசியம் என்று சிறப்பிதழ் போடப்பட்டது

அந்த ஆய்வு கூறுவது தான் மனித குல உற்பத்தி குறித்து செய்யப்பட்ட இறுதியான ஆய்வு.

இந்த ஆய்வு என்ன கூறுகிறது?

உலக மக்கள் அனைவரும் ஒரு ஆப்ரிக்கத் தாய்க்கும், ஒரு ஆப்ரிக்கத் தந்தைக்கும் பிறந்தவர்கள் தான். அந்த ஒரு ஜோடியில் இருந்து தான் மனித குலம் பல்கிப் பெருகியது என்பது தான் அந்த ஆய்வு.

இப்போது முகனூல் போராளிகள் பகுத்தறிவாளர்கள் என்றால் நவீன மரபணு ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க வேண்டும்.

இஸ்லாத்தை மறுப்பது போல் இதை அவர்கள் மறுக்க முடியாது.

இன்று மரபணு ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆய்வின் முடிவு சொல்வது என்ன? இஸ்லாம் சொன்னதைத் தான் மரபணு ஆய்வும் அப்படியே சொல்கிறது.

அதாவது அண்ணன், தங்கைகள் வழியாகத் தான் மனித குலம் முதலில் பல்கிப் பெருகியது என்பது தான் அந்த உண்மை.

இக்கேள்வி கேட்போர் பகுத்தறிவாளர்கள் என்றால்

மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து பரவி உலகெங்கும் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை.

தகவல்: 28.7.2007 விடுதலை நாளிதழ்.

என்ற கட்டுரையைப் பார்க்கட்டும்

மனித இனத்தின் மூல இடமே ஆப்ரிக்கா தான்; மண்டை ஓடுகளை ஆய்வு செய்து பெற்ற உண்மை. _ தலைப்பு, மற்றும், உலக மனிதரின் தாய் ஓர் ஆப்ரிக்கப் பெண்

_தினமணி -_ அக்டோபர் 22, 1988.

இந்தக் கட்டுரையையும் வாசிக்கட்டும்.

பகுத்தறிவாளர்கள் ஏற்கும் உண்மை இணைய தளத்திலும் இந்தக் கண்டுபிடிப்பைக் காணலாம்.

https://www.unmaionline.com/…/1420-where-has-developed-the-w…

ஆக இஸ்லாம்

கிறித்தவம்

டார்வினிசம்

இந்துமதம்

நவீன கண்டுபிடிப்பான ஜீனோம் மரபணு

ஆகிய எந்தக் கோட்பாட்டை ஏற்றாலும் அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் துவக்கத்தில் உடலுறவு நிகழ்ந்துள்ளது என்பது உறுதியாகிறது.

இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டார்களோ அந்தக் கேள்வி எழ முடியாத வேறு கோட்பாட்டை ஆதாரத்துடன் நிறுவிக் காட்டட்டும்

அல்லது வாய் மூடி மவுனம் காக்கட்டும்.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் அளித்த விளக்கத்தை இங்கே கூடுதல் தகவலாகப் பதிவு செய்கிறோம்

  1. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?

இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும் கூறப்படுகிறது.

ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப்பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்தபோது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

அப்படியானால் ஒரு ஜோடியை மட்டும் படைக்காமல் இரண்டு ஜோடி மனிதர்களைப் படைத்து இதைத் தவிர்க்க இயலுமே என்று சந்தேகம் எழலாம்.

இறைவன் ஒரு ஜோடி மூலம் மனித குலத்தைப் பரவச் செய்ததற்கு முக்கியமான காரணம் உள்ளது.

ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஒரே தாய் தந்தையிலிருந்து உருவானால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வாசல் முற்றாக அடைக்கப்படும். சகோதரத்துவ உணர்வையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள் என்ற சமத்துவத்தையும் இது ஏற்படுத்துகின்றது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...