கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?

கேள்வி :

கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா?

ஹபீபுர்ரஹ்மான்

பதில் :

கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

السنن الكبرى للنسائي– كتاب عمل اليوم والليلة

أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஆனால் சிலர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹம்மது பின் ஹிம்யர் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவரைத் தவிர இதில் இடம்பெறும் மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இவர் விஷயத்தில் மட்டும் இவர் பலவீனமானவர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அறிஞர்களின் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் சேர்த்துப் பார்க்கையில் இவர்களின் இந்த முடிவு தவறானது என்பதை அறியலாம்.

முஹம்மது பின் ஹிம்யர் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான், யஹ்யா பின் மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் நான் நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை என அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார். நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் இவரிடம் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று சான்றளித்துள்ளார்.

இவர் விஷயத்தில் இரண்டு அறிஞர்கள் மட்டுமே குறை கூறியுள்ளனர். அபூஹாதிம் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அபூஹாதிமைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர் ஆவார். இத்துடன் பலவீனத்துக்குரிய காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர் குறித்து இவர் செய்துள்ள விமர்சனம் பல அறிஞர்களின் கூற்றுக்கு முரணாகவும், தெளிவில்லாமலும் இருப்பதால் இதை ஏற்க இயலாது. இவர் குறை கூறுவதில் நடுநிலை பேணாதவர் என்பதால் இவருடைய கூற்றை விட்டுவிட்டு மேற்கண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பதே சரி.

அடுத்து யஃகூப் பின் சுஃப்யான் என்பவர் முஹம்மது பின் ஹிம்யர் வலிமையானவர் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இந்த அறிஞரின் கூற்றையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

ஆனால் இந்த அறிஞர் செய்துள்ள விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனமடைய மாட்டார். மேலும் இவர் குறித்து நல்ல விதமாகக் கூறியுள்ள அறிஞர்களின் கருத்துக்கு முரணில்லாத வகையில் யஃகூப் பின் சுஃப்யான் அவர்களின் விமர்சனத்தை நாம் புரிந்து கொள்ள இயலும்.

லைஸ பில் கவீ என்ற அரபுச் சொல்லை இவர் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் மோசமான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது. மாறாக இலேசான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொண்டது என்று ஹதீஸ் கலை நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஹதீஸ் கலையில் உறுதியான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படுவதைப் போன்று இலேசான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகளும் ஏற்கப்படும். முரண்பாடுகள் வரும் போதே இத்தகையவர்களின் அறிவிப்புகள் பின்னுக்குத் தள்ளப்படும்.

உறுதியான மனனத் தன்மை கொண்டவர்களுக்கு அடுத்த அந்தஸ்தை இலேசான மனனத் தன்மை கொண்டவர்கள் பெறுகின்றனர்.

அறிவிப்பாளர் ஹிம்யர் முதல் தரத்தைப் பெற்றவர் அல்ல. இரண்டாம் தரத்தைப் பெற்றவர் என்ற கருத்தில் தான் யஃகூப் பின் சுஃப்யான் விமர்சனம் செய்துள்ளார்.

இவரிடம் பிரச்சனை இல்லை என நஸாயீ மற்றும் தாரகுத்னீ ஆகியோர் செய்த விமர்சனமும் இந்த அடைப்படையில் உள்ளவை தான். எனவே இவருடைய விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனராக மாட்டார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் இன்னொரு தவறான வாதத்தையும் வைக்கின்றனர். இவர் தனித்து அறிவித்த எந்தச் செய்தியையும் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்யவில்லை என்பதாலும் இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர்.

இது மிகத் தவறான வாதமாகும். ஒரு இமாம் ஒரு அறிவிப்பாளரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் அந்த அறிவிப்பாளர் பலவீனராகி விடுவார் என ஹதீஸ் கலையில் எங்கும் சொல்லப்படவில்லை. ஹதீஸைத் தொகுப்பவர் எத்தனையோ காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து பதிவு செய்யாமல் இருப்பார். பலவீனம் என்பது தான் இதற்குக் காரணம் என  சொல்ல முடியும்?

ஏனென்றால் புகாரி அவர்கள் தனது நூலில் ஒருவரின் செய்தியைப் பதிவு செய்வதற்கு தேவையான நிபந்தனைகளைக் காட்டிலும் கூடுதலாக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். எத்தனையோ நம்பகமானவர்கள் இந்தக் கூடுதல் நிபந்தனைக்கு உட்படவில்லை என்பதால் அவர்களிடமிருந்து புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா?

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அனைத்து அறிஞர்களின் விமர்சனங்களையும் படித்துவிட்டு அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தாலும் அவற்றிலிருந்து தனது முடிவை சுருக்கமாக ஒரு வரியில் தெரிவிப்பார். இந்த அறிஞர் அறிவிப்பாளர் ஹிம்யரைப் பற்றி ளயீஃப் (பலவீனமானவர்) என்று குறிப்பிடாமல் நம்பிக்கைக்குரியவர். இலேசான மனனத் தன்மை கொண்டவர் என்று சான்றளித்துள்ளார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் நல்லவிதமாக கூறிய கருத்துக்களே ஏற்புடையதாக இருக்கின்றது.

எனவே கடமையான தொழுகைக்குப் பின்னர் ஆயதுல் குர்ஸி ஓதுவது சுன்னத் ஆகும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...