ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.

– எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம்.

பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

எந்த ஒரு காரியமும் குற்றமாக எப்போது ஆகும்? இறைவன் தடுத்தால் அது குற்றமாகும். தடுக்காவிட்டால் அது குற்றமாக ஆகாது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதுபானமும், வட்டியும் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மதுபானம் அருந்தியவர்களாகவும், வட்டி வாங்கியவர் களாகவும் யாரேனும் மரணித்திருந்தால் அவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஏனெனில், தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மனித குலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்!

இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு கேள்வி கடவுள் மறுப்பாளர்களால் எழுப்பப்பட்டு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.

அதாவது ஆதம் என்ற ஆண், ஹவ்வா என்ற பெண் ஆகிய இருவர் மூலம் தான் மனித குலம் பெருகியதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள். கிறித்தவர்களும் அவ்வாறே கூறுகிறார்கள்.

அப்படியானால் உடன் பிறந்த அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் உடலுறவு கொண்டு இருப்பார்கள். இவ்வளவு கேவலமாக மனிதப் பிறப்பு பற்றி பேசும் உங்கள் கடவுள் யோக்கியனா?

இது தான் அந்த வாதத்தின் சாரம், அவர்கள் பக்கம் பக்கமாக எழுதியுள்ள அனைத்து வாதங்களும் இந்த ஒரு பாராவுக்குள் அடக்கமாகி விடும்.

இதில் முஸ்லிம் பெயர்களிலும் சிலர் பதிவிட்டு கிண்டல் அடிக்கும் கமாண்டுகளும் அடக்கம். ஆனால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் நாம் கருதுகிறோம்.

அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படையும், அறிவியல் ஞானமும் இல்லாமல் வளர்க்கப்பட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் இக்கேள்விக்கு விடையளிக்கும் கடமை நமக்கு உள்ளது.

மனித குலத்தின் தோற்றம் பற்றி உலகில் நிலவும் கருத்துக்கள் என்ன?

1 – பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் உருவானான் என்ற டார்வினின் கொள்கை கூறுகிறது.

(இதற்கு நிகரான மடமை வேறு இல்லை என்பதை கீழ்க்காணும் லிங்கில் விளக்கியுள்ளோம்.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை

(கடவுள் மறுப்பாளர் யாரும் இது குறித்து நம்மிடம் விவாதிக்க விரும்பினால் நாம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பின் துணை கொண்டு டார்வின் கொள்கை தவறு என்று நிரூபித்துக் காட்டுவோம்.)

டார்வின் கொள்கையை இவர்கள் ஏற்றாலும் இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் அதே கேள்விக்கும், கேலிக்கும் இவர்கள் உரியவர்களாகி விடுகின்றனர்.

பரிணாமக் கொள்கைப்படி மனிதனுக்கு முந்திய நிலை குரங்கு ஆகும். குரங்குகள் அம்மாவுடனும் புணரும். சகோதரியுடனும் புணரும். இந்தக் கேடுகெட்ட இனத்தின் வழித்தோன்றல் தான் மனிதன் என்று ஆகுமே? அது பரவாயில்லையா?

குரங்குக்கு முந்திய மற்ற உயிரினங்களின் நிலையும் இது தான். இஸ்லாத்தை எந்தக் காரணத்துக்காக இவர்கள் குறை கூறினார்களோ அதே காரணம் டார்வின் கொள்கையில் இன்னும் கேவலமாக உள்ளதே?

தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் பார்க்காத மிருகத்தில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது மட்டும் இவர்களுக்கு இனிக்கிறது.

2- இந்து மதக் கொள்கை

அடுத்து மனிதன் படைக்கப்பட்டது குறித்து இந்துக்களின் நம்பிக்கை.

கடவுளின் தலையில் இருந்து படைக்கப்பட்டவன்,

தோளில் இருந்து படைக்கப்பட்டவன்,

தொடையில் இருந்து படைக்கப்பட்டவன்,

பாதத்தில் இருந்து படைக்கப்பட்டவன்

என்று நான்கு வகையாக மனிதனைப் பிரிக்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை கடவுள் மறுப்பாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் ஏற்றாலும் இதே கேள்வி இருக்கவே செய்யும்.

மேற்கண்ட நான்கு நிலைகளில் படைக்கப்பட்டவர்களும் ஒரு ஜோடி தான். அனைவரும் கடவுளிடமிருந்து நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். இந்த நம்பிக்கைப்படியும் உடன் பிறப்புக்கள் மத்தியில் தான் துவக்கத்தில் இணைதல் ஏற்பட்டு இருக்கும்.

எனவே இந்த நம்பிக்கை உள்ளவர்களும் இக்கேள்வியைக் கேட்க முடியாது.

3 – ஜீனோம் மரபணு ஆய்வு

அடுத்ததாக இன்றைய ஜீனோம் என்ற மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தத்துவம். ஜீனோம் எனும் மரபணு ஆய்வு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட நவீன ஆய்வு குறித்து இந்தியா டுடேயில் ஜீனோம் ரகசியம் என்று சிறப்பிதழ் போடப்பட்டது

அந்த ஆய்வு கூறுவது தான் மனித குல உற்பத்தி குறித்து செய்யப்பட்ட இறுதியான ஆய்வு.

இந்த ஆய்வு என்ன கூறுகிறது?

உலக மக்கள் அனைவரும் ஒரு ஆப்ரிக்கத் தாய்க்கும், ஒரு ஆப்ரிக்கத் தந்தைக்கும் பிறந்தவர்கள் தான். அந்த ஒரு ஜோடியில் இருந்து தான் மனித குலம் பல்கிப் பெருகியது என்பது தான் அந்த ஆய்வு.

இப்போது முகனூல் போராளிகள் பகுத்தறிவாளர்கள் என்றால் நவீன மரபணு ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க வேண்டும்.

இஸ்லாத்தை மறுப்பது போல் இதை அவர்கள் மறுக்க முடியாது.

இன்று மரபணு ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆய்வின் முடிவு சொல்வது என்ன? இஸ்லாம் சொன்னதைத் தான் மரபணு ஆய்வும் அப்படியே சொல்கிறது.

அதாவது அண்ணன், தங்கைகள் வழியாகத் தான் மனித குலம் முதலில் பல்கிப் பெருகியது என்பது தான் அந்த உண்மை.

இக்கேள்வி கேட்போர் பகுத்தறிவாளர்கள் என்றால்

மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து பரவி உலகெங்கும் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை.

தகவல்: 28.7.2007 விடுதலை நாளிதழ்.

என்ற கட்டுரையைப் பார்க்கட்டும்

மனித இனத்தின் மூல இடமே ஆப்ரிக்கா தான்; மண்டை ஓடுகளை ஆய்வு செய்து பெற்ற உண்மை. _ தலைப்பு, மற்றும், உலக மனிதரின் தாய் ஓர் ஆப்ரிக்கப் பெண்

_தினமணி -_ அக்டோபர் 22, 1988.

இந்தக் கட்டுரையையும் வாசிக்கட்டும்.

பகுத்தறிவாளர்கள் ஏற்கும் உண்மை இணைய தளத்திலும் இந்தக் கண்டுபிடிப்பைக் காணலாம்.

https://www.unmaionline.com/…/1420-where-has-developed-the-w…

ஆக இஸ்லாம்

கிறித்தவம்

டார்வினிசம்

இந்துமதம்

நவீன கண்டுபிடிப்பான ஜீனோம் மரபணு

ஆகிய எந்தக் கோட்பாட்டை ஏற்றாலும் அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் துவக்கத்தில் உடலுறவு நிகழ்ந்துள்ளது என்பது உறுதியாகிறது.

இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டார்களோ அந்தக் கேள்வி எழ முடியாத வேறு கோட்பாட்டை ஆதாரத்துடன் நிறுவிக் காட்டட்டும்

அல்லது வாய் மூடி மவுனம் காக்கட்டும்.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் அளித்த விளக்கத்தை இங்கே கூடுதல் தகவலாகப் பதிவு செய்கிறோம்

  1. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?

இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும் கூறப்படுகிறது.

ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப்பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்தபோது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

அப்படியானால் ஒரு ஜோடியை மட்டும் படைக்காமல் இரண்டு ஜோடி மனிதர்களைப் படைத்து இதைத் தவிர்க்க இயலுமே என்று சந்தேகம் எழலாம்.

இறைவன் ஒரு ஜோடி மூலம் மனித குலத்தைப் பரவச் செய்ததற்கு முக்கியமான காரணம் உள்ளது.

ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஒரே தாய் தந்தையிலிருந்து உருவானால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வாசல் முற்றாக அடைக்கப்படும். சகோதரத்துவ உணர்வையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள் என்ற சமத்துவத்தையும் இது ஏற்படுத்துகின்றது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...