முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கு அஞ்சுவது ஏன்?

கேள்வி: உலக மகா ரவுடி, கொள்ளைக்கார நாடான அமெரிக்கா தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் மக்களை கொன்று குவித்துக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரானையும் ருசி பார்க்க துடிக்கிறதே? இதை மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டிக்காதது ஏன்? அமெரிக்காவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற ஈரானுக்குத் திறமை உள்ளதா?

– முகம்மது அபுபக்கர் சித்தீக், ஷிமோகா, கர்நாடகா.

உலகின் வலிமையான ஒரே நாடாக இன்று அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டால், ஏதாவது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு அந்த நாட்டைச் சூறையாடும் கொள்ளைக்கார நாடாக அமெரிக்கா இருப்பதாலும், கொள்ளை அடிப்பதில் வீசப்படும் எலும்புத் துண்டுக்காக பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகள் துணை நிற்பதாலும் முஸ்லிம் நாடுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுக்கு அஞ்சுகின்றன.

உலகில் எந்த நாடும் அமெரிக்காவுடன் மோதி வெல்ல முடியாது என்பது தான் இன்றைய நிலைமை.

ஈரான் என்ன? சீனாவாக இருந்தாலும், ரஷ்யாவாக இருந்தாலும் அமெரிக்காவைப் போரில் வெல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம்.

எந்த நாட்டுடன் அமெரிக்கா சண்டை நடத்துவதாக இருந்தாலும் அந்த நாட்டை மிகப்பெரிய சக்தியாக முதலில் சித்தரித்துக் காட்டும். ஒன்றுமில்லாத பலவீனமான நாட்டுடன் போர் செய்வதை உலகம் கேவலமாகக் கருதக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுக்கு நிகரான சக்தியாக பலவீனமான நாட்டை பிரம்மாண்டமாக்கிக் காட்டும்.

அமெரிக்காவே நம்மைப் பார்த்துப் பயப்படுகின்றது என்ற இறுமாப்பை அந்த நாட்டுக்கு ஏற்படுத்திவிட்டு தனக்குச் சமமான எதிரியுடன் போரிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அந்த நாட்டை வெற்றி கொள்ளும்.

சதாம் உசேனை இப்படித்தான் அமெரிக்காவுக்கு சரியான போட்டியாளராகச் சித்தரித்துக் காட்டிய பிறகே இராக்கை அழித்தது. உண்மையில் அன்றைய இராக்கை இலங்கை கூட வென்று விடும் அளவுக்கு பலவீனமாக இருந்தது. துருப்பிடித்த ராணுவ விமானம் கூட இல்லாத இராக்கை மிகப்பெரும் நாசகார ஆயுதங்கள் வைத்துள்ளதாகக் காட்டி அதை ஒழித்து விட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டது அமெரிக்கா.

ஆனால் வியட்நாம், ஆப்கான், ஈராக் என அமெரிக்கா நடத்திய ஒவ்வொரு போருக்குப் பிறகும் அதன் பொருளாதார பலம் குறைந்து வருகிறது. ஈரானுடன் இன்னொரு போர் நடந்தால் மேலும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் அமெரிக்கா வெற்று எச்சரிக்கை விடுகிறதே தவிர போரில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால் அல்ல!

அமெரிக்கா மேலும் மேலும் பலவீனப்படும் வரை அல்லது அமெரிக்காவுக்கு நிகராக அதை மிஞ்சக்கூடிய இன்னொரு வல்லரசு உருவாகும் வரை இது தான் நிலைமை. எனவே முஸ்லிம் நாடுகள் இதை உணர்ந்து மவுனம் சாதிப்பதைக் குறை கூறக்கூடாது.

தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவைக் கண்டிக்க இயலாத நிலை முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்படுவதுண்டு. உணர்ச்சி வசப்படும் சிலரது விருப்பத்துக்காக தங்கள் நாட்டை இன்னொரு இராக்காக ஆக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இதற்குக் காரணம். அந்த இடத்தில் நீங்களோ நாமோ இருந்தாலும் அந்த முடிவைத்தான் எடுக்க முடியும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரியின் பலத்தைக் கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகளை நாமும் எடுக்கத் தான் செய்கிறோம்.

சதாம் உசேன் போல் நிஜாதியும் ஏமாந்து விடக்கூடாது என்பதே நமது விருப்பம்.

உணர்வு 16:14

குறிப்பு : தற்போது அமஎரிக்காவை எதிர்கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பத்திலும் ஆயுத உற்பத்தியிலும் முன்னேறி உள்ளது. உக்ரேனை தாக்க நவீன ட்ரோன்களை ரஷயாவுக்கு ஈரான் வழங்கியுள்ளது. எனவே இரானுடன் மோதினால் அமரிக்கா வெற்றி பெற முடியாது என்பது இன்றைய நிலமை

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...