கடமையான தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதவேண்டுமா?

கேள்வி :

கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா?

ஹபீபுர்ரஹ்மான்

பதில் :

கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுவதைச் சிறப்பித்து பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியை இமாம் நஸாயீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

السنن الكبرى للنسائي– كتاب عمل اليوم والليلة

أخبرنا الحسين بن بشر ، بطرسوس ، كتبنا عنه قال : حدثنا محمد بن حمير قال : حدثنا محمد بن زياد ، عن أبي أمامة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஆனால் சிலர் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹம்மது பின் ஹிம்யர் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவரைத் தவிர இதில் இடம்பெறும் மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இவர் விஷயத்தில் மட்டும் இவர் பலவீனமானவர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அறிஞர்களின் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் சேர்த்துப் பார்க்கையில் இவர்களின் இந்த முடிவு தவறானது என்பதை அறியலாம்.

முஹம்மது பின் ஹிம்யர் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான், யஹ்யா பின் மயீன் மற்றும் துஹைம் ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் நான் நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை என அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார். நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் இவரிடம் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். இப்னு ஹஜர் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று சான்றளித்துள்ளார்.

இவர் விஷயத்தில் இரண்டு அறிஞர்கள் மட்டுமே குறை கூறியுள்ளனர். அபூஹாதிம் இவரை ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அபூஹாதிமைப் பொறுத்தவரை அறிவிப்பாளர்களைக் குறை கூறுவதில் கடினப் போக்குள்ளவர் ஆவார். இத்துடன் பலவீனத்துக்குரிய காரணத்தையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்த அறிவிப்பாளர் குறித்து இவர் செய்துள்ள விமர்சனம் பல அறிஞர்களின் கூற்றுக்கு முரணாகவும், தெளிவில்லாமலும் இருப்பதால் இதை ஏற்க இயலாது. இவர் குறை கூறுவதில் நடுநிலை பேணாதவர் என்பதால் இவருடைய கூற்றை விட்டுவிட்டு மேற்கண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பதே சரி.

அடுத்து யஃகூப் பின் சுஃப்யான் என்பவர் முஹம்மது பின் ஹிம்யர் வலிமையானவர் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இந்த அறிஞரின் கூற்றையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

ஆனால் இந்த அறிஞர் செய்துள்ள விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனமடைய மாட்டார். மேலும் இவர் குறித்து நல்ல விதமாகக் கூறியுள்ள அறிஞர்களின் கருத்துக்கு முரணில்லாத வகையில் யஃகூப் பின் சுஃப்யான் அவர்களின் விமர்சனத்தை நாம் புரிந்து கொள்ள இயலும்.

லைஸ பில் கவீ என்ற அரபுச் சொல்லை இவர் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் மோசமான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது. மாறாக இலேசான மனனத் தன்மையுள்ளவர் என்ற அர்த்தத்தைக் கொண்டது என்று ஹதீஸ் கலை நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஹதீஸ் கலையில் உறுதியான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகள் ஏற்கப்படுவதைப் போன்று இலேசான மனனத் தன்மையுள்ளவர்களின் அறிவிப்புகளும் ஏற்கப்படும். முரண்பாடுகள் வரும் போதே இத்தகையவர்களின் அறிவிப்புகள் பின்னுக்குத் தள்ளப்படும்.

உறுதியான மனனத் தன்மை கொண்டவர்களுக்கு அடுத்த அந்தஸ்தை இலேசான மனனத் தன்மை கொண்டவர்கள் பெறுகின்றனர்.

அறிவிப்பாளர் ஹிம்யர் முதல் தரத்தைப் பெற்றவர் அல்ல. இரண்டாம் தரத்தைப் பெற்றவர் என்ற கருத்தில் தான் யஃகூப் பின் சுஃப்யான் விமர்சனம் செய்துள்ளார்.

இவரிடம் பிரச்சனை இல்லை என நஸாயீ மற்றும் தாரகுத்னீ ஆகியோர் செய்த விமர்சனமும் இந்த அடைப்படையில் உள்ளவை தான். எனவே இவருடைய விமர்சனத்தால் அறிவிப்பாளர் ஹிம்யர் பலவீனராக மாட்டார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் இன்னொரு தவறான வாதத்தையும் வைக்கின்றனர். இவர் தனித்து அறிவித்த எந்தச் செய்தியையும் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்யவில்லை என்பதாலும் இவர் பலவீனமானவர் என்று வாதிடுகின்றனர்.

இது மிகத் தவறான வாதமாகும். ஒரு இமாம் ஒரு அறிவிப்பாளரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் அந்த அறிவிப்பாளர் பலவீனராகி விடுவார் என ஹதீஸ் கலையில் எங்கும் சொல்லப்படவில்லை. ஹதீஸைத் தொகுப்பவர் எத்தனையோ காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து பதிவு செய்யாமல் இருப்பார். பலவீனம் என்பது தான் இதற்குக் காரணம் என  சொல்ல முடியும்?

ஏனென்றால் புகாரி அவர்கள் தனது நூலில் ஒருவரின் செய்தியைப் பதிவு செய்வதற்கு தேவையான நிபந்தனைகளைக் காட்டிலும் கூடுதலாக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்கள். எத்தனையோ நம்பகமானவர்கள் இந்தக் கூடுதல் நிபந்தனைக்கு உட்படவில்லை என்பதால் அவர்களிடமிருந்து புகாரி அவர்கள் பதிவு செய்யவில்லை. எனவே இவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா?

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் அனைத்து அறிஞர்களின் விமர்சனங்களையும் படித்துவிட்டு அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தாலும் அவற்றிலிருந்து தனது முடிவை சுருக்கமாக ஒரு வரியில் தெரிவிப்பார். இந்த அறிஞர் அறிவிப்பாளர் ஹிம்யரைப் பற்றி ளயீஃப் (பலவீனமானவர்) என்று குறிப்பிடாமல் நம்பிக்கைக்குரியவர். இலேசான மனனத் தன்மை கொண்டவர் என்று சான்றளித்துள்ளார்.

அறிவிப்பாளர் ஹிம்யர் விஷயத்தில் அதிகமான அறிஞர்கள் நல்லவிதமாக கூறிய கருத்துக்களே ஏற்புடையதாக இருக்கின்றது.

எனவே கடமையான தொழுகைக்குப் பின்னர் ஆயதுல் குர்ஸி ஓதுவது சுன்னத் ஆகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...